1. கானாவூர் திருமணத்தில் மரியாவின் பரிந்துரையை நினைவுகூர்ந்த பிறகு, இரண்டாம் வத்திக்கான் சங்கமானது இயேசுவின் பொதுவாழ்வில் அவரது பங்களிப்பை இவ்வாறு வலியுறுத்துகின்றது:
“இயேசுவின் பொதுவாழ்வில் அவருடைய தாய் குறிப்பிடத்தக்க முறையில் தோன்றுகிறார். கலிலேயா நாட்டின் கானாவின் திருமண விருந்தில் மெசியாவாகிய இயேசுவிடம் இரக்கத்தோடு பரிந்துரைத்து, அவர் தம் முதல் அருளடையாளத்தைச் செய்யுமாறு (யோவா 2:1-11) தூண்டும் வேளையில் முதன்முறையாக மரியா தோன்றுகிறார். இரத்த உறவுகளையும், அவற்றின் பிணைப்புகளையும் கடந்ததே தமது ஆட்சி என்று கூறி, தம் அன்னை நம்பிக்கையோடு செய்து வந்தது போல் (லூக் 2:19) இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றவர் என கிறிஸ்து பறைசாற்றியபோது
(மாற் 3:35, லூக் 11:27-28), இவ்வார்த்தைகளை அவர் ஏற்றுக்கொண்டார்” (இறைத்திட்டத்தில்
திரு அவை, எண். 58).
பணியின்
தொடக்கத்தில் பாலஸ்தீனத் தெருக்களில் இயேசுவினுடைய பயணத்தின்பொழுதெல்லாம் அவரைப் பின்தொடர முடியாததொரு சூழலானது, மரியாவிற்கு அவரின்
மகனிடமிருந்தான பிரிவையே குறிக்கின்றது. அவரைப் பின்பற்றுவதற்கும், இறையாட்சியை அறிவிப்பதற்காக அர்ப்பணிப்பதற்கும் அவரின் சீடர்களுக்கு அவர் கொடுத்த நிபந்தனைகளிலிருந்தும் இயேசு வேண்டுமென்றே அவரது தாயிடமிருந்தும் மற்றும் குடும்பப் பாசத்திலிருந்த பிரிவைத் தேர்ந்தெடுக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.
மரியா இயேசுவின்
வார்த்தைகளை
நம்பிக்கையோடு
வாழ்ந்து
காட்டுகின்றார்
மரியா
சில நேரங்களில் அவரது மகனின் மறையுரையைக் கேட்டார். குறிப்பாக, நாசரேத்து தொழுகைக்கூடத்தில் எசாயாவின் இறைவார்த்தையை வாசித்தபிறகு இயேசு அந்த ஏட்டிற்கான விளக்கத்தைக் கொடுத்து, அது தன்னைப் பற்றியதே என்று கூறியபொழுது அங்கே மரியாவும் இருந்ததாகக் கருதலாம் (லூக் 4:18-30). “அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று...” என்ற வார்த்தைகளில் உள்ள பொதுவான வியப்பை அவரும் அனுபவித்த பிறகு, அங்கே கூடியிருந்தவர்கள் அனைவரும் அவருக்கு எதிராக நின்று அவரை அந்த இடத்தை விட்டு வெளியேறச் சொன்னதையும், அவரைக் கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதையும் மரியா கவனித்தபொழுது, அவர் எவ்வளவு துன்பத்தை அனுபவித்திருப்பார்! அந்த நேரத்தில் அந்த இடத்தில் நடந்தவைகளுக்கு நற்செய்தியாளர் லூக்காவின் வார்த்தைகளே சாட்சிகளாகும்: “அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்” (லூக்
4:29-30).
இந்த
நிகழ்விற்குப் பிறகு, மேலும் பல சோதனைகளும் இருக்கலாம்
என்பதை உணர்ந்தவராக மரியா, தாய் என்கின்ற முறையில் அவரது துன்பத்தையும் தனிமையையும் அவருக்கே அர்ப்பணித்து, தந்தையின் விருப்பத்திற்குத் தனது முழுமையான கீழ்ப்படிதலை உறுதிப்படுத்துகின்றார் மற்றும் ஆழப்படுத்துகின்றார்.
2. நற்செய்திகளின்படி,
மகனுடைய போதனைகளைக் கேட்பதற்கு மரியா வேறுபல சந்தர்ப்பங்களையும் பெற்றிருந்தார். முதலாவதாக, கானாவூர் திருமண நிகழ்விற்குப் பிறகு கப்பர்நாகூமில், “இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகூம் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்” (யோவா
2:12) என்று திருவிவிலியம் கூறுகின்றது. மேலும், பாஸ்கா விழாவைக் கொண்டாடுவதற்காக இயேசு தனது தந்தையின் வீடு என்றழைத்த மற்றும் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த எருசலேம் கோவிலுக்கு அவரைப் பின்தொடர்ந்து மரியாவும் ஒருவேளை சென்றிருக்கலாம் (யோவா 2:16-17). பெருங்
கூட்டத்தினிடையே அவரைக் கண்டதாலும் இயேசுவை மரியா நெருங்கமுடியாததாலும், இயேசுவிடம் மரியாவும் அவரது உறவினர்களும் அவரைக் காண அங்கு வந்துள்ளார்கள் என்று சொன்னவர்களிடம், “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்”
(லூக் 8:21) என்று அவர் சொன்ன பதிலையும் அவர் தன் காதுபடக் கேட்கின்றார்.
இந்த
வார்த்தைகளோடு கிறிஸ்து அவரது குடும்பத்தோடு உள்ள தொடர்பைக் கூறினாலும் கூட, அவருக்கு அவரின் தாயோடு இருக்கும் அந்த ஆழமான உறவை உறுதி செய்கின்ற வகையில் அவரை
மிகவும் புகழ்ந்து பேசுகின்றார். உண்மையில், அவரது மகனுக்குச் செவிகொடுப்பதில் மரியா இயேசுவின் அனைத்து வார்த்தைகளையும் ஏற்று நம்பிக்கையோடு அவற்றைப் பின்பற்றுகின்றார்.
பிரிவு
என்பது இதயத்தின் தூரத்தைக் குறிக்கவில்லை; அது, நாசரேத்தில் இயேசுவின் மறைவான வாழ்க்கையின்போது மரியா தன் மகனை ஆன்மிக ரீதியாகப் பின்பற்றியதையும், அவரது போதனைகளைக் கடைப்பிடித்துத் தியானித்ததையும் தடுக்கவில்லை. உண்மையில்,
மரியாவின் நம்பிக்கையானது இயேசுவுக்கு நடக்கவிருந்த பாடுகளோடு தொடர்புடைய, அவரது போதனைகளைப் புரிந்துகொள்ளத் தவறிய இயேசுவின் சீடர்களைக் காட்டிலும், அவருக்கு இயேசுவினுடைய வார்த்தைகளின் அர்த்தத்தின் ஆழத்தை உள்வாங்க உதவியது (மத் 16: 21-23; மத் 9:32; லூக் 9:45).
3. தன்
மகனின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களில் சிலரிடமிருந்து நிராகரிப்பை அனுபவித்த இயேசுவின் துயரத்தில் மரியாவும் பங்குகொண்டார். இந்த நிராகரிப்பு, அவர் நாசரேத்திற்குச் சென்ற பயணத்தின் போது முதன்முதலில் வெளிப்பட்டது; மேலும், மக்களுடைய தலைவர்களின் வார்த்தைகளிலும் மனப்பான்மைகளிலும் அது மேலும் மேலும் தெளிவாக வெளிப்பட்டது.
இந்த
வகையில், கன்னி மரியா அவரது வாழ்வில் தனது மகன் இயேசுவை நோக்கிய பலரது இத்தகைய விமர்சனங்களையும் அச்சுறுத்தல்களையும் அடிக்கடிக் கேள்விப்பட்டிருக்கலாம். நாசரேத்திலும்
கூட இயேசுவைத் தங்களது நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முயன்ற (யோவா 7:2-5) மற்றும் அவரது பணியைத் தடுத்து நிறுத்த முயன்ற (மாற் 3:21) உறவினர்கள் மற்றும் நண்பர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் அடிக்கடி மனவருத்தத்திற்கு உள்ளாகியிருக்கலாம்.
மிகுந்த
கண்ணியத்துடனும் மறைவாகவும் தாங்கிக்கொண்ட இந்தத் துன்பத்தின் வழியாக மரியா தன் மகனின் ‘எருசலேமிற்கான’ (லூக்
9:51) பயணத்தில் பங்குகொள்கிறார்; மேலும், நம்பிக்கை மற்றும் அன்பில் அவருடன் மிக நெருக்கமாக ஒன்றிணைந்து, மீட்புப் பணியில் அவரும் ஒத்துழைக்கிறார்.
கிறிஸ்துவின்
வார்த்தைகளை
ஏற்றுக்கொள்வோருக்கு
மரியா
ஒரு
முன்மாதிரி
4. இவ்வாறு,
கிறிஸ்துவின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வோருக்கு கன்னி மரியா ஒரு முன்மாதிரியாகத் திகழ்கின்றார். வானதூதர் மரியாவிற்குக் கிறிஸ்து பிறப்பை அறிவித்ததில் அந்த இறைவார்த்தையில் நம்பிக்கை வைத்தும், அவரின் மகனுக்கு முழுமையாகத் துணை நின்றும், மீட்பருக்கு நம்பிக்கையோடு செவிசாய்க்கவும் நம் வாழ்வை உருமாற்றிப் புதுப்பிக்கும் இறைவார்த்தையை அவரில் கண்டுகொள்ளவும் நமக்குக் கற்றுத் தருகின்றார். மேலும்,
கிறிஸ்துவுக்கு உண் மையாய் இருப்பதன் மூலம் வரும் சோதனைகளையும் துன்பங்களையும் ஏற்றுக்கொள்ளவும், தமக்குச் செவிசாய்த்துத் தமது வார்த்தையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு இயேசு வாக்களித்த மகிழ்ச்சியின்மீது நமது பார்வையை நிலைநிறுத்தவும் மரியாவின் இந்த அனுபவமானது நம்மை ஊக்குவிக்கிறது.
மூலம்:
Pope John Paul II, Mary had role in Jesus’ public ministry, in
«L’Osservatore Romano», weakly edition in English», 19 march 1997, p. 11.