news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

தனி நபர்களின் நேர்மையான முயற்சிகளும் முன்மாதிரியான பங்களிப்புகளும் அங்கீகரிக்கப்பட்டுப் பாராட்டப்பட்டால்தான் ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும். இந்தியா அதற்கெனப் பொதுவான மதிப்புகளாலும் கூட்டு இலட்சியங்களாலும் பிணைக்கப்பட்டு, ஒன்றாகவே இருந்து வருகிறது. அது என்றென்றும் ஒன்றாகவே நீடிக்கும்.”

திரு. சி.பி. இராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர்

தங்களது சிந்தனை மற்றும் நம்பிக்கைகளை வெளியில் கூற துணிச்சல் இல்லாத பலரை நாம் காண்கிறோம். அநீதிக்கு எதிராக மௌனத்தைக் கடைப்பிடிக்கும் நாடுகள் முன்னேற்றமடையாது. சுதந்திரமாகக் கருத்துகளை வெளிப்படுத்தும் நாடுகளே தொடர்ந்து முன்னேறிச் செல்லும். மக்கள் துன்புறுத்தப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் நான் காண்கிறேன். நமக்கு நேராதவரை அதற்கு எதிராகக் குரல் எழுப்பாமல் இருப்பது பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கும்.”

திரு. இராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

news
இந்திய செய்திகள்
திருவிவிலியத்தைக் கையால் எழுதி சாதனை படைத்த அருள்சகோதரி!

சிம்லா-சண்டிகர் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்சகோதரி மௌரா, திருவிவிலியத்தின் அனைத்துப் பக்கங்களையும் தனது கைப்பட எழுதி மகத்தான ஆன்மிகச் சாதனையைப் படைத்துள்ளார். பல ஆண்டு கால செபம், இடைவிடாத முயற்சியின் விளைவாக இப்பணி சாத்தியமாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அருள்சகோதரி மௌரா, “இதை வெறும் எழுத்துப் பணியாக நான் கருதவில்லை; இது இறைவனுடனான ஓர் ஆழமான உரையாடல் மற்றும் தவக்காலப் பயணம்என்று குறிப்பிட்டுள்ளார்.

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

நாம் அனைவரும் பல செய்திகளில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்க வேண்டும். அதுதான் சனநாயகம். எந்த ஒரு செய்தியிலும் கருத்து வேறுபாடு இல்லை என்றால், அங்கு சனநாயகம் இருக்காது. அனைவரும் எல்லா நேரங்களிலும் ஒரே கருத்தில் உடன்பட்டால் அது வேறுபாடுகளுக்குதான் வழி வகுக்கும். அதேநேரம், நாம் மாறுபடும் விதம் சம்பந்தப்பட்ட கருத்துகளைச் செம்மைப்படுத்துவதாக இருக்கவேண்டும். கட்டாயத்தின் பேரில் எவரையும் எதிர்க்கக்கூடாது. அணுகு முறையில் நேர்மறையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருப்பதுதான் சமூகத்திற்கு நல்லது.”

மாண்புமிகு சி.பி. இராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவர்

இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கின்ற போதைப் பொருள்களை நாம் நிச்சயம் ஒழிக்கவேண்டும். இதில் மாற்றுக்கருத்து இல்லை. போதையின் பாதையில் இருந்து இளைஞர்களைக் காப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவேனும் பயன் கிடைத்திருக்கிறது. போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதன் பாதிப்புகளை உணர்ந்து, அதிலிருந்து வெளியே வர வேண்டும். உடன் இருப்பவர்கள் அவர்களைத் திருத்தவேண்டும். போதைப் பொருள் புழக்கம் என்பது மிகப்பெரிய நெட்வொர்க். அதனை அழிக்க ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும். போதைப்பொருள் வருகின்ற நுழைவாயில்களை அடைக்க வேண்டும். இத்தகைய செயல்பாடுகளுக்கு எல்லாருமே கைகோர்க்க வேண்டும்.”

 மாண்புமிகு மு. . ஸ்டாலின், தமிழ்நாடு முதல்வர்

சமூக ஊடகங்களால் எந்த அளவுக்கு நன்மையும் பயனும் கிடைக்கின்றனவோ அதே அளவிற்குத் தீமையும் நிறைந்துள்ளது. இதில் முக்கியமானது, சமூக ஊடகங்கள் வாயிலாகப் பயங்கரவாத இயக்கத்தினர் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தங்கள் பக்கம் ஈர்க்கப் பயன்படுத்தும் போக்காகும். இதைத் தடுக்க ஏதுவாக சந்தேகத்திற்கு இடமான சமூக ஊடகக் கணக்குகளின் செயல்பாடுகளை தமிழ்நாடு காவல்துறை கண்காணித்து வருகிறது. தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகக் கைது செய்யப்பட்ட பலரும் பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருக்கப் பாலமாக இருந்தவை சமூக ஊடகத் தளங்களே!”

தமிழ்நாடு காவல்துறை

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள மசூதி மற்றும் மதராஸா மீது கல்வீச்சு நிகழ்வுகள் அரங்கேறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. தீயவர்கள் அனைத்து இடங்களிலும் உள்ளனர்; அவர்கள் எப்போதும் அப்படித்தான் இருப்பார்கள். பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

இந்தியா மதச்சார்பற்ற நாடு; அனைத்துச் சமூகத்தினரும் தங்களது மத நம்பிக்கையைப் பின்பற்ற அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது. எனவே, வகுப்புவாத வன்முறையைத் தடுக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும்.”

திரு. ஃபரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்

பல நூற்றாண்டுகளாக வடமேற்கு இந்தியாவின் பசுமை நுரையீரலாக ஆரவல்லி மலைத்தொடர் உள்ளது. அந்த மண்டலத்தின் சமூகப் பொருளாதார முதுகெலும்பாகவும் திகழும் ஆரவல்லி மலைத்தொடரைப் பாதுகாப்பது நம் கடமை. எனவே, ஆரவல்லி மலை மற்றும் மலைத்தொடர் குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகம் அமைத்த குழு அளித்த பரிந்துரைகள், அதை ஏற்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 20-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் மேலும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனால் சுற்றுச்சூழல் நிபுணர்களைக் கொண்ட புதிய உயர்நிலைக் குழுவை அமைக்க உத்தரவிடப்படுகிறது. அந்தக் குழு அறிக்கை சமர்ப்பித்து அடுத்தகட்ட உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும் வரை அங்குப் புதிதாகச் சுரங்கப் பணிகளை மேற்கொள்ளவோ, பழைய குத்தகைகளைப் புதுப்பிக்கவோ கூடாது.”

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூரியகாந்த், நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி அகஸ்டின், ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு

தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம். அவர்களது கோரிக்கைகளை முதல்வரும் பரிசளிக்க வேண்டும். சமூகநீதி, பெரியார், அம்பேத்கர், மார்க்சிய அரசியலே எங்களுக்கு முதன்மையானது. கூட்டணி என்பது இரண்டாம் பட்சம்தான். ஆர்.எஸ்.எஸ், பா... மற்றும் மதவாதச் சக்திகளை, தமிழ்நாட்டில் காலூன்றச் செய்ய .தி.மு.. உள்ளிட்ட கட்சிகளும், சில அமைப்புகளும் துணை போகின்றன. தமிழ்நாட்டில் பா... வலுப்பெற்றால் .தி.மு.. இல்லாமல் போகும்; பெரியார் அரசியலும் போய்விடும்.\"

தொல். திருமாவளவன், தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

எதிர்காலத் தலைமுறையைப் பண்பாடு கொண்ட தலைமுறையாக வளர்க்க கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தவேண்டும்.”

உயர்திரு. மு.. ஸ்டாலின், தமிழ்நாடு முதல்வர்

பார்வையாளர்களை ஈர்க்கவும், நமது பாரம்பரியப் பொறுமையை வெளிப்படுத்தவும் இசையை மீண்டும் மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இசையை உருவாக்குவது ஓர் அம்சம். அதேபோல, அதை உலகம் இரசிக்கும் வகையில் கொண்டு சேர்ப்பதும் முக்கியமானது. கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை என எதுவாக இருந்தாலும், அனைத்தும் பக்தி மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளமாக இருந்து வருகிறது.”

இசை அமைப்பாளர் .ஆர். ரஹ்மான்

அனைத்து நாடுகளும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவேண்டும் என்பதை உலகளாவிய நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. ஒவ்வொரு நாடும் காலநிலை அமைப்புக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க உரிய கவனத்துடன் செயல்படவேண்டும்.

எந்தவொரு நாடும், தனது நிலப்பரப்பை மற்றொரு நாட்டின் நிலப்பரப்புக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்த உரிமை இல்லை. சுற்றுச்சுழல் தொடர்பாக ஒவ்வொரு நாடும் இதர நாடுகளை மதிப்பதும், சுற்றுச்சுழல் பாதிப்பைத் தடுப்பதும் தங்கள் பொறுப்பு, கடமையாகக் கருதவேண்டும். காலநிலை மாற்றத்தில் சட்டங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து நாடுகளுக்கிடையே கூட்டுப் பொறுப்பும் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும்.”

உலகளாவிய நீதிமன்ற நீதிபதி லியோனார்டோ நெமர் கால்டீரா பிராண்ட்

news
இந்திய செய்திகள்
சமூகக் குரல்கள்

இட ஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெற்று நான் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றுவிட்டு கிரீமிலேயர், சமூக-பொருளாதார நிலையில் முன்னேறியவர்கள் பிரிவினருக்குச் சலுகைகளை இரத்து செய்ய முன்மொழிவதாக என்மீது குற்றஞ்சாட்டினர். ஆனால், அரசமைப்புப் சட்டத்தால் உருவாக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்பதை அவர்கள் அறியவில்லை. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது தலைமைச் செயலரின் மகனுக்கும், கிராமப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு தொழிலாளியின் மகனுக்கும் ஒரே இட ஒதுக்கீடு சலுகைகளை வழங்குவது சரியாக இருக்குமா?”

உயர்திரு. பி.ஆர். கவாய், உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தொழில்நுட்ப நிர்ப்பந்தம் மட்டுமல்ல; இது ஓர் அரசமைப்புச் சட்ட உத்தரவாதம். சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை கட்டமைப்புகள் இல்லாதது காரணம் அல்ல; தொடர்புடைய நிறுவனங்கள் சட்டங்களைச் செயல்படுத்தத் தயங்குவதுதான் காரணம்இந்த நிறுவனங்களை வலிமைப்படுத்துதல், ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டமைப்பு, ஆதாரங்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்துதல், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தல், குடிமக்களின் பங்கேற்பு மற்றும் நடத்தை மூலம் மாற்றம் ஆகிய ஐந்து தூண்களை அடிப்படையாகக் கொண்ட முன்னோக்கியப் பாதையை அமைக்கவேண்டும்.”

உயர்திரு. ஆர். மகாதேவன், உச்ச நீதிமன்ற நீதிபதி

சாதி, மதம், மொழி பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட சமூக நல்லிணக்க ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. பா...வினர் ஆளும் வட மாநிலங்களில் வேண்டுமானால் அவர்கள் நினைத்த காரியங்கள் ஈடேறலாம்; ஆனால், இங்கு அவர்களின் கனவு நிறைவேறாது. இது இராமானுஜர் வாழ்ந்த மண். ஆகவே, மத ஒழுக்கம், மத ஒற்றுமை பேணிக்காக்கப்படும். சனாதனத்தை எவ்வளவு காலமானாலும் அழிக்க முடியாது எனப் பா... மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகிறார். உண்மையில் நாங்கள் எதையும் அழிக்க முயலவில்லை; ஏதாவது ஒன்றை மையப்படுத்தி மக்களைப் பிளவுபடுத்தக்கூடாது என்றுதான் கூறுகிறோம். எனவே, பிரிவினையை ஏற்படுத்தும் சனாதனத்தை எதிர்க்கிறோம், சமாதானத்தைப் போற்றுகிறோம்.”

உயர்திரு. பி.கே. சேகர் பாபு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்