அறுபது ஆண்டுகளுக்கு முன் மருத்துவர் என்றால் அவரின் கழுத்தைச் சுற்றி இதயத் துடிப்புமானி, மேஜையில் ஜூரமானி, அருகில் கொதிநீரில் ஊசிக் குழலிருக்கும் (syringe) காட்சியை இன்று வாழும் இரண்டாம் உலகப்போர் தலைமுறையினர் நன்கு அறிவர். இன்று நாம் பயன்படுத்தும் எக்ஸ்ரே, இரத்த அழுத்தமானி, எம்.ஆர்.ஐ. போன்ற பல நவீன மருத்துவக் கருவிகள் பெரிய மருத்துவ நிலையங்களில்தான் இருந்தன.
அன்று
மருத்துவச் சிகிச்சை
என்பது வசதி
படைத்தோருக்கும், காலமெடுக்கும்
செயல்முறையுமாயிருந்தது. மருத்துவம்
அனைவருக்குமானதும் துல்லியமும்
துரிதமுமாக மாறியதற்குக்
காரணம், இன்றைய
ஏ.ஐ.
தொழில்நுட்பம் என்பதில்
எவ்விதச் சந்தேகமுமில்லை.
ஒரு தடுப்பு
மருந்தை (vaccine) உருவாக்க, பல
வருடங்கள் எடுப்பது
நடைமுறை. ஆனால்,
2020-இல் உலக
அளவில் தீயாக
உருவெடுத்த ‘கோவிட்-19’
(COVID-19)
நோயை 2021-லேயே கட்டுப்படுத்த
முடிந்ததற்குக் காரணம்
ஏ.ஐ.
தொழில்நுட்பமே என்று
கூறுகிறார் புகழ்பெற்ற
ஏ.ஐ.
விஞ்ஞானி ரே-கர்ஸ்வெல்.
மருத்துவ உலகில்
நாளுக்கு நாள்
புதியவைகளை உருவாக்கும்
ஏ.ஐ.
நம் வாழ்வின்
ஓர் அங்கமாகிவிட்டது.
வரும் நாள்களில்
சிகிச்சைகள், கருவிகள்
மூலம் நோய்களைக்
கண்டறிதல், ஆராய்ச்சி
என்று பல
பிரிவுகளில் ஏ.ஐ.யின் பெரும்
புரட்சியைக் காண
இருக்கிறோம்.
தரவுகளும்
ஏ.ஐ.
விஞ்ஞானமும்
மருத்துவத்துறையில் நோய்
சார்ந்த தரவுகளுக்கான
ஸ்கேன் அறிக்கைகள்,
இரத்தப் பரிசோதனைகள்
மற்றும் மரபணுத்
தகவல்கள் இன்று
மலைபோல் குவிந்துள்ளன.
இத்தரவுகளைப் பயன்படுத்தி
நோயாளிகளுக்கான சிகிச்சை
முறை பாரம்பரிய
அணுகுமுறையில்தான் இருந்தன.
இன்று அனைவருக்கும்
ஒரே மாதிரியான
சிகிச்சை என்ற
பழைய முறையிலிருந்து
விலகி, துல்லிய
மருத்துவம் (Precision
Medicine) எனும் புதிய
சகாப்தத்தை ஏ.ஐ. உருவாக்கியுள்ளது.
ஒரு மருத்துவர்
தன் வாழ்நாளில்
பல்லாயிரக்கணக்கான நோயாளிகளைச்
சந்தித்து, தரவுகள்
மூலம் அறிவதைவிட,
ஏ.ஐ.யின் கற்கும்
இயந்திரம் (Machine
Learning) அல்காரிதம்கள் மூலம்
சில நொடிகளில்
பல கோடித்
தரவுகளை அலசி
ஆராய்ந்து, தேர்ந்த
சிகிச்சை அளிக்க
முடிகிறது.
ஒவ்வொருவரின் மனித
உடலும், மருந்துகளுக்கு
வெவ்வேறு விதமாக
வினைபுரிவது இயல்பு.
இதற்குக் காரணமான
டி.என்.ஏ.யை ஏ.ஐ.யின் இயந்திரச்
சிந்தனை (Deep
Learning) தொழில்நுட்பம் ஆய்வு
செய்து, ‘எதிர்காலத்தில்
என்ன என்ன
நோய் வர
வாய்ப்புள்ளது?’ என்பதை
முன்கூட்டியே கணிக்கவும்,
அதற்கான மருத்துவம்
அளிக்கவும் முடிகிறது.
இன்று பெருவாரியான
மனிதரைத் தாக்கும்
நோய்களான இதயநோய்,
புற்று, நீரிழிவு,
நுரையீரல் தொற்று,
மறதி நோய்
போன்றவைகளை ஆரம்பநிலையில்
கண்டறிய, உயிர்ச்சேதங்கள் - செலவீனங்களைத் தவிர்க்க
ஏ.ஐ.
தொழில்நுட்பம் பெரிதும்
உதவுகிறது.
பரம்பரை
நோய்கள் - ஏ.ஐ.
மரபணு வரிசைப்படுத்தல்
(sequence) என்பது ஓர்
உயிரினத்தின் (organism) அனைத்துப்
பரம்பரைச் செல்
வகையை முறைப்படி
அறிதல். ஓர்
ஆய்வின்படி, மரபணு
வரிசைப் படுத்தலும்
ஏ.ஐ.யும் இணைந்து
இப்போது ஒரு
குழந்தையின் ஜீன்
(gene) சம்பந்த நோய்களை
24 மணி நேரத்திற்குள்
அறிந்து, தகுந்த
சிகிச்சை அளிப்பது
மருத்துவத் துறையின் புரட்சியாகக்
கருதப்படுகிறது.
மரபணு (Gene)
தரவுகளிலிருந்து ஏ.ஐ. முறையில் நூறு
மடங்கு துரிதமாகவும்
துல்லியமாகவும் ஆய்ந்தறியலாம்
என்பதால், உலகளாவிய
‘ஜெனோம் நிறுவனங்கள்’
(Global genomic
firms), ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் இந்த
ஆராய்ச்சியை மேற்கொள்ள
முற்படுவதாகவும் கூறப்படுகிறது.
ஏ.ஐ.யும்
மரபணுத்தொகையும் (Genome)
மரபணு (Gene)
என்பது மனித
வாரிசின் (hereditary) குறியீடு
ஜெனடிக்ஸ் (Genetics)
என்பது ஜீன்,
அதன் வேறுபாடு
பற்றி ஆராயும்
உயிரியல் பிரிவு.
ஜெனடிக்ஸ் ஆராய்ச்சிக்கு
ஒரு செல்லில்
அடங்கியுள்ள டி.என்.ஏ.க்களின்
(DNA) தொகுப்பான ஜெனோம்
தரவுகள் உதவுகின்றன.
‘ஜெனோமிக்ஸ்’ Genomics) என்பது
மனிதர்களின் ஜீன்கள்,
அவற்றின் தொடர்பு,
சுற்றுச்சூழலோடு இணக்கம்
என்பதன் ஆய்வு.
இன்று ஏ.ஐ., ஜெனோமிக்ஸ், விஞ்ஞானம்
இரண்டும் இணைந்து
செயல்படுதல் இந்நூற்றாண்டின்
மிகப்பெரிய மாற்றத்தின்
தொடக்கமாகக் கருதப்படுகிறது.
இதனால் உலகளவில்
மருத்துவ ஆராய்ச்சி,
சுகாதாரம், வேளாண்மை,
சமுதாயம் என்று
பல திசைகளில்
வியக்கும்படியான மாற்றங்கள்
ஏற்படலாம் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.
ChatGPT போன்ற பேசும்
இயந்திர மாடல்
(LLMs) உரையை வாசிப்பதைப்
போலவே, மரபணு
குறியீடுகளையும் வாசிக்கக்கூடிய
ஒரு ஏ.ஐ. கருவியை ஒரேகான்
பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மரபணுவை
ஸ்கேன் செய்யும்
இந்த முதல்
கணினி மாடல்,
மரபணு சோடிகளின்
காலத்தைப் பின்னோக்கி
ஆய்ந்து, ‘பொதுவான
மூதாதையர் யார்?’
என்பதைக் கண்டறிய
உதவுதல், இது
வரை மறந்துவிட்ட
வரலாற்றுப் புதையல்களைத்
தோண்டும் கருவியாக
இருக்கும் என்று
கருதப்படுகிறது.
மருத்துவத்துறையில்
ஏ.ஐ.
(AI in Medicine)
மருத்துவத்துறையில் நோயாளிக்குச்
சரியான மருந்தைக்
கொடுப்பது அடிப்படை.
இன்று உலகில்
பாரம்பரிய நோய்கள்
மட்டுமன்றி, புதிய
நோய்களுக்குப் பஞ்சமில்லை
என்ற நாள்களில்
வாழ்கிறோம். பாரம்பரிய
முறையில் ஒரு
புதிய மூலக்கூறைக்
(Molecule) கண்டுபிடித்து,
அது நோய்க்கு
எதிராகச் செயல்படுமா?
எனச் சோதித்து
மருந்தினைக் கண்டறிய
எடுக்கும் கால
அளவும் (human hours),
அதற்கான செலவும்
எவ்வளவு என்று
கணக்கிட முடியாத
சூழலில் ஒரு
மிகப்பெரிய புரட்சியை
ஏ.ஐ.
ஏற்படுத்தி வருகிறது.
ஆயிரக்கணக்கான மூலக்கூறுகளை
நொடிகளில் பகுப்பாய்வு
செய்து, எது
சிறந்த பலனைத்
தரும் என்று
ஏ.ஐ.
மூலம் அறியப்படுகிறது.
உதாரணமாக, 2001-ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில்
உருவெடுத்த ‘எபோலா’
என்ற பெருந்தொற்று
நோயைக் குணப்படுத்த
ஏற்கெனவே பயன்பாட்டிலிருந்த மருந்துகளில் எது
இந்நோய்க்கு எதிராகச்
செயல்படும் என்பதை
ஏ.ஐ.
மிகக் குறுகிய
காலத்தில் கண்டறிந்து
தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தியதை எடுத்துக்காட்டாகக் கூறப்படுகிறது.
மருத்துவர்களின் அறிவாற்றலோடு,
ஏ.ஐ.-யின் வேகமும்
சேரும்போது, எதிர்காலத்தில்
குணப்படுத்த முடியாத
பல நோய்களுக்குக்
குறைந்த விலையில்
மருந்துகள் கிடைக்கவும்,
மனிதர்களைப் போன்றே
சிந்தித்து மிகக்
குறைந்த நேரத்தில்
தரவுகளைப் பகுப்பாய்வு
செய்யும் ஏ.ஐ. மருத்துவத்துறையின் வலது
கரமாக விளங்கும்
என்று உணரப்படுகிறது.
ஏ.ஐ.
கொண்டு இயங்கும்
ரோபோ தானியங்கி
முறைகள் அறுவை
சிகிச்சை, நோய்
கண்டறிதல், நோயாளிகளைக்
கண்காணித்தல் (patient monitoring)
என்று பல
பிரிவுகளில் செயலாற்றத்
தொடங்கிவிட்டன. மருத்துவரே
100% தன்
கட்டுப்பாட்டில் இயக்கும்
ரோபோ சிகிச்சை
‘டா வின்சி
அறுவை சிகிச்சை
முறை’ (Da
Vinci surgical system) எனப்படுகிறது.
மருத்துவர்கள் மிகத்
துல்லியமாக அறுவை
சிகிச்சை மேற்கொள்ள
உதவும் இம்முறை,
ஏ.ஐ.யின் இயந்திரச்
சிந்தனை தொழில்நுட்பத்தினால் செயல்படுகிறது. நோயாளிகளின்
பழைய மற்றும்
கிடைக்கும் அன்றாடத்
தரவுகளைக் கொண்டு,
முன்கணிப்பின் மூலம்
சிகிச்சையின் போக்கை
அறியவும் உயர்தர
ஏ.ஐ.
சாதனங்கள் மூலம்
சிகிச்சை பெறுபவரைத்
தொடர்ந்து 24 மணி நேரமும் ஓய்வின்றித்
தொடர்ந்து கண்காணிக்கவும்
துணையாயிருப்பது இதன்
தனிச்சிறப்பு.
ரேடியோலாஜி (Radiology),
இதயம் சம்பந்த
நோய்கள், புற்று
சம்பந்த நோய்கள்
(oncology), கதிர்வீச்சு சிகிச்சை
(Radiation therapy), எம்.ஆர்.ஐ. ஸ்கேன் (MRI using DL models), தீவிரச் சிகிச்சை (ICU Care) என்று பல
மருத்துவப் பிரிவுகளில்
ஏ.ஐ.யின் பங்களிப்பைச்
கூறிக்கொண்டே போகலாம்.
மேற்கூறிய தொழில்நுட்பங்கள் இன்னும் பல
அரிய சாதனைகளைப்
புரியவிருக்கின்றன. இதனால்
பயனடைய நம்மைத்
தயார்படுத்திக் கொள்வோம்.