news-details
கவிதை
மனிதம் மேம்பட...

படைப்பின் சிகரம் மனிதம் - அதன்

மாண்பை மதித்தல் புனிதம்

உணர மறுத்தல் அநீதம் - என்றும்

மலர் வைத்தல் அதீதம் (மேன்மை)

 

குடும்பம் என்பது கதம்பம் - முறையே

தொடுத்தால் இன்பம் ததும்பும்.

காலம் கடந்தால் வெதும்பும்- அன்பு

கனிந்தால் உறவுகள் அரும்பும்.

 

மக்கள் செல்வம் பேறு - வேண்டாமென

மறுத்தல் பெரும் தீது

ஆணும் பெண்ணம் ஈடு-பாலினம்

பகுத்தல் சமூகக் கேடு.

 

உயர்ந்தவர் தாழ்ந்தவர் உண்டோ? - ஆறு

அறிவவன் மானிடப் பண்போ?

இம்மதம் அம்மதம் எனினும் - இறையுள்

சங்கமம் அல்லாத ஒன்றோ?

 

உறவுகள் மேம்படவேண்டும்- வேண்டாப்

பிளவுகள் தீப்படவேண்டும்.

அனைவரும் நலம்படவேண்டும் - சுயநல

அழுக்குகள் கழிபடவேண்டும்.

 

சேர்ந்து வாழ்தல் நன்று - ஆதலின்

சோதரம் பேணுவோம் நின்று.

செயற்கை நீக்கம் கண்டு - பயனுறு

இயற்கையை மீட்போம் வென்று!