படைப்பின் சிகரம் மனிதம் - அதன்
மாண்பை
மதித்தல் புனிதம்
உணர
மறுத்தல் அநீதம் - என்றும்
மலர்
வைத்தல் அதீதம் (மேன்மை)
குடும்பம்
என்பது கதம்பம் - முறையே
தொடுத்தால்
இன்பம் ததும்பும்.
காலம்
கடந்தால் வெதும்பும்- அன்பு
கனிந்தால்
உறவுகள் அரும்பும்.
மக்கள்
செல்வம் பேறு - வேண்டாமென
மறுத்தல்
பெரும் தீது
ஆணும்
பெண்ணம் ஈடு-பாலினம்
பகுத்தல்
சமூகக் கேடு.
உயர்ந்தவர்
தாழ்ந்தவர் உண்டோ? - ஆறு
அறிவவன்
மானிடப் பண்போ?
இம்மதம்
அம்மதம் எனினும் - இறையுள்
சங்கமம்
அல்லாத ஒன்றோ?
உறவுகள்
மேம்படவேண்டும்- வேண்டாப்
பிளவுகள்
தீப்படவேண்டும்.
அனைவரும்
நலம்படவேண்டும் - சுயநல
அழுக்குகள்
கழிபடவேண்டும்.
சேர்ந்து
வாழ்தல் நன்று - ஆதலின்
சோதரம்
பேணுவோம் நின்று.
செயற்கை
நீக்கம் கண்டு - பயனுறு
இயற்கையை
மீட்போம் வென்று!