news-details
வத்திக்கான் செய்திகள்
“அதிக அன்போடு இறைநகரைக் கட்டியெழுப்புங்கள்”

பிரேசிலின் போர்ட்டலேசா நகரில் ஜூலை 22 முதல் 26 வரை நடைபெற்றஅல்லேலூயாகத்தோலிக்க இசை விழாவில் பங்கேற்ற இளையோருக்குத் திருத்தந்தை லியோ அனுப்பிய சிறப்பு காணொளிச் செய்தியில், தூய ஆவியாரின் வல்லமையால் தங்களின் இளமைப் பருவத்தை நற்செய்தி அறிவிப்பின் ஆற்றலாக மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், “ஒவ்வொருவரும் நாம் பெரிதும் விரும்பும் அமைதியின் நகரை அல்லது புனித அகஸ்டின் கூறியதுபோல இறைவனின் நகரைக் கட்டியெழுப்பும் வாழும் கற்களாக மாறவேண்டும்என்று ஊக்கப்படுத்தியுள்ளார்.

நமது ஆழமான விருப்பங்களுக்குப் பதிலளிப்பவர் இயேசுவே என்பதை உலகிற்கு அறிவிக்கவேண்டும். கிறிஸ்து இல்லாத வாழ்வு அருளற்ற வாழ்வு என்பதைத் துணிவோடு பிரகடனம் செய்வோம்எனவும் அழைப்பு விடுத்துள்ளார். அவ்வாறே, செபத்தின் மூலம் நம்பிக்கைச் சுடரைத் தொடர்ந்து எரிய வைக்கவேண்டும் என்றும், சமூக ஊடகங்களையும் செயற்கை நுண்ணறிவையும் மிதத்தோடும் ஒழுக்கத்தோடும் நல்வழியில் பயன்படுத்த புனித கார்லோ அகுத்திஸை முன்மாதிரியாகக் கொள்ளுமாறும் இளையோருக்குத் திருத்தந்தை அறிவுறுத்தியுள்ளார்.