news-details
கவிதை
வாழ்வுக்கான பேரணி

பேரணி இது பேரணி

வாழ்வுக்கான பேரணியில்

வாழ்வியலைப் போற்றி

வாஞ்சையுடன் நடந்திடுவோம்!

சூது நிறைந்தே சூழ்ந்தாலும்

சூழ்ச்சி வெல்ல அணி செய்வோமே!

கருக்கலைப்பு என்னும்

காலக் கொடுமையை உணர்த்தியே

காரிருளை அகற்றியே ஒளியில் மிளிர

அறத்தை விதைத்து வாழ்ந்திடுவோமே!

அன்பினைச் சுவைக்க

ஏங்கும் இதயங்களுக்கு

அரணாய் என்றும் நின்றிடுவோமே!

இறை நம்பிக்கையே

நம் கொடியாகப் பறக்கட்டுமே!

பகையறுக்கும் நற்குணமே

நம் படையாக நடைபோடட்டுமே!

உலகநீதியில் நில்லாது இறைநீதியில்

நிமிர்ந்தென்றும் நடந்திடுவோமே!

உயிரை மறுக்கும் ஒவ்வொரு செயலும்

வாழ்வின் வேதனை என்றே

கூக்குரலிடுவோமே!

உயிரை மதித்து வாழ்வில் சிறக்கும்

மனங்களாலே வானரசின்

விதைகளை விதைப்போமே!

இறைவன் தந்த இவ்வாழ்வில்

இருட்டு எண்ணங்கள்

இல்லாமல்

இனிதே செல்வோமே!

வாழ்வுக்கான பேரணியில்

வாகை காணவே

நடைபோடுவோமே!