news-details
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

நாட்டின் கல்வி முறையை மறுகட்டமைப்பு செய்வதற்கான மிகப்பெரிய நடவடிக்கையாக தர்மேந்திர பிரதான் இராஜிநாமா அமைந்துள்ளது. இதைச் சாத்தியமாக்கிய மாணவர்களுக்குப் பாராட்டுகள். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்மீது போலிசார் வன்முறைத் தாக்குதலை நடத்தியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்கவேண்டும். விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழையர் என மத்திய அரசால் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்படும் மற்ற பிரிவினரும் தங்களின் கண்ணியத்திற்காக இதுபோல உறுதியுடன் போராடவேண்டும். இந்த அரசை அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது.”

திருமிகு. இராகுல் காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்

மாணவி அனிதாவில் தொடங்கியநீட்எதிர்ப்பு இப்போது நாடு முழுவதும் பரவியிருக்கிறது. தமிழ்நாடுநீட்தேர்வைத் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வருகிறது. தி.மு.. ஆட்சியில் சட்டப்பேரவையில்நீட்விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த மசோதா ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்டு, பின்னர் ஒன்றிய அரசிடம் அனுப்பப்பட்ட நிலையில், அது இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. இந்த விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளும் தொடர்கின்றன. அமைதியான வழியில் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு எதிராக வன்முறை அல்லது அச்சுறுத்தல் நடக்கக்கூடாது. நீட் விவகாரத்தில் மாநில அரசு தெளிவான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.”

திருமிகு. கனிமொழி, தி.மு.. துணைப் பொதுச்செயலர்

15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் சட்டத்தை, பிரான்ஸ் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. குழந்தைகளின் உடல்நலன், மனநலன் சார்ந்து பார்க்கும்போது இது மிகவும் அவசியமான நடவடிக்கையாகும். சமூக ஊடகங்களுக்குக் குழந்தைகள் அதிகம் அடிமையாகும் நாடுகளில் ஒன்றான இந்தியாவும் இத்தகைய தடையை முன்னெடுக்கவேண்டும். கர்நாடகா, ஆந்திரா, கோவா ஆகிய மாநிலங்கள் குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடைசெய்யவுள்ளதாக அறிவித்துள்ளன. எனவே, உடல்நலன், மனநலம், கல்வி, எதிர்காலம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு 16 வயதிற்குக் குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு உடனே கொண்டுவந்து நிறைவேற்றவேண்டும்.”

திருமிகு. அன்புமணி, பா... தலைவர்

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் திட்டத்தை, கர்நாடக அரசு தீவிரமாக முன்னெடுத்துவருகிறது. இந்தத் திட்டத்தை ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்த்துப் போராடி வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கடந்த ஜூன் 19-ஆம் தேதி சட்டப்பேரவையில் புதிய நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என்ற திருத்தத் தீர்மானம் போதுமான விவாதத்திற்கு வாய்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது. காவிரி நதிநீர் உரிமை தொடர்பாகக் கருத்தொற்றுமை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு முதல்வர் ஜோசப் விஜய், உடனடியாக அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகள் கூட்டத்தைக் கூட்டவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.”

திருமிகு. மு. வீரபாண்டியன், இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர்