மனித மனம், நீர்க்குமிழி போன்றது. ஆகவே அது எளிதில் உடைந்துவிடுகிறது. உடைந்த மனத்தின் வலிகள் கவிதை வரிகளாகின்றன:
எதிரில்
வந்தால்..
எவரையும்,
ஞாபகம்
வரக் கூடாது.
அந்த
அளவிற்கு..
மறக்கவேண்டும்.
மனிதர்களை...’
இந்திய
அளவில் 153 மில்லியன் மூத்த குடிமக்களின் அழுகுரல் இவ்வாறே ஒலிக்கிறது. இந்திய
மக்களின் 10 விழுக்காட்டினரான மூத்தோரின் குரலைப்
புறந்தள்ள இயலாது. 2036-இல் மூத்தோர் எண்ணிக்கை 20 விழுக்காடாக உயரும் எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் தற்போதே 20 விழுக்காடு மூத்த குடிமக்கள் உள்ளனர். உலகில் முதலிடமாக மோனேகா நாட்டில் 37%, இரண்டாவதாக ஜப்பான்
நாட்டில் 30% மூத்த குடிமக்கள்
வாழ்கிறார்கள்.
மூத்தோரின் பின்னணியில்...
‘மயக்கமா கலக்கமா?
மனத்திலே
குழப்பமா?
வாழ்க்கையில்
நடுக்கமா?’
என்ற
பாடல் வரிகள், நடுக்கமாக ஒலிக்கின்றன.
எமது
கல்லூரிப் பேராசிரியர் 44 ஆண்டுகளுக்கு முன் எம்மிடம் பகிர்ந்த தகவல்கள்
நினைவிலாடுகின்றன. தேசியத் தலைவர் ஒருவரை அவர் குறிப்பிடுகிறார். அந்தத் தலைவர் நாடாளுமன்றம், சட்டமன்றம் என இரண்டிலும் போட்டியிடுவார்.
வேட்பு மனுதாக்கல் செய்துவிட்டு, பிரச்சாரம் செய்யமாட்டார், வாக்கு கேட்கமாட்டார். ஆனால், அவர் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் பிரமாண்ட வெற்றி பெறுவார். அவ்வளவு மக்கள் செல்வாக்கு மிக்கவர்.
மூத்த
தலைவரான அவர், தன் கடைசி ஆறு ஆண்டுகளில் மனிதர்கள் எவரையும் சந்திக்காமல் தனிமையில் வாழ்ந்தார். அவர் இறந்த அன்று எனது பேராசிரியர் கண்ணாரக் கண்டதைக் கூறுகிறார்: “அன்றைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் அழுது புலம்பி, தலைவிரிகோலமாய், பைத்தியம் பிடித்தவர்கள்
போல அலறி தெருக்களில் ஓடுவதைப் பார்த்தேன்.” இதுதான் மனித வாழ்க்கை. அந்த மாமனிதரின் வாழ்நாள்களின் இறுதிக் காலத்தில் தனிமையில் வாழ்ந்தார் என்பதே வரலாறு.
பல
வேளைகளில், கோவை மாநகரின் செல்வச் செழிப்பிற்குக் காரணமான ஒரு வகுப்பு, பெரும் குடிமக்களைப் பத்திரிகைகளில் பெருந் தொழில் அதிபர்களாக வர்ணிக்கப்பட்ட பெருமக்களை அவர்களது வீட்டு முற்றங்களில் தனியே அமர்ந்திருக்கப் பார்த்திருக்கிறேன். ‘அவரா இவர்?’ என அதிசயம் அடைந்துள்ளேன்.
சில வேளைகளில், அவர்களிடம் பேசியிருக்கிறேன். ஒருமுறை ஒருவரது மகன் கூறினார்: “தம்பி, அப்பா வள... வளன்னு பேசுவார், தப்பா எடுத்துக்காதீங்க” என்றார்.
நான்
வெளியே வந்து காரில் செல்லும்போது அவரிடம் திருப்பிக் கூறினேன்: “அண்ணா, இந்த கோயம்புத்தூரில் எல்லா பெரிய கம்பெனி பாகப்பிரிப்பிற்கும் பஞ்சாயத்து பேசியவருக்கும் பேச ஆள் இல்லாத நிலையா?” என்றேன்.
கிராமப்புறங்களில்
இந்நிலைக்கு மாறுபட்ட நிலையைக்
காண்கிறோம். கிராமத் திண்ணைகளிலும் கிராமச் சத்திரங்களிலும் சிலுவைத் திட்டுகளிலும் ஆலய மண்டபங்களிலும் வயது வித்தியாசமின்றி மூத்தோரை முன்னிலையில் வைத்து,
ஊர் சபை நடப்பதை ஆச்சரியமுடன் பார்க்கிறோம். கிராமத்தில் மூத்தோரும் இளையோரும் எந்தவித
அழுத்தங்களும் இல்லாமல் மக்களுடன் கலந்திருப்பது வியப்பிற்குரிய வாழ்வியல் நடைமுறையாகும்.
ஊருக்குப் புதிதாகச் செல்லும் நம்மை மூத்தோர் எளிதில் எதிர்கொள்தல், எளிதில் பேசுதல், பழகுதல் நடைமுறைக் கிராமம் சார்ந்த சமூக அமைப்பாகும்.
பெருநகரங்கில்
இருந்ததுபோல, எல்லா சிறு நகரங்களும் நகரமயத்தில் மாறிவிட்டன. மனிதர்கள் தனித்தனி தீவுகளில் வாழ்கிறார்கள். நாகரிகம் என்ற பெயரில் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளவோ, புரிந்து வாழவோ விரும்புவதில்லை.
ஒரு
நாளில் மும்பை மாநகரில் ஒரு புகழ்பெற்ற அடுக்கு மாடிக் குடியிருப்பில் இவ்வாறான உரையாடலைக் கேட்டேன். அடுத்த வீட்டுப் பெண்மணி ஓராண்டுக்குப் பின் பக்கத்து வீட்டிற்கு ஏதோ தகவல் அளிக்க வருகிறார். அவர் சென்ற பின் அக்குடும்பத் தலைவியும் குடும்பத் தலைவரும், ‘வந்தது பக்கத்து வீட்டுப் பெண்ணா? அல்லது அவரது அம்மாவா?’ என ஐயப்பட்டார்கள். நாம் கேட்டோம்,
“ஒரு வருடமாக உங்களுக்குப் பக்கத்து வீட்டில் யாரைத் தெரியும்?” என்றோம். அவர்கள் கூறிய பதில்: “அந்த வீட்டுத் தாத்தாவை மட்டும் தெரியும்.”
நாமே
25 வருடங்களுக்கு முன் தெருவில் வசிப்போர் அனைவரையும் அறிவோம். இன்று நாம் பக்கத்து வீட்டு மனிதர்களைக் காணும்போது சிறு புன்னகையால் கடப்பது பழக்கமாகிவிட்டது. வீட்டுப் புதுப்பித்தலில், இடிபட்ட எம் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, ஆயிரமாயிரம் கதைகள் பேசிய எம் தெருப் பெண்கள் என் அம்மாவைப் போலவே மாயமாகி விட்டார்கள், மறைந்துவிட்டார்கள்.
ஒரு
காலத்தில் எம் தெருவில் 100 வீடுகள், ஒரே குடும்பமாக உண்டு, உறங்கி, திருவிழாக்கள் கொண்டாடிய வசந்த காலங்கள் எங்கேயெனக் கண்ணீரோடு தேடுகிறேன். காலங்கள் ஓடுவதில்லை, பறக்கின்றன. மனிதர்கள் சமூக அமைப்பில் இருந்து விலகிவிட்டார்கள். குடும்பங்கள் என்ற எல்லைக்குள், ஒரு வட்
டத்தில் அடைந்துவிட்டார்கள்.
காலத்தே
மனம் சக மனிதர்களைத் தேடுகிறது, பொருள்
தேடிய, செல்வம் தேடிய, புகழ் தேடிய பயணம் வயது மூப்பால் தடையாகிறது. மனம் அமைதியைத் தேடுகிறது. அமைதியில் பெற்ற ஆற்றலை முதிய மனம் மறுக்கிறது. மனிதர்களின் அரவணைப்பை, அன்பை, ஆறுதல் வார்த்தைகளை, ஆழமான, கனிவான உரையாடல்களை விரும்புகிறது.
எல்லா
முதுமையின் கேள்விகளுக்கும் பதில் திருவிவிலியத்தில் புதைந்து விரிகிறது. காலங்கள் குறித்த சபை உரையாளரின் நிலையாமை,
இயலாமை குறித்து நினைவிற்கு
வருவது தவிர்க்க இயலாத ஒன்றாகும்.
‘அன்பிற்கு ஒரு காலம்
வெறுப்பிற்கு
ஒரு காலம்
போருக்கு
ஒரு காலம்
அமைதிக்கு
ஒரு காலம்!’
தினமும்
நடைப்பயிற்சியின் போது அரண்மனை போன்ற வீடுகளின் முன் ஒரு முதியவரையோ, மூதாட்டியையோ பல வீடுகளில் காண்கிறேன்.
அவர்கள் எந்தவிதச் சலனமுமின்றி வெறுமையாகப் பொதுவில் கண்களை மூடி சலனமின்றி அமர்ந்திருப்பதைக் காண்கிறேன். பல வேளைகளில், அவர்களது
சிரிப்பு, அவர்களது குரல் எப்படி இருக்குமென யோசித்திருக்கிறேன். அவர்கள் சக மனிதர்களின் முகம்கூட
காண மறுக்கிறார்கள். விழிக்கு விழி பார்ப்பதைத் தவிர்க்கிறார்கள்.
பல
வருடங்களாக இவ்வாறான இருபதிற்கும் உள்பட்ட மூத்த குடிமக்களைப் பார்க்கின்றேன். அதில் சிலரைச் சோகமுடன் காண்கிறேன். ஒரேயொரு பெரியவர் மட்டும் புன்னகை செய்து தலையாட்டுவதைத் தினமும் இரசிக்கிறேன். அவர் அங்கு அமர்ந்திருக்காத நாள்களில், மறுமுறை பார்க்கும் வரை யாரிடம் அவரைப் பற்றிக் கேட்பது எனப் பதற்றப்படுகிறேன்.
மூத்த
குடிமக்களுக்காக ‘சுமைதாங்கி’ திரைப்படத்தில்
கவிப்பேரரசு கண்ணதாசன் அவர்களின் பாடல்
வரிகளைச் சமர்ப்பிக்கிறேன். இது என் மனம் படும் பாடுகளையும் சேர்த்து மூத்தோருக்கு ஆறுதலாக, தேற்றுதலாக,
அரவணைப்பாக அமையும் எனக் கருதுகிறேன்.
‘வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும்.
வாசல்தோறும்
வேதனை இருக்கும்.
வந்த துன்பம்
எதுவென்றாலும்...
வாடி நின்றால்
ஓடுவது இல்லை!’
பிறகு
என்னதான் செய்ய முடியும்? பாடல் வரிகளே பதில் சொல்கின்றன.
‘எதையும் தாங்கும்
இதயம் இருந்தால்
இறுதி வரை
அமைதி இருக்கும்.’
அமைதியை
வைத்து என்ன செய்ய முடியும்? அமைதியை எப்படித் தேடுவது?
‘நாளைய பொழுதை
இறைவனுக்கு அளித்து...
நடக்கும் வாழ்வில்
அமைதியைத் தேடு!’
அண்மையில் புதுதில்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி அவரின் அரசு, ஆயுதம் தாங்கிய நக்சல்களை ஒழித்துவிட்டதாகவும்; ஆனால், ‘திமாகி’ நக்சல்கள் இன்னும் அழிக்கப்பட வேண்டியுள்ளது எனவும் அறிவித்தது (‘திமாகி’ என்றால் ‘Brainy’ மூளையுள்ளோர் என்று பொருளாம்!)
“திமாகிகள் மிக
ஆபத்தானவர்கள்!
முந்தைய
அரசுகள்
இவர்களை
அரசின்
ஆலோசகர்களாக
நியமித்திருந்தனர்.
இப்போது இதே ‘திமாகிகள்’ இன்று இந்தியச்
சமூகத்தைத்
தவறான
பாதைக்கு
இட்டுச்
செல்கின்றனர்.
இந்திய
இளைஞர்களை
வளர்ச்சி
நோக்கில்
செல்லும்
இந்தியாவிலிருந்து
திசை
மாற்றி
அழைத்துச்
செல்கின்றனர்.
இந்தியக்
குடிமக்கள்
இச்சக்திகளை
அடையாளம்
கண்டு
(Identity) கொள்வதோடு, தனிமைப்படுத்தவும்
(Isolate) வேண்டும்”
(தி இந்து, ஆகஸ்டு
31, 2026 - கவிதா கிருஷ்ணன்).
(நம்
வாழ்வின் வாசகர்கள் மேலே குறிப்பிடப்பட்ட கட்டுரையைப் படிக்கவேண்டும் என்பது என் விருப்பம்)
பிரதமர்
மோடியின் பொறுப்பில் 2014-இல் விடப்பட்ட இந்திய அரசு குடிமக்களை ஏமாற்றி வழங்கப்பட்ட அரசு; குடிமக்களை மூளைச்சலவை செய்து திணிக்கப்பட்ட அரசு; சனநாயக நெறிகளைத் துளிகூட நம்பாத ஒரு குழுவிடம் ஏமாற்றப்பட்ட, குடிமக்களால் தரப்பட்ட அரசு!
கண்ணீர்
விட்டு வளர்த்த சுதந்திரப் பயிரை, சுதந்திரம் அளித்த அரசியல் விடுதலையை, இந்தியச்
சமூகம் காலங்காலமாய் கட்டிக் காத்த வர்ண பேதத்தை, வர்ண பேதத்தைத் தர்மமாக்கப் பேணி வந்த சூழ்ச்சியை நிர்மூலமாக்க எழுந்த இந்திய அரசமைப்பை ஒற்றைத் தேர்தல் மூலம் நிர்மூலமாக்கிய சங்கப் பரிவாரங்களின் பிளவுவாதக் கருத்தியலைக் கேள்வி கேளாமல் ஏற்றுக்கொண்டு, இன்றும் தொடர் ஆட்சிசெய்து வருகைக்குத் துணை நிற்பவர்கள் ‘தேச பக்தர்கள்.’ இத்தேசபக்தர்களுக்கு எதிரானோர் அனைவரும் சில ஆண்டுகளுக்கு முன் நகர்ப்புற நக்சல்களாயினர் (Urban naxals).
இன்று
நகர்ப்புற நக்சல்களுக்குப் புது நாமம் சூட்டப்பட்டுள்ளது. இவர்கள் ‘திமாகி’ நக்சல்கள்! ‘வளர்ச்சி’
என்ற பெயரில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரக் கட்டமைப்பைக் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைத்த பெருமைமிகு இவ்வரசின் போக்கைக் கேள்விக்குள்ளாக்குவோர் நக்சல்களாம்! இவர்கள் நகர்ப்புற நக்சல்கள்; இப்பொழுது திமாகி நக்சல்கள்! குடிமக்கள் வெறும் வாக்களிக்கும் இயந்திரமல்ல; இவர்களுக்கு மூளையுண்டு என்று அங்கீகரித்த மோடிக்கு நன்றி கூறுவோம்.
இந்தியா
அறிவித்த மதச்சார்பின்மை புதைக்கப்பட்டபோது, மதம் சார்ந்த பிற்போக்கு அரசியலுக்கு இராமர் கோவில் மூலம் ‘நியாயம்’ தரப்பட்டபோது, பண்டித நேரு காக்க முயன்ற சமயச் சார்பின்மையின் அடித்தளம் தகர்க்கப்பட்ட போதெல்லாம் மௌனித்து நின்றோர் ‘தேசபக்தர்கள்!’ கேள்வி கேட்டவர் பலரல்லர்; ஒரு சிலர்தாம்! அவர்கள் நகர்ப்புற நக்சல்கள்! இல்லையெனில் திமாகி நக்சல்கள்!
கடந்த
12 ஆண்டு மோடியின் ஒற்றைக் கருத்தியல் ஆட்சிக்காலமாக வளர்க்கப்பட்டு வரும் பொய்மைக் கருத்தியலின் சாயல் இன்னும் அழியாத நிலையில், இச்சாயல் தரும் போதை இன்னும் மாறாத நிலையில், இன்றும் தொடர்ந்து மந்தை மனநிலையில் பின்தொடர்கிறது இக்கூட்டம். இவர்கள் தேசபக்தர்கள்! மனித உரிமைகளைக் காக்க, மனித உரிமைக் காப்பு மூலம் சனநாயகத்தைக் காக்க வாழ்நாளை அர்ப்பணிக்கும் கூட்டம் இவர்களுக்கு ‘நக்சல்கள்!’
அவதூறுகளால்,
இழிவான பிரச்சார யுக்திகளால் - விமர்சிக்கும் சனநாயக சக்திகள் அனைவரையும் ஒதுக்கவும் ஓரங்கட்டவும் ஒடுக்கவும் முனையும் மோடி அரசின் அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து அரசின் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுதல் மிகப்பெரிய பயங்கரவாதமில்லையா?
மக்களுக்குப்
பதில் கூறவேண்டிய (Accountability) அரசு,
தன் கடமையை மறந்தும், துறந்தும் செயல்படும்போது, பதில் கேட்டுப் போராடுவோர் நக்சல்கள் என்றால், போராடுவோரின் நியாயமான கோரிக்கைகள் எதேச்சதிகாரப்போக்கில் புறந்தள்ளப்படுகிறபோது எழுப்பப்பெறும் அபயக் குரல்களே ஆள்வோருக்கு எச்சரிக்கை மணியாக எதிரொலிக்கின்றது.
ஆள்வோர்
ஏன் அலறுகின்றனர்? உண்மையைச் சந்திக்கத் தயங்குகின்றபோதெல்லாம் இவர்கள் எதிரிகளாக்கப்பெறுவோரை ‘நக்சல்கள்’
என்றும், ‘தேசத்துரோகிகள்’ என்றும்,
‘பாகிஸ்தான் ஆதரவாளர்’
என்றும் முத்திரை குத்தி, அவர்கள்மீது பயங்கரவாதத்தை ஏவி, அதற்கு வேறொரு பெயர் சூட்டி நாடகமாடுதலைப் பார்க்க முடிகிறது. பல்கலைக்கழகங்கள் மதவாத அரசின் கருத்துநிலை பிரச்சாரக் கருவிகளாய் மாற்றப்பட்டுவிட்ட நிலையில், புது தில்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைக் கைவசம் எடுத்துக்கொள்ளும் முயற்சியில் போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். உமர் காலித், சர்ஜில் இமாம், குல்பிஷா பாத்திமா, நாடசா நிர்வால், தேவங்கனா கவிதா என்போரெல்லாம் பயங்கரவாதிகளாக, முறையான விசாரணையின்றி இன்னும் சிறையில் வாடுகின்றனர். ‘நீட்’ தேர்வு முறைகேட்டைக் கண்டித்து ஜந்தர் மந்தரில் போராடிய இளைஞர்களும் இவர்களுக்குப் பயங்கரவாதிகளே.
மதவாதிகளுக்கு,
மத அடிப்படைவாதம் பேசும் சனாதனிகளுக்குச் சமனற்றச் சமூக அமைப்பை எப்படியேனும் காத்துத் தீரவேண்டியதே உயிர்க் கொள்கை. அத்தகையோருக்கு ‘மாற்றம்’ என்ற சிற்றொலி செவிப்புலனுக்குப் பயங்கரவாதக் குரலாகத்தான் கேட்கும்.
ஐக்கிய
நாட்டவையின் இனப்பாகுபாட்டு ஒழிப்பிற்கான குழு ஒன்று அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை (‘தி இந்து’, ஆகஸ்டு 26, 2026) இந்திய அரசின் முகத்திரையைக் கிழித்துள்ளது. ஐ.நா.வின்
இக்குழு (UNCERD) இந்தியாவில்
நடக்கும் மிகப்பெரிய அளவிலான மனித உரிமை மீறல்களைக் கண்டு (Violations) கவலைகொள்கிறது. சமய ரீதியான சிறுபான்மையினர், பூர்வக்குடிகள், பழங்குடிகள், பட்டியலினப் பழங்குடிகள், தலித் மக்கள் மற்றும் குடிமக்களல்லாதோர் (Non - Citizens) என்போர்மீது,
சட்டத்தைப் பாதுகாப்பவர்களாலேயே நடத்தப்பட்டு வரும் மீறல்கள் கவலையளிப்பதாக அறிவித்துள்ளது. இவ்வறிக்கை வெளியிடப்பட்ட நாளன்று (ஆகஸ்டு 11-12) இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேஷாவும் அவையில் இருந்தார் என்பது வேடிக்கை கலந்த உண்மையே.
உலக
அளவில் மனித உரிமை மீறல்களை, நலிந்தோர் மீதான பாடுபாடுகளை, ஒதுக்கலை, ஒடுக்கலை நாளும் நடத்தி வரும் மோடி அரசு, யாரைப் ‘பயங்கரவாதிகள்’ என்று,
‘நக்சல்கள்’ என்று
அடையாளப்படுத்துகிறது?
இன்றைய
ஆளும் கட்சியின் தலைமை அமைப்பாம் ஆர்.எஸ்.எஸ்., இன்று உலகளவில் அம்பலப்பட்டுப் போன கதையை நியூயார்க் மேயரின் ஒளிவு மறைவற்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பற்றியும், அதன் தலைவருக்குக் காட்டிய எதிர்ப்பையும் தொடர்ந்து கவனிப்போர் அறிவர். இந்தியச் சனநாயகம் மதச்சார்பற்ற குடியரசின் கொள்கைகளுக்கு முரணான ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்குவதை (Inclusion) மறுத்து
ஒதுக்கும் (Exclusionary) தன்மையுடையது
என்று வெளிப்படையாகவே ஊடகவழி பேசினார் நியூயார்க் மேயர். மோகன் பாகவத் அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வைச் சட்ட ரீதியாகத் தடுக்கும் தன்மை இல்லையெனினும், பாகவத் சார்ந்த அமைப்பின் கொள்கையில் சனநாயகம், சமயச்சார்பின்மை இல்லை என்பதைத் தெளிவாகவே எடுத்துரைத்தார் அவர்.
நக்சல்கள் பயங்கரவாதிகளா?
இந்தியாவில்
விடுதலை பெற்ற காலத்திலிருந்து ஆட்சிப் பொறுப்பேற்ற அரசுகள் உழைக்கும் மக்களின் விடியலுக்கு எதுவும் செய்யவில்லை. வர்க்க ரீதியாகப் பிளவுண்ட சமூக அமைப்பின்மீது கட்டப்பட்ட அரசு, வர்க்க ரீதியான சமூக அமைப்பை அரசின் திட்டங்களால், பொருளாதாரக் கொள்கைகளால், ஆளும் வர்க்க நலனையே அரசுகள் முன்னிறுத்தின. தேர்தல் மூலம் மக்களிடம் பொய்யான நம்பிக்கையை வளர்த்து, வர்க்க ரீதியாகப் பிளவுண்ட அமைப்பில் மக்களுக்கான மாற்றம் எதுவும் நிகழாத நிலையில், சமூக அமைப்பில் மாற்றம் வேண்டி உருவான இயக்கம்தான் வங்காள மாநிலத்தில் ‘நக்சல்பாரி’ எனும்
இடத்தில் தோன்றிய நக்சல்பாரியக்கம்!
இந்த
இயக்கம் சமூகத்தின் அடிப்படையை மாற்றுவதற்குப் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் துணைகொண்டு உருவானது. ‘சனநாயக அரசு’ என்ற பெயரில் மக்களை ஒடுக்கி வரும் அரசுகளைப் பயங்கரவாத அரசாகச் சித்தரித்து, ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தது. இவ்விளைஞர் கூட்டம் நாடு முழுவதும் பரவியது. ஆயுதம் தாங்கிய இவ்விளைஞர்களின் போராட்ட முறை வன்முறை வடிவு கொண்டாலும், இவ்விளைஞர்
எழுச்சியும், அது நாடு முழுவதும் உருவாக்கிய அதிர்வலைகளும் மிகப்பெரிது.
ஆயுதம்
தாங்கி, சமூக மாற்றம் விரும்பிப் போராடிய இப்போராளிகளின் போராட்ட முறைகளில் நமக்குக் கருத்து வேறுபாடு இருக்கலாம்; ஆனால், தம்மை இழந்து, களத்தில் மடிந்த இப்போராளிகளின் கருத்தியலில், அக்கருத்தியலில் அவர்கள் கொண்ட உறுதிப்பாட்டில் நாம் வேறுபட முடியாது.
எழுபதுகளில்
தொடங்கிய இப்போராட்டம், இன்றுவரை நாடு முழுவதும் பல மாநிலங்களில் செயல்படுவதும்
உண்மையே. இப்போராளிகளை ஒடுக்குவதில் தொடர்ந்து வந்த அனைத்து அரசுகளுமே ஒரே நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தன. எனினும் இவ்வரசுகளின் முயற்சி முழுமையாக வெற்றி பெறாத நிலையில், இன்றைய மதவாத பா.ச.க.
அரசு, சட்டீஸ்கர் போன்ற சில மாநிலங்களில் வலுவாகச் செயல்பட்டு வரும் மாவோயிஸ்டுகளை முழுமையாக அழித்துவிட்டதாகச் சொல்லிக்கொள்கிறது. இக்குழுக்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகச் சொல்லிவரும் அமித்ஷாவின் கூற்றிற்கான சரியான பதிலை வரலாறுதான் கூறவேண்டும்.
ஆயுதம்
தாங்காமல், பேனா முனையால் மாற்றம்
வேண்டி போராடுவோர், நாளும் மீறப்பெறும் மனித உரிமைகளைக் காக்கும் வகையில் அரசு தரும் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வரும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், எழுபதுகளில் உருவான இளைஞர்களின் எழுச்சியைத் தொடர்ந்து நாடு முழுவதும் உருவான பல்வேறு மக்கள் இயக்கங்கள், குடிமைச் சமூக அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் இயக்கங்கள், பெண்ணுரிமை அமைப்புகள் எல்லாமே வெறும் கோரிக்கைகளை முன்வைத்து மட்டும் குரல் எழுப்பாமல், சமூக சீர்திருத்தத்தோடு, சமூக மாற்று முழக்கங்களையும் முன்வைத்துப் போராடுகின்றன.
எதேச்சதிகாரம்
என்ற ஒற்றைமொழியில், சனாதனம் என்ற பழமைவாதக் கொள்கையை முன்வைத்து ஆட்சி நடத்திவரும் மதவாதிகளுக்கு மேலே காட்டப்பட்ட அனைத்து வகை அமைப்புகளும் அறிவுஜீவி நக்சல்பாரிகள்தாம்!
பழமைவாதிகள்
- அதிலும் மத அடிப்படைவாதிகள் (Fundamentalist)
எப்போதுமே மாற்றத்திற்கு எதிரிகளே! மாற்றம் வேண்டுவோர், இவர்களின் இருப்பிற்கு எதிரிகளே. இவர்கள் காட்டும் ஒற்றைவழி என்பது மாற்றத்தைக் கண்டு அஞ்சும் வழி!
பழமையும்,
பழமையைக் காக்க உருவாக்கப்பட்ட கருத்தியலும், மாற்றாகச் சிந்திப்போரை நவீன அரசின் பயங்கர ஆயுதங்களால் வீழ்த்த முற்படுவர்; இதன் ஒரு பகுதியே ‘அறிவுசார் நக்சல்’ என்ற புதிய நாமகரணம். எச்சரிக்கை கொள்வோம்!
‘அன்புத் தாய்மார்களே! அருமைப் பெரியோர்களே! இனிய குழந்தைகளே...!’
தமிழ்நாட்டின்
பட்டிமன்ற மேடைகளில், வானொலி அலைவரிசைகளில், தொலைக்காட்சித் திரைகளில் பல்லாண்டுகளாகத் தேன்மழையாய்ப் பொழிந்த அந்தக் கம்பீரக் குரல் இனி மேடைகளில் ஒலிக்கப்போவதில்லை.
‘தமிழே வருக!’ என்று இந்தியக் குடியரசுத் தலைவரும், அறிவியலின் தந்தையுமான டாக்டர் ஏ.பி.ஜே.
அப்துல் கலாம் அவர்களையே எழுந்து நின்று வரவேற்கச் செய்த தமிழ்ச்சான்றோன், மதுரை மண்ணின் மாபெரும் தமிழ் அடையாளமான பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் தனது 90-வது அகவையில் (செப்டம்பர் 11, 2026) காலமானார் என்ற செய்தி உலகெங்கும் வாழும் தமிழர்களின் நெஞ்சங்களில் பேரிடியாய் விழுந்துள்ளது.
பட்டிமன்ற
சாம்ராஜ்ஜியத்தின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த அவர்தம் மறைவு, தமிழ் இலக்கிய வானில் ஒரு பேரொளி, தமிழ்ச் சுடரொளி மறைந்ததற்கு ஒப்பானதாகும். மதுரை மண் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது பழங்காலம் என்றால், பாப்பையாவைத் தங்க வைத்து தமிழ் வளர்த்தது இக்காலம். பட்டிமன்ற உலகிற்குத் தனது சிம்மக்குரலால் அரச மரியாதை தேடித்தந்த அந்தப் பெருந்தகையின் வாழ்வையும் தமிழ்ப் பணியையும் போற்றி நினைவுகூர்வது காலத்தின் கடமையாகும்.
வறுமையின் நிழலில்
பூத்த
தமிழ்க்கமலம்
மதுரை
மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடி என்னும் சிற்றூரில், 1936-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 22-ஆம் நாள், திருவாளர்கள் அ. சுந்தரம் - பாக்கியம்
இணையருக்கு ஒன்பதாவது மகனாக அவதரித்தார் சாலமன் பாப்பையா. ஆலைத் தொழிலாளியான தந்தையின் சொற்ப வருமானத்தில், பன்னிரண்டு குழந்தைகள் கொண்ட பெரிய குடும்பத்தில் பிறந்தமையால், அவர்தம் குழந்தைப் பருவம் பொருளாதார வசதிகளின்றி கடும் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தது.
கல்வியைக்
கற்பதே இவருக்குப் பெரும் போராட்டமாக அமைந்தது. இருப்பினும், உள்ளத்தில் கனன்ற தமிழ்ப்பற்றும் உழைப்பும் சான்றோர்களின் துணையும் இவரை உயர்த்தின. பள்ளிப் பருவத்திலேயே பேச்சுப் பயிற்சிக் கூடங்களில் பயின்று, ஆசிரியர்கள் அளிக்கும் உரைகளை மனனம் செய்து மேடைகளில் முழங்கினார். நாடகங்களிலும், திருவள்ளுவர் கழக மேடைகளிலும் இவர்தம் பேச்சுத்திறன் மெல்ல மெல்ல மிளிரத் தொடங்கியது.
பொருளியல் மாணவன்...
தமிழ்த்துறைத்
தலைவன்!
மதுரை
அமெரிக்கன் கல்லூரியில் பொருளியல் துறையில் இளங்கலைப் பட்டம் (B.A.) பெற்ற இவர்,
தமிழ்மொழியின் மீது கொண்ட தணியாத தாகத்தால் மதுரை தியாகராசர் கல்லூரியில் புதிதாகத் தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் முதுகலைத் தமிழ் (M.A. Tamil) வகுப்பில் சேர்ந்து பயின்றார். அதுவே இவர்தம் வாழ்வின் பொன்னான திருப்புமுனையாக அமைந்தது.
பின்னர்,
தான் பயின்ற அமெரிக்கன் கல்லூரியிலேயே தமிழ்ப் பயிற்றுநராகத் தனது கல்விப் பணியைத் தொடங்கிய பாப்பையா, தம் திறமையாலும் புலமையாலும் அதே கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராக உயர்ந்து, ஓய்வுபெறும் வரை மாணாக்கர்களுக்குத் தமிழ் அமுதினை ஊட்டினார். வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிக் கிடந்த தமிழ் இலக்கியத்தை, சாமானிய மக்களும் பருகி மகிழும்படி மேடைகளுக்குக் கொண்டுவந்த பெரும்பேறு பேராசிரியருக்கு வாய்த்தது.
பட்டிமன்ற மரபில்
புதிய
பொற்காலம்
1960-களில் தீவிரமடைந்த
இவர்தம் மேடைப் பயணம் எட்டையபுரம் பாரதி விழா, குன்றக்குடி அடிகளார் தலைமையிலான பட்டிமன்றங்கள் எனப் பரிணமித்தது. 1970-களில் கல்லூரிகளின் இலக்கிய மன்றங்களில் தவிர்க்க முடியாத பெயராக மாறினார். தொடக்கத்தில் சிறந்த பேச்சாளராக வலம்வர விரும்பியவருக்கு, காலத்தின் கட்டாயத்தால் அமைந்த நடுவர் பொறுப்பே இவர்தம் வாழ்நாள் அடையாளமாக உருவெடுத்தது.
தமிழ்நாட்டில்
பட்டிமன்றம் என்னும் வடிவம் பேராசிரியருக்கு முன்பே செழித்து வளர்ந்திருந்த போதிலும், அதைச் செவ்வியல் இலக்கிய மேடைகளிலிருந்து வெகுசன மக்களின் ‘குடும்ப மன்றமாக’ மாற்றிய பெருமை பேராசிரியர் பாப்பையாவையே சாரும்.
தொலைக்காட்சி
ஊடகத்தின் எழுச்சிக் காலத்தில் விடுதலைப் பெருநாள், தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு போன்ற நன்னாள்களில் இவர்தம் பட்டிமன்றங்கள் ஒளிபரப்பப்பட்டபோது, அவை தமிழ்நாட்டின் ஒவ்வோர் இல்லத்திலும் பண்டிகைக் கொண்டாட்டத்தின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகவே மாறின.
செந்தமிழைச் செழுந்தமிழாக்கிய
எளிய
நடை
பேராசிரியர்
சாலமன் பாப்பையாவின் இணையற்ற வெற்றிக்கு மிக முக்கியக் காரணம் இவர்தம் அரிய மொழிநடையாகும். சங்க இலக்கியம், திருக்குறள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் எனத் தமிழ் செவ்வியல் இலக்கியங்களில் ஆழங்கால்பட்ட புலமை பெற்றிருந்த போதிலும், மேடைகளில் கடினமான செந்தமிழைக் கையாளாமல், பாமரனும் எளிதில் உணரும் வண்ணம் அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளோடு பிணைத்து உரைப்பதே இவர்தம் தனித்துவப் பாணியாகும். அதிலும் குறிப்பாக, மதுரையின் இயல்பான பேச்சழகும், இயல்பான நகைச்சுவை நயமும் மிளிர இவர் ஆற்றிய உரைகள், இலக்கியப் பரிச்சயமற்ற கடைக்கோடி மனிதரையும் தமிழின்பால் ஈர்த்தன. நகைச்சுவையை ஓர் ஆயுதமாகக் கொண்டு, மக்கள் மனங்களில் சிந்தனை விதைகளைத் தூவியவர் இவர்.
சிரிக்க வைத்துச்
சிந்திக்க
வைத்த
செம்மல்
சாலமன்
பாப்பையாவின் பட்டிமன்றத் தலைப்புகள் காலத்தின் தேவைக்கேற்ப உருமாற்றம் பெற்றன. வெறும் இலக்கிய விவாதங்களாக மட்டுமன்றி, கணவன்-மனைவி உறவு, பெற்றோர்-பிள்ளைகள் பாசம், நவீனத் தொழில்நுட்பம், சமூக மாற்றம், தலைமுறை இடைவெளி போன்ற மனித வாழ்வியலோடு நெருங்கிய தலைப்புகளை இவர் கையில் எடுத்தார்.
இருதரப்பு
பேச்சாளர்களும் தங்களின் அடுக்கடுக்கான வாதங்களை முன்வைத்த பிறகு, நடுவராக இருந்து இவர் அளிக்கும் இறுதித் தீர்ப்பே பட்டிமன்றத்தின் மகுடமாகத் திகழும். யாரையும் புண்படுத்தாமல், இரு தரப்பிலும் உள்ள நயங்களை எடுத்துரைத்து, நகைச்சுவை மிளிர இவர் வழங்கும் சமூகச் செய்திகள் நிறைந்த தீர்ப்புகள், பட்டிமன்றத்தை வெறும் வாதப்போட்டியிலிருந்து அறிவார்ந்த குடும்பப் பொழுதுபோக்காக உயர்த்தின.
அத்தோடு
நிறுத்திவிடாமல், திரு. ராஜா, திருமதி. பாரதி பாஸ்கர் போன்ற எண்ணற்ற அடுத்த தலைமுறைப் பேச்சாளர்களை அடையாளப்படுத்தி, தமிழ் மேடைக்கு ஒரு புதிய தலைமுறையையே உருவாக்கிய ஆசானாகவும் இவர் விளங்கினார்.
இலக்கியப் பணியும்
திரைப்பட
அனுபவமும்
பட்டிமன்ற
மேடைகளைத் தாண்டி, இவர்தம் எழுத்துப்பணியும் மகத்தானது. ‘திருக்குறள் உரையுடன்’
என்ற இவர்தம் நூல், சாமானிய மக்களும் குறளின் ஆழத்தைப் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிய நடைமுறை விளக்கங்களுடன் எழுதப்பட்ட அரிய படைப்பாகும். மேலும் ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - ஒரு பார்வை’,
‘உரை மலர்கள்’,
‘உரைக்கொத்து’, ‘புறநானூறு
புதிய வரிசை வகை’ உள்ளிட்ட பல நூல்களைத் தமிழுக்குக்
கொடையாக அளித்துள்ளார்.
‘பாய்ஸ்’,
‘சிவாஜி’ போன்ற
படங்களின் மூலம் வெள்ளித்திரையிலும் தோன்றித் தனது கலைத் தடத்தைப் பதித்தார். எனினும், பட்டிமன்றத் தமிழ்ப் பேராசிரியராகவே மக்கள் மனத்தில் இன்றும் என்றும் நீங்காத இடம்பெற்றார்.
விருதுகளும் அங்கீகாரமும்
தமிழுக்கு
இவர் ஆற்றிய ஒப்பற்ற சேவையினைப் பாராட்டி, தமிழ்நாடு அரசு 2000-ஆம் ஆண்டில் ‘கலைமாமணி’
விருது வழங்கிப் போற்றியது. 2010-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ‘முத்தமிழ்ப் பேரறிஞர்’
பட்டமளித்துச்
சிறப்பித்தது. இவர்தம் வாழ்நாள் தமிழ்ப் பணியைப் போற்றும் வகையில், இந்திய ஒன்றிய அரசு 2021-ஆம் ஆண்டில் நாட்டின் உயரிய குடிமகன் விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’
விருதை வழங்கிச் சிறப்பித்தது.
வறுமையில்
பிறந்து, கல்விக்காகப் போராடி, பேராசிரியராக உயர்ந்து, நாட்டின் உயரிய விருதைப் பெற்ற இவர்தம் வாழ்வு, முயல்வார்க்கு ஊக்கமளிக்கும் வரலாற்றுச் சான்றாகும். இவர்தம் நிழலாகவும், வெற்றிக்குப் பின்புலமாகவும் திகழ்ந்த மனைவி திருமதி. ஜெயபாய் அவர்கள் 2025 சனவரியில் இயற்கை எய்திய நிலையில், தற்போது பேராசிரியரும் தம் வாழ்வியல் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
இது என்றும்
அழியா
தமிழ்ச்
சுவடு!
பேராசிரியர்
சாலமன் பாப்பையா வெறும் பட்டிமன்ற நடுவர் மட்டுமல்லர்; தலைமுறைகளை இணைத்த தமிழ்ப் பாலம். வானொலி, தொலைக்காட்சி, இணையம் என ஊடகங்கள் எத்தனையோ
மாறினாலும், மக்களின் மனங்களை வெல்லும் இவர்தம் எளிய தமிழும், நயமிக்க நகைச்சுவையும் மாறவேயில்லை.
‘தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின்
தோன்றாமை நன்று’
(குறள் 236)
என்ற
ஐயன் வள்ளுவரின் வாக்கிற்கு இலக்கணமாய் வாழ்ந்து மறைந்துள்ளார் பேராசிரியர். தமிழ்நாட்டின் பட்டிமன்ற வரலாற்றை இனி யார் எழுதினாலும், சாலமன் பாப்பையா என்னும் பெயரின்றி அந்த வரலாறு முழுமையடையாது. தமிழ் வாழும்வரை, தமிழ்ப் பேசும் மக்கள் மனங்களில் இவர்தம் கம்பீரக் குரலும், கள்ளமில்லாச் சிரிப்பும் என்றென்றும் நிலைத்திருக்கும்!
தமிழைச்
சாலப் பரிந்து நேசித்த...
ஐயா
சாலமன் பாப்பையாவே!
நீவிர்
சென்று வாரும்...
தமிழ்
உம்மால் என்றும் நின்று வாழும்!
பட்டிமன்றச்
சிம்மக்குரலுக்குத்
தமிழ்
உலகத்தின் வீரவணக்கம்!
முதன்மை ஆசிரியர்
காந்தாரம் நோக்கி தன் சீடர்களோடு தோமா வழி நடந்து செல்கையில் மக்கள் சிலரும் அவரைப் பின்தொடர்ந்தனர். அவ்விதம் அவர் செல்லும் வழியில் இறந்து கிடந்த ஓர் இளைஞனைச் சுற்றி சிலர் கூடியிருப்பதைக் கண்ட சீடர்கள், அருகே சென்று பார்த்தபோது அந்த இளைஞன் நீலம் பாய்ந்த உடலோடு வாயில் நுரைதள்ளி இறந்து கிடப்பதைக் கண்டனர். அவ்விளைஞன் கிடந்த இடத்திற்குச் சற்றுத் தள்ளி ஒரு பெரிய பாம்புப் புற்று இருப்பதை உடன் சென்ற மக்கள் கவனித்ததும், பாம்பு கடித்துதான் அந்த இளைஞன் இறந்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டனர்.
இறந்துகிடந்த
இளைஞனின் உடலுக்கு அருகே சென்ற தோமா செபிக்கத் தொடங்கினார். அவர் செபிக்கத் தொடங்கியதுமே கரிய நிற நாகம் ஒன்று புற்றுக்குள்ளிலிருந்து எட்டிப் பார்த்து, மெல்ல வெளியே வர ஆரம்பித்தது. அது
தோமாவின் அருகில் வந்து படமெடுத்து நின்றபடி, தான் அந்த இளைஞனைக் கடித்ததற்கான
காரணத்தைக் கூறியது: “நான் பாம்பு வடிவில் இருக்கும் சாத்தான். நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அதே பெண்ணை இந்த இளைஞனும் காதலித்தான். இவனுடைய சொல் பிடிக்காததால் இவ்வழியே வரும்போது இவனைக் கடித்துக் கொன்றேன்”
என்றது.
பாம்பின்
வடிவில் இருந்த சாத்தானின் கூற்றைக் கேட்ட தோமா, “இயேசுவின் பெயரால் உனக்குக் கட்டளையிடுகிறேன். இந்த இளைஞனின் உடலில் உள்ள நஞ்சை உறிஞ்சி வெளியே எடு” என்றார்.
தோமாவின்
உத்தரவைக் கேட்ட பாம்பு உடனே இளைஞன் உடலில், தான் கடித்த இடத்தில் தன் வாயை வைத்து அவன் உடலில் கலந்திருந்த நஞ்சை உறிஞ்சத் தொடங்கியது. அது நஞ்சை உறிஞ்ச உறிஞ்ச இளைஞனின் உடலில் பரவியிருந்த நஞ்சு பாம்பின் உடலுக்குள் மீண்டும் திரும்ப அதன் உடல் பருமனாகி விரிந்துகொண்டே இருந்தது. அதேநேரம் இளைஞன் உடலின்
நீல நிறம் மாறி, மெல்ல அவன் உடலில் அசைவு தெரியலாயிற்று. நஞ்சை உறிஞ்சிய பாம்பு அந்த நஞ்சாலேயே உடல் வீங்கி வெடித்து இறந்தது. சற்று நேரத்தில் இளைஞன் உயிர்பெற்றவனாய் எழுந்து தோமாவின் பாதத்தில் விழுந்து நன்றி கூறினான்.
நடந்த
அற்புதங்களைக் கண்ட மக்கள் அனைவரும் மிகுந்த ஆச்சரியத்துடன் தோமா போதிக்கும் கடவுளாகிய இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டனர். தோமாவோடு இணைந்து இறைவனைப் போற்றியதோடு புகழ்ப் பாடல்களையும் பாடினர்.
தோமா
உண்மையில் இயேசுவின் மற்ற திருத்தூதர்களைக் காட்டிலும் மாறுபட்ட சூழ்நிலையிலேயே நற்செய்தி அறிவித்து வந்தார். மற்ற சீடர்கள் மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளில் இயேசுவின் நற்செய்தி அறிவிப்பு இப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் எருசலேமை விட்டுத் தொலைதூரம் கீழைநாடு நோக்கிப் பயணித்து நற்செய்தி அறிவிக்க வந்தவர் தோமா. இவர் இயல்பிலேயே மனத்திடம் நிறைந்தவர்; ஐயம் தெளிவுறும் ஆர்வம் மிக்கவர்; நம்பிக்கை உறுதிமிக்கவர் என்பதைத் திருவிவிலியத்தில் இவர் சார்ந்த மூன்று நிகழ்வுகள் நமக்கு அறிவிக்கின்றன.
இறையாட்சியை
அறிவிப்பதன் பொருட்டு இயேசுவிற்கு நாட்டில் எதிரிகள் பெருகிவரும் சூழலில், பிரித்தானியாவில் நண்பன் இலாசரின் இறப்பை உணர்ந்த இயேசு அங்கே செல்ல முடிவெடுக்கிறார். வெளியே நடமாடினால் இயேசுவின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் சீடர்கள் தடுக்க முயல, அப்போது உடன் சீடரிடம் தோமா, “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்”
(யோவா 11:16) எனக் கூறிய வீரமிக்க வார்த்தைகளில் அவரிடம் மனவுறுதி தென்பட்டது.
கடைசி
இராவுணவில் தம் பன்னிரண்டு சீடர்களிடம் நடக்கவிருப்பவை பற்றியும், அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் கூறிய இயேசு, மேலும் தாம் தந்தையிடம் செல்லவிருப்பதாகவும், அதற்கான வழி சீடர்களுக்குத் தெரியும் என்றும் குறிப்பிடுகிறார். இந்நிலையில், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது; அப்படியிருக்க நீர் போகுமிடத்திற்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்துகொள்ள இயலும்?” (யோவா 14:5) என்ற கேள்வியைத் தோமா முன்வைத்தபோது, “வழியும் உண்மையும் வாழ்வும் நானே” என்ற பதிலை இயேசுவிடம் பெறுவதில் அவருக்கிருந்த ஐயத்தெளிவிற்கான ஆர்வம் தென்படுகிறது.
இயேசு
தாம் உயிர்த்து தோமாவைத் தவிர மற்ற சீடர்களைச் சந்தித்த நிலையில், இதைக் கேள்வியுற்ற தோமா அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். “அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்புகளைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை விட்டாலன்றி நான் நம்பமாட்டேன்” (யோவா
20:25) என்று நம்பிடத் தயங்கிய நிலையில், அவர் ஆணித்தரமாக நம்புவதற்கு ஆண்டவர் இயேசுவே முன்வந்து காட்சி தந்தபோது, “என் ஆண்டவரே! என் தேவனே!” என்று அவர் அடிபணிந்து இயேசுவிடம் முழுமையாகச் சரணடைந்த காட்சியில் தோமாவின் நம்பிக்கை உறுதியாகிறது.
இவ்விதம்
மனிதனிடம் தெளிவு, நம்பிக்கை உறுதி, வீரம் இவற்றோடு தன் தலைவரின் பணி செய்ய இந்தியப் பகுதிக்கு வந்த துணிவு நிறைந்த தோமா, அச்சம் சிறிதுமின்றி தான் செல்லும் வழியெங்கும் மக்களுக்குப் போதித்துக் கொண்டே சென்றார். தன் சீடர்களுடன் காந்தாரம் நோக்கிய கால்நடைப் பயணம் தொடர்கையில் மக்கள் இருந்த ஒரு பகுதியில் இதுநாள்வரை அவர்கள் கேள்விப்பட்டிராத கடவுளைப் பற்றி அங்கே போதிக்கத் தொடங்க, சிறியதாகக் கூடிய கூட்டம் தோமாவையே ஆர்வமுடன் கவனித்துக் கொண்டிருந்தது. இவ்விதம் போதித்திருந்த வேளையில் மக்கள் கூட்டத்திற்கு முன்னால் கழுதை ஒன்று வந்து நின்றது.
தன்
முன்னே வந்து நின்ற கழுதையை நோக்கினார் தோமா. கடவுள் அருளோடு அவ்விலங்கைப் பேச அவர் அனுமதிக்க, வாய் திறக்கப்பட்ட அந்த விலங்கு, “கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவின் தூதரே, நீர் போகுமிடத்திற்கு உம்மைச் சுமந்து செல்வதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்று,
தான் அங்கு வந்த காரணத்தைச் சொன்னது. கழுதை பேசுவதைக் கேட்டு மக்கள் வியப்படைந்தனர்.
தோமாவோ,
“நான் அழைக்காமலேயே வந்திருக்கிறாயே... நீ யார்?” என்று
கேட்டார். கழுதை கூறிய பதில் அங்கிருந்த மக்களுக்குப் புரியவில்லை. சீடர்களுக்கோ அரைகுறையாகப் புரிந்தது. அது கூறியது: “கடவுள் எங்கள் இனத்தின்மீது எப்போதும் இரக்கம் உள்ளவர். பிலயாம் இறைவாக்கினரிடம் பேசியதும், உம் தலைவர் எருசலேம் நகருக்குள் நுழைகையில் அவரைச் சுமந்து சென்றதுமான கழுதைகளின் இனம்தான் நான். இப்போது உம்மைச் சுமக்கக் காத்திருக்கிறேன்.”
விலங்கின்
சொற்களைக் கேட்ட தோமாவின் சீடர்கள், தோமாவின் தலைவர் என்று குறிப்பிடப்படுபவர் இயேசு கிறிஸ்துவே என்பதைப் புரிந்துகொண்டனர். ஆனால், ‘யார் இந்த இறைவாக்கினார் பிலயாம்?’ என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனாலும் ஆச்சரியமான அந்த நிகழ்வால் அங்கே அப்போதைக்குக் கேள்வி எழவில்லை.
திருவிவிலிய
நூலில் பழைய ஏற்பாட்டினை வாசித்தறியாதோர் அறிந்துகொள்ள வேண்டியவர் இந்தப் பிலயாம். மோசே தலைமையிலான இஸ்ரேல் மக்கள் விடுதலைப் பயணத்தின்போது, தாங்கள் செல்லும் வழியெங்கும் அயல்நாட்டவர் எதிர்ப்பையே சந்தித்து வந்தனர். பாலஸ்தீனாவின் தென் கிழக்குப் பகுதியில் வாழ்ந்த மோவாப் நாட்டு மன்னன் பாலாக்கு, இஸ்ரயேலரின் வலிமையை அறிந்து, அவர்களின் எதிர்ப்பை எப்படி எதிர்கொள்வது என்று குழம்பியவனாய் இதற்கான தந்திர வழியைத் தேடினான். பெகோர் என்பவரின் மகனான பிலயாம் என்ற இறைவாக்கினர் ஆசிர் வழங்குவதிலும் சபிப்பதிலும் வல்லமை மிக்கவர் என்பதால், அவரைக் கொண்டு எதிரிகளான இஸ்ரயேலரைச் சபிக்கத் திட்டமிட்டான். அதற்காகத் தூதுவர்களை அவரிடம் அனுப்பி வைத்தான்.
ஆமாபு
ஆற்றின் கரையருகே வாழ்ந்திருந்த பிலயாமை பாலாக்கின் தூதுவர்கள் சந்தித்தபோது, ஆண்டவர் தனக்குச் சொன்னபடி அவர்களுடன் செல்ல பிலயாம் மறுத்துவிட்டார். ஆனாலும், தொடர்ந்து அரசரின் வற்புறுத்தலால் பிலயாம், கடவுளுக்கு எதிரான மனநிலையோடு அவனைச் சந்திக்கப் புறப்பட்டார். தான் வளர்ந்து வந்த கழுதைக்குச் சேணம்பூட்டி தன் பயணம் தொடங்கினார். சினம் கொண்ட கடவுள் பிலயாமுக்குப் பாடம் புகட்ட விரும்பினார்.
கடவுளின்
தூதர் கையில் வாளோடு கழுதைக்கு மட்டுமே தெரியும்படி வழிமறித்தபோதெல்லாம் முரண்டுபிடித்த கழுதையை அடித்தார். ஓரிடத்தில் இரு மதில் சுவர்களுக்கு மத்தியில் தூதர் நிற்க, பிலயாமைச் சுமந்த கழுதை சுவரில் முட்டி, பிலயாம் காலைச் சுவரோடு நெருக்கித் தேய்த்தது. மூன்றாம் முறையாக அடி வாங்கிய கழுதை கடவுள் கட்டளையால் வாய் திறக்கப்பட, “இப்படி மூன்று முறை அடி வாங்குவதற்கு நான் என்ன தவறு செய்தேன்?” என்று கேட்டது. அதற்குப் பிலயாம், “வரும் வழியில் என்னை ஏளனப்படுத்தியபடி வருகிறாய்”
என்றார். கழுதையோ, “இன்றுவரை என் வாழ்நாளெல்லாம் உம்மைச் சுமந்து வருகிறேனே, எப்போதாவது நான் இப்படி நடந்ததுண்டா?” என்று கேட்க, ‘இல்லை’ என்றார் பிலயாம். அப்போதுதான் அவருக்குக் கண் திறந்தது. கடவுளின் தூதரைக் கண்டவர் முகங்குப்புற விழுந்து வணங்கினார். கடவுளின் விருப்பத்திற்கு மாறாகத் தான் செய்யவிருந்த தவறை உணர்ந்தார். அதற்குப்பின் மன்னன் பாலாக்கைச் சந்தித்த பிலயாம், நான்கு முறையும் குறி சொல்கையில் இஸ்ரயேலரை ஆசிர்வதித்தார் (எண் 22:23,24).…
இவ்விதம்
பிலயாம் என்ற இறைவாக்கினரோடு பேசிய கழுதையைத்தான் தன் முன்னோர் என்று தோமாவிடம் பேசிய விலங்கு கூறியது. தனது போதனையை முடித்த தோமா, “விலங்கினைப் பேச வைத்த ஆண்டவரே, உமக்கே மாட்சியும் மகிமையும்”
என்றவராய் கழுதையின் மீது அமர்ந்து தன் பயணத்தைத் தொடர்ந்தார்.
நகர்ப்புற
நுழைவு வாயிலை நெருங்குவதற்குமுன் கழுதையினின்று இறங்கிய தோமா, “இனி நீ உன் இருப்பிடத்திற்குச்
செல்லலாம்” என்று
அதற்குக் கட்டளையிட்டார். ஆனால், அங்கு நடந்ததோ வேறு! தோமா தன்னை விட்டு இறங்கியதும், தான் வந்த நோக்கம் நிறைவேறியதுபோல் கழுதை அங்கேயே தன் உயிரைவிட்டது. இறந்துவிட்ட கழுதையைக் கண்ட மக்கள் அதற்கு உயிர்ப்பிச்சை தருமாறு தோமாவை வேண்டினர். அவரோ “பேச வைத்த கடவுளே, இதனை இறக்கவும் அனுமதித்துள்ளார். இதனை நல்லடக்கம் செய்யுங்கள்” என்றார்.
அவர் சொற்படியே சீடர்கள் அவ்விலங்கை நல்லடக்கம் செய்தனர்.
இயேசுவின்
நற்செய்தியைப் பரப்புவதில் முதன்மையாளராக விளங்கிய புனித பவுலைப்போல் தெளிவான சிந்தனை, அழுத்தம், திருத்தமான பேச்சாற்றல், நினைத்ததை விளக்கமாக எழுதும் ஆற்றல் எனத் தலைமைப் பண்புக்குரிய தகுதிகள் தோமாவுக்கு இல்லாதிருந்தாலும், அவருக்கு இருந்த ஒரே தகுதி இயேசுவின்மீது கொண்ட அளவில்லாத பற்றும், அவருடைய கொள்கைகள்மீது வைத்த அசைக்கமுடியாத பிடிப்புமே. கல்வியறிவில் அவர் குறைபாடு உள்ளவராயிருந்தாலும் ‘படிக்காத மேதை’ என்று கூறுமளவிற்கு வாழ்க்கையிலும், சமயம் சார்ந்த விசயங்களிலும் அனுபவ அறிவு நிறைந்தவராக இருந்தார். இயேசுவின் நற்செய்தியை உலகெங்கிலும் பரப்பவேண்டும் என்ற வெறி மட்டுமே தோமாவிடம் மிதமிஞ்சி இருந்தது.
இந்த
நிலையில் அவருக்குச் செல்லும் இடமெல்லாம் வரவேற்பு இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஒருசில சீடர்களுடன் அவர் காந்தாரத்திற்குள் நுழையும்போது அவரை வரவேற்பவர் எவருமில்லை. ஆனால், அவர் தான் போதித்துக்கொண்டே செல்கையில் நோயாளிகளைக் குணப்படுத்தியது, பேய்களை ஓட்டியது போன்ற புதுமைகளால் ஈர்ப்புக்குள்ளாகிய மக்கள் அவர் பின்னால் திரண்டனர். அவர் போதனைகளை ஆர்வமாகக் கேட்டனர். மக்கள் மனம் மாறுமளவிற்குத் தொடர்ந்து அங்கே மேலும் சில புதுமைகள் நிகழ்த்த வேண்டிய சூழ்நிலையும் அவருக்கு ஏற்பட்டது.
(தொடரும்)
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன்
அடிசேரா தார் (குறள் 10)
குறள் விளக்கம்:
இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கிறவர்,
பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
சிந்தனை: ‘கடவுள் வாழ்த்து’
என்ற அதிகாரத்தின் பத்தாவது குறளை நாம் சிந்திக்கின்றோம். ஒரு சொற்பொழிவாளர் கூறிய கருத்து இது. திருவள்ளுவர் ஒரே கருத்தைப் பத்து குறள்களில் விளக்குகின்றார். கடவுளைப் பற்றிச் சொல்ல பத்து குறள், கல்வியைப் பற்றிச் சொல்ல பத்து குறள். அப்படியென்றால், நம் அனைவரையும் பற்றி அவர் சிறப்பாக அறிந்திருக்கின்றார் என்று எண்ணத் தோன்றுகின்றது.
இந்த
மனிதர்களுக்கு ஒரு
கருத்தை ஒருமுறை சொன்னால் போதாது; அதைப் புரிந்துகொள்ளமாட்டார்கள்; இவர்களிடம் பத்து முறை சொன்னால்தான் மண்டையில் ஏறும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு தலைப்பிலும் பத்து குறள்கள் கொடுத்திருக்கின்றாரோ... என்று எண்ணத் தோன்றுகிறது.
பத்தாவது
குறளில், இந்த வாழ்க்கை கடலைப் போன்றது. அதுவும் பெருங்கடல் என்று குறிப்பிடுகின்றார் வள்ளுவர். கடல் என்று சொல்கின்றபோது, அதன் ஒரு கரை மட்டுமே நமக்குத் தெரியும் மறுகரை நம் கண்களுக்குப் புலப்படாது. இதுதான் நமது வாழ்க்கை. நம் வாழ்க்கையில் இக்கரையாகிய பிறப்பு நமக்குத் தெரியும்; அக்கரையாகிய இறப்பு நமக்குத் தெரியாது. எனவேதான் இந்த வாழ்க்கையைப் பெருங்கடல் என்கிறார்.
ஒருவர்
இந்த வாழ்க்கையில் சீரும் சிறப்புமாக வாழ்ந்து கரையைக் கடக்க வேண்டுமென்றால், அவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கவேண்டும். இறைவனின் பாதத்தைப் பற்றிப் பிடிக்கவேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் இந்த வாழ்க்கையைச் சீரும் சிறப்புமாகக் களிப்பர் என்பதைக் குறிப்பிடுகின்றார்.
இறைவன்
பாதம் சேராதவர்கள் அமைதியும் நிறைவும் கொண்ட வாழ்க்கையை நடத்த முடியாது என்கிறார்.
இன்றைய
நடைமுறை வாழ்க்கையில், இறைநம்பிக்கையாளர்களின் வாழ்க்கைக்கும், இறைநம்பிக்கை அற்றவர்களின் வாழ்க்கைக்கும் எத்தனையோ வித்தியாசம் இருக்கிறது அல்லவா!
பிறவிப்
பெருங்கடலைக் கடக்க இறைநம்பிக்கை அவசியம் எனச் சிந்திக்கும்போது, மாற்கு நற்செய்தி 6:47-51 வரையிலான இறைவார்த்தைகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன:
“பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால், அவர் தனியே கரையில் இருந்தார். அப்போது எதிர்க்காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து
செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல் வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, ‘அது பேய்’ என்று எண்ணி அவர்கள் அலறினார்கள். ஏனெனில், எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். ‘துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்’ என்றார்.
பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிக மிக மலைத்துப் போயினர்.”
சீடர்கள்
பெருங்காற்றைக் கண்டு அஞ்சியபோது, அந்நேரத்தில் ஆண்டவர் கடல்மீது நடந்து அவர்களிடம் வந்தார். அவர் படகில் ஏறியதும் காற்று அடங்கியது.
இயேசு
தம் சீடர்களிடம் வந்ததும் அவர்கள் துன்பம் விலகியது. அவர்கள் பயணம் அமைதியில் தொடர்ந்தது. எனவே, நம் வாழ்க்கைப் பயணத்தில் இறைவன் நம்மோடு இருப்பாரெனில், நம் வாழ்க்கை பேரும் புகழுமாய் திகழும்.
நாமும்
மகிழ்வோடு கடந்து செல்வோம்; இறைவனின் திருப்பாதத்தைப் பற்றிக்கொள்வோம்.
பிள்ளைகள் வளர்ந்து, பெற்றோர் ஆகின்றார்கள். பிள்ளைகளை வளர்த்துச் சுமந்த பெற்றோர் முதிர்ந்து பிள்ளைகளாகிப் போகிறார்கள்.
பிள்ளைகளை
வளர்ப்பதை நாம் சுமை என்று கருதுவதில்லை. ஏன்? வருங்காலத்தில் பிள்ளைகள் நம்மைச் சுமக்கும் என்கிற நம்பிக்கைதான் காரணம்.
பழங்காலக்
கூட்டுக் குடும்பங்களில் இந்த நம்பிக்கை ஓரளவுக்கு நிறைவேறியது. சொத்துரிமையும் அதிகாரமும் பெற்றோரிடம் இருந்ததால் அவர்கள் மதிக்கப்பட்டார்கள்.
இன்று
நாம் நம் பெற்றோரை மதிக்கிறோமா? அவர்களுக்கு இன்னும் சுமையாக இருந்து அவதிப்படுத்துகிறோமா?
அவர்களை அன்போடு சுமக்கும் சுமைதாங்கிகளாக இருக்கிறோமா?
இன்றைய
இளைஞர்களின் சமுதாயப் பொருளாதார நிலையைப் பொறுத்து இந்தக் கேள்விக்கான விடையும் மாறக்கூடும்.
பொறுப்புணர்வோடும்
சுயக்கட்டுப்பாட்டுடனும்
வளராத, வளர்க்கப்படாத பிள்ளைகள் தங்கள் பொருளாதார நிலையைச் சரிப்படுத்திக்கொள்ள பெற்றோரையே நச்சரிக்கிறார்கள். முதிய வயதிலும் பெற்றோருக்குச் சுமையாகவே மாறிப்போகிறார்கள். தங்கள் சுயநலத்திற்காகப் பெற்றோரை அவதிக்கு ஆளாக்கும் பல இளைஞர்களின் அவலங்களைப்
பார்க்கிறோம். ஆனால், இது அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடப்பவைதான். நம்
மன உறுத்தலுக்கு இது ஓர் ஆறுதல்.
மிகுந்த
சுயகட்டுப்பாட்டுடன் படித்து முன்னேறிவிடும்
இளைஞர்களில் பலர் பெற்றோரைச் சார்ந்திருப்பதில்லை. வெளியூர், வெளிநாடு என்று உயர, தனிமையை நோக்கிப் பறந்துவிடுகிறார்கள். இவர்கள் நிச்சயம் பெற்றோருக்குச் சுமையாக இருப்பதில்லை. பலர் பெற்றோருக்குத் தேவையான
பொருளாதார, மருத்துவ வசதிகளையும் நன்றாகக் கவனித்துக்கொள்கிறார்கள்.
அடிக்கடி
பெற்றோரைச் சந்திக்கவோ, நேரத்தைச் செலவிடவோ இவர்களால் முடிவதில்லை. இவர்களது பெற்றோர் கொஞ்சம் ஏக்கத்தோடு காலம்
தள்ளுவது தவிர்க்க முடியாத காரியம்தான். ஆனால், நம் இளைஞர்களில் பெரும்பாலோர்
நடுத்தரப் பொருளாதார நிலைகளில்தான் உள்ளனர். சந்தைச் சமூகத்தின் ஆடம்பரத் தேவைகளை ஈடுகட்ட முடியாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அடிப்படைத்
தேவைகளைவிட சந்தை தூண்டும் ஆசைகளுக்கு அடிமையாகி, வரவுக்கு மேல் செலவு செய்து அவதிப்படுகிறோம். நம்மோடு நம் பெற்றோரையும் சேர்த்து அவதிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
நகரத்தில்
நாம் வசதியாக வாழ முயற்சிக்கின்றோம். நம் பெற்றோர் கிராமங்களில் சிரமப்படுகிறார்கள்.
நாம்
வீடு வாங்க ஆசைப்படுகின்றோம்; அதற்காகப் பெற்றோர் தங்கள் கையிருப்பைச் செலவு செய்யும் நிலை வருகிறது. சில நேரங்களில் பெற்றோர் தங்கள் வீட்டையும், வீட்டு நிலத்தையும் விற்க வேண்டி வருகிறது.
ஒரு
முதிய நண்பர் ஓய்வூதியம் பெறுகிறார். தங்கள் ஓய்வூதியம் முழுவதையும் தன் ஒரே மகனிடம் கொடுத்துவிட்டு, அவன் குடும்பத்தோடு தங்கிக்கொள்ளலாம் என்று பையன் சொல்கிறான் என்று சோகத்தோடு கூறினார்.
இன்றைய
நிலையில் பல குடும்பங்களில் கணவன்-மனைவி இருவரும் வேலைக்குப் போக வேண்டிய நிலை உருவாகிவிட்டது. வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொள்வதும், பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதும் தாத்தா-பாட்டியர் வேலையாகிப் போகிறது. பேரப்பிள்ளைகளோடு இருப்பது முதியவர்களுக்கு ஒரு சுகம்தான். ஆனால், அதுவே வயதுக்கு மீதிய வேலைச்சுமையாக மாறிவிடாமல் இருக்கவேண்டுமே! நிறைய குழந்தைகள் இருப்பது ஒரு காலத்தில் பெற்றோருக்கு வலிமை சேர்த்தது. இன்று நான்கு பிள்ளைகள் தனித்தனிக் குடும்பத்தில் வசிக்கும்போது, வயதான பெற்றோர் எங்கே தங்குவது? ஒரு வீட்டில் ஒரு மாதம் என்று சில முதியவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.
இன்னும் சில வீடுகளில் அம்மா ஒரு வீட்டில், அப்பா இன்னொரு வீட்டில்! இவ்வளவையும் தாண்டி பிள்ளைகள் வசதியாக இருந்தாலும், அவர்களை வசதிக்கு ஆளாக்கிய பெற்றோர், முதியோர் இல்லங்களில் வாழும் அவலங்களும் அரங்கேறுகின்றன.
இளைய
தலைமுறை கொஞ்சம் நிதானமாகச் செயல்பட்டால்
இந்த வகை அவலங்களைத் தவிர்க்கலாம். நாம் அசுர வேகத்தில் வசதிகளைப் பெருக்கிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அளவுக்கு மீறிக் கடன்பட வேண்டிய தேவையும் இல்லை. கொஞ்சம் நிதானமாகத் திட்டமிட்டால் நம் பெற்றோரின் அன்பும் ஆசியும் நமக்குக் கிடைக்கும். நம் பிள்ளைகளும் தாத்தா-பாட்டியரின் அன்பைச் சுவைப்பார்கள்.
முதிய பருவத்தில் தங்கள் பெற்றோரை மதிக்கவேண்டும் என்பதையும் கற்றுக்கொள்வார்கள்.
ஒரு
குடும்பத்தில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் மூலம் தாத்தா-பாட்டியரின் செலவுகளுக்காக மாதந்தோறும் பணம் கொடுப்பது வழக்கம். அந்தப் பிள்ளைகள் வளர்ந்த பிறகு தங்கள் பெற்றோரின் தேவைகளைப் புரிந்துகொண்டு செயல்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை! அதற்கான பயிற்சிதான் இளமையிலேயே கிடைத்துவிடுகிறதே! என்னைச் சுமந்து வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை முதுமைக் காலத்தில் நான் மதித்து நடப்பேன். என் துணைவரின் பெற்றோரின் அன்பையும் ஆசியையும் நான் பெறுவேன். எங்கள் பெற்றேரின் அன்பு எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் அவசியம்.