news-details
திருத்தந்தையின் முழக்கம்
திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் (14.06.2026)

வழிபாட்டு முறையின் சடங்குகளும் அடையாளங்களும் வெறும் வெளிப்புறச் செயல்கள் அல்ல; அவை இறைவனின் அருளை அனுபவிக்கவும், கிறிஸ்துவோடு ஆழமான உறவில் வளரவும் நம்மை வழிநடத்தும் புனிதப் பாதைகளாகும்.” 

ஜூன் 3. பொதுமறைக்கல்வி உரை

சுயநலமற்ற சேவையின் வழியாக, இளைஞர்கள் ஒருமைப்பாட்டு பொறுப்புணர்வையும், பிறர்மீது அக்கறை கொள்வதையும் கற்றுக்கொள்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் அன்பு, வரவேற்பு மற்றும் அமைதிக்கான சாட்சிகளாக மாறுகிறார்கள்.”

ஜூன் 1, ஐரோப்பிய கத்தோலிக்க வழிகாட்டிகள், சாரணர்கள் சங்கத்தின் 50-வது ஆண்டு பொன்விழாச் செய்தி

மூவோர் இறைவனின் மறைபொருள், மனிதகுலம் ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழவும், நல்லுறவை வளர்க்கவும், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தவுமே படைக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.” 

மே 31, மூவேளை இறைவேண்டல் உரை

கல்வி என்பது தனிமனிதவாதத்தை வளர்க்காமல், இணக்கமான உறவையும் உலகளாவிய ஒருமைப்பாட்டையும் உருவாக்கவேண்டும்.” 

மே 30, ’ஐபெரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பின் உறுப்பினர்கள் சந்திப்பு

செபமாலை வழியாக இயேசுவைத் தியானிக்கும் நாம், அமைதி என்பது வெறும் கற்பனையல்ல; அது நீதி, அன்பு மற்றும் மனிதநேயத்தின் அடிப்படையில் அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய கடமை என்பதை உணரவேண்டும்.”

மே 29, வத்திக்கானில் செபமாலை வழிபாட்டுச் செய்தி