news
ஆன்மிகம்
இயேசுவின் உயிர்ப்பில் நம்பிக்கை கொள்வோம்!

ஈஸ்டர் ஞாயிறு, சாவின்மீது கிறிஸ்து அடைந்த வெற்றியைக் கொண்டாடும் ஒரு மகிழ்ச்சியான நாள். உலக வரலாற்றில் இதுபோன்று இருந்ததில்லை; இனியும் இருக்கப்போவதும் இல்லை. இயேசு கிறிஸ்து கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்ததைக் கிறித்தவர்களாகிய நாம் நம்புகிறோம். மூன்றாவது நாளில் கல்லறை காலியாக இருந்தது என்றும், கல்லறை உடைகள் இன்னும் உள்ளன என்றும் நம்புகிறோம்.

இயேசு, இதற்குமுன் யாரும் அறிந்திராதபடி வியத்தகு முறையில் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தார். வானதூதர்கள் கல்லை அப்புறப்படுத்துவதற்கு முன்பே அவர் கல்லறைக்கு வெளியே இருந்தார் (மத் 28:2). அவர் ஏற்கெனவே உயிர்த்தெழுந்துவிட்டார். பின்னர் அவர் உயிருடன் செயல்பட்டார்!

திருவிவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்கள் இதோமகதலா மரியாவுக்கும் வேறொரு மரியாவுக்கும் தோன்றினார் (மத் 28:1,9,10). இயேசு தம் கைகளையும் விலாவையும் சீடர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள் (யோவா 20:20,27). “உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” என்று கேட்டு அவர்களுடன் உண்டார் (லூக் 24:41,43). எம்மாவு சீடர்களுக்குத் தோன்றி அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்து அவர்களின் கண்களைத் திறந்தார் (லூக் 24:13-31). ‘தம்முடைய தலைமைச் சீடரான பேதுருவுக்கும், பின்னர் 12 திருத்தூதர்களின் உள்வட்டத்திற்கும், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர்-சகோதரிகளுக்கும், பின்னர் யாக்கோபுக்கும் தோன்றினார். இறுதியாக, ஆரம்ப கால இயேசுவின் திரு அவையைத் துன்புறுத்திய எனக்கும் தோன்றினார்என்று பவுல் கூறுகிறார் (1கொரி 15:5-7). இவை யாவும் திருவிவிலியத் தரவுகளின் தொகுப்பு. உண்மையை அடிப்படையாகக் கொண்டவை.

மனித வரலாற்றில் நடந்த ஓர் உண்மையான நிகழ்வு இது. கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூலில் எழுதியுள்ளவாறே மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட்டார் (1கொரிந்தியர் 15:3,4). இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றிய வரலாற்றுத் தரவுகள், திருவிவிலியம் வாயிலாக உண்மையானது மற்றும் மேன்மையானது என அறிய முடிகிறது. கிறித்தவம் பிறந்தது கிறிஸ்து பிறந்ததால் அல்ல; அவர் நம் பாவங்களுக்காகச் சிலுவையில் பரிகாரப் பலியாகி, அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்ததால்தான். “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும் (1கொரி 15:14) என்கிறார் பவுல். உயிர்த்தெழுதல் இல்லையென்றால், இயேசு இறந்தோரிலிருந்து எழுப்பப்படவில்லை. இயேசு இறந்தோரிலிருந்து உயிர்த்தெழவில்லை என்றால், மரணம் அவர்மீது அதிகாரம் கொண்டு அவரைத் தோற்கடித்துவிட்டது என்றாகி விடும்.

மரணத்திற்கு இயேசுவின் மீது அதிகாரம் இருந்திருந்தால், அவர் கடவுளின் மகனாக இருந்திருக்க முடியாது. இயேசு கடவுளின் மகனாக இல்லையென்றால், அவர் பாவங்களுக்காக ஒரு முழுமையான பலியாகத் தம்மை ஒப்படைத்திருக்க முடியாது. பாவங்களுக்காக இயேசு ஒரு முழுமையான பலியைச் செலுத்த முடியாவிட்டால், நம்முடைய பாவங்கள் கடவுளுக்கு முன்பாக முழுமையான பரிகாரம் செலுத்தப்படவில்லை என்றால், நாம் இன்னும் பாவங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, இயேசு உயிர்த்தெழவில்லை என்றால், அவரால் நம்மைக் காப்பாற்ற முடியாது. உயிர்த்தெழுதல் என்கின்ற கொள்கை இல்லையென்றால், முழுக் கிறித்தவ வாழ்க்கையும் நகைப்புக்கு உரியதாய் இருந்திருக்கும். மேலும், எதிர்நோக்குவதற்கு இந்த வாழ்க்கையைத் தாண்டி நமக்கு வேறெதுவும் இருந்திருக்காது.

நமக்காக இறப்பதற்கு மட்டுமல்ல, நமது பாவங்களுக்கான தண்டனையான உடல், ஆன்மிக மற்றும் மரணம் ஆகியவற்றிலிருந்து முழுமையாகவும் இறுதியாகவும் வெல்லப்படும் வகையில் நமக்காக மரணத்தை எதிர்கொண்டு, அதைக் கொல்லும் ஒருவர் நமக்குத் தேவை. அவர்தாம் இயேசு கிறிஸ்து! அவரே சிலுவையில் மரித்தபோது, தம்மை நம்புகிற அனைவரின் பாவங்களையும் ஏற்றுக்கொண்டார்.

இயேசு தம்மில் உள்ள அனைவருக்காகவும் மரணத்தின் எதிர்பார்ப்பு, மரண அனுபவம் மற்றும் மரணத்தின் விளைவு ஆகியவற்றை என்றென்றும் முறியடித்தார். “ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!” (1கொரி 15:57) என்று பவுல் கூறுவதில் ஆச்சரியமில்லை.

கிறித்தவம் 2000 ஆண்டுகால விமர்சனத்தைத் தாங்கி நிற்கிறது. நாசரேத்து இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் உண்மையான, நம்பகமான மற்றும் வரலாற்றுக் கணக்கு. அவர் சாதாரண மனிதர் அல்லர்; அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக முழு உலகத்தின் வரலாற்றின் போக்கையே மாற்றிய ஒரு மனிதர்; தெய்வீகத் தோற்றம் மற்றும் மகிமையைக் கொண்ட ஒரு மனிதர்!

எனவே, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவின் பார்வையை நாம் இழந்தால், எல்லா வகையான கேள்விகளாலும் முற்றுகையிடப்படுவோம். சோதனை மற்றும் நம்பிக்கையின்மையால் மூழ்கிவிடுவோம். நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்பதாகச் சொல்லலாம்; ஆனால், உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இல்லாமல் இருந்தால் நாம் பரிதாபத்துக்குரியவர்கள். ஆகவே, உயிர்த்தெழுப்பப்பட்ட மீட்பரின் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை வலுவாகவும் உறுதியாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டும். அப்போது கிறிஸ்து அடைந்த வெற்றியை நாமும் அடைவோம்.

கிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பதே நம் வாழ்வின் உறுதியான நம்பிக்கையாக இருக்கட்டும். ஏனெனில், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு மேன்மையான காரியம். எனவே, நற்கருணை உட்கொள்ளும் ஒவ்வொரு முறையும் இயேசுவின் மரணத்தை மட்டுமல்ல, உயிர்த்தெழுதலையும் நினைவுகூரக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம்.

இந்த உயிருள்ள உணர்வால் நாம் தூண்டப்படும்பொழுதுஎனக்கு உயிர்த்தெழுந்த மீட்பர் இருக்கிறார்; அவர் எனக்காகத் தந்தை கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்; வாழ்க்கையிலோ அல்லது மரணத்திலோ எதுவும் என்னை அவருடைய அன்பிலிருந்து பிரிக்க முடியாதுஎன்கிற நம்பிக்கையின் ஒளி நம்மில் பிறக்கும். ஆகவே, இயேசு வரும்வரை அவரது மரணத்தை அறிக்கையிடுவோம்; அவரது உயிர்ப்பையும் எடுத்துரைப்போம். இதுவே நமது நம்பிக்கையின் மறைப்பொருள்!

news
ஆன்மிகம்
இரக்கத்தின் தூதர்கள் நாம்!

இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார்.  எனவே, நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம் (2கொரி 5:18,20).

உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமையைஇறை இரக்கத்தின் ஞாயிறுஎனக் கொண்டாடுகிறோம். மனிதர்கள் கையிட்டுக் கடவுளுடைய இதயத்தைத் தொடும் அளவுக்குக் கடவுள் மனுக்குலத்தோடு நெருக்கமாகிறார். இறைவனின் அளப்பரிய இரக்கமே இந்த நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. கடவுளுடைய இரக்கத்தை நாம் அனுபவிப்பதும் அறிவிப்பதும் எப்படி? இப்பணியைச் செய்வதற்காகச் சிறப்பாக ஏற்படுத்தப்பட்டஇரக்கத்தின் தூதர்கள்யார்? என்னும் கேள்விகளுக்கு விடை தேடுவதுடன், நம் குடும்பங்களிலும் பங்குத்தளங்களிலும் சமூகத்திலும் நாம் அனைவருமேஇரக்கத்தின் தூதர்கள்ஆவோம்.

) ‘இரக்கத்தின் தூதர்கள்- என்ன? யார்? ஏன்?

இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் (2015-2016) ஒரு நிகழ்வாகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2016, பிப்ரவரி 10 அன்று, 800 அருள்பணியாளர்களைஇரக்கத்தின் தூதர்கள்என்று நியமித்து உலகெங்கும் அனுப்பினார். இவர்களில் 17 பேர் இந்தியர்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 அருள்பணியாளர்கள்  இரக்கத்தின் தூதர்களாகப் பணியாற்றுகிறார்கள்: 1. அருள்பணி. அருள் அம்புரோஸ் (பாளையங்கோட்டை), 2. அருள்பணி. நித்திய சகாயம் ஆண்டனி (கப்புச்சின் சபை), 3. அருள்பணி. லியோ வில்லியம் (சேலம்),  4. அருள்பணி. ஜோசப் மைக்கேல் செல்வராஜ் () ஜோமிக்ஸ் (பாளையங்கோட்டை), 5. அருள்பணி. பன்னீர்செல்வம் செல்வராஜ் (சேலம்),  6. அருள்பணி. யேசு கருணாநிதி (மதுரை).

இவர்களுக்கு இரண்டு பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன) ‘இரக்கம்பற்றிய சிறப்பு மறையுரைகள் ஆற்றுவது) சிறப்பு ஒப்புரவு அடையாளக் கொண்டாட்டங்களை நிகழ்த்துவது.

இந்தக் கொண்டாட்டத்தில் திருத்தந்தை மட்டுமே மன்னிக்கும் அதிகாரத்துக்கு உள்பட்ட ஐந்து பாவங்களை மன்னிப்பதற்கான அதிகாரம் இவர்களுக்கு வழங்கப்பட்டது. ‘புனிதப் பொருள் அவமதிப்புச் செய்தல் - நற்கருணையை அதற்குரிய இடத்திலிருந்து அகற்றுதல் அல்லது அதற்குரிய மதிப்பைத் தராமல் இருத்தல், திருத்தந்தைக்கு எதிராகக் கை ஓங்குதல், ஆறாம் கட்டளைக்கு எதிரான பாவத்தில் தன்னோடு உடனிருந்தவரை அருள்பணியாளரே மன்னித்தல், ஒப்புரவு அருளடையாளத்தின் முத்திரையை உடைத்தல், அதாவது ஒப்புரவு அருளடையாளத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்ட ஒன்றை அருள்பணியாளர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மற்றொருவரிடம் வெளிப்படுத்துதல் மற்றும் ஒப்புரவு அருளடையாளத்தில் அருள்பணியாளர் அல்லது பாவ அறிக்கை செய்பவர் பகிர்ந்துகொள்வதை ஒலி அல்லது ஒளி வடிவில் பதித்து, அதைப் பரவலாக்கம் செய்தல் என்பவையே சிறப்பு அதிகாரத்திற்கு உட்பட்ட பாவங்கள்.

மேற்காணும் ஐந்து பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தினை இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதியில் அனைத்து அருள்பணியாளர்களுக்கும் வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். எனினும், ‘இரக்கத்தின் தூதர்கள்என்னும் அருள்பணியாளர்கள் அவர்களுக்குரிய சிறப்பு நிலையைப் பெற்றுள்ளார்கள்.

2022-ஆம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் உரோமையின் திருப்பேராயங்களை நெறிப்படுத்தும்நற்செய்தியை அறிவியுங்கள்!’ (‘ப்ரெதிகாத்தே எவான்ஜெலியும்) என்னும் ஆணையை வெளியிட்டார். அதில்இரக்கத்தின் தூதர்கள்அகில உலகத் திரு அவையில் ஆற்ற வேண்டிய நற்செய்திப் பணியை வலியுறுத்துவதோடு, இவர்களைத் திரு அவையின் அதிகாரப்பூர்வ சிறப்புப் பணியாளர்களாக அறிவிக்கிறார்: “இறை இரக்கத்தை அறிவிப்பதன் வழியாகவே நற்செய்தி அறிவிப்பு நடக்கிறது. இரக்கத்தின் தூதர்கள் ஆற்றுகிறச் சிறப்புப் பணி நற்செய்தி அறிவிப்புக்குத் துணை செய்கிறது (எண். 59.2).

எதிர்நோக்கு ஏமாற்றம் தருவதில்லைஎன்னும் யூபிலி 2025 அறிவிப்பு ஆணையிலும் இவர்களுடைய பணியின் முக்கியத்துவத்தைத் திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுகிறார்: “கடந்த சிறப்பு யூபிலி ஆண்டில் நான் இரக்கத்தின் தூதர்களை ஏற்படுத்தினேன். அவர்கள் ஒரு முதன்மையான பணியைத் தொடர்ந்து செய்கிறார்கள். எதிர்நோக்கைப் புதுப்பிப்பதன் வழியாகவும் திறந்த மனத்தோடும் நொறுங்குண்ட உள்ளத்தோடும் தங்களிடம் வருகிற பாவிக்கு மன்னிப்பை வழங்குவதன் வழியாகவும் வருகிற யூபிலி ஆண்டில் அவர்கள் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்வார்களாக! தந்தையின் இரக்கத்தினால் தூண்டப்படும் இதயம் நிறை எதிர்நோக்கை வழங்குவதால் ஒப்புரவின் ஊற்றாகவும், நல்ல எதிர்காலத்தைக் காண்கிற உற்சாகத்தை நமக்குத் தருபவர்களாகவும் விளங்குவார்களாக! அவர்களுடைய இந்த மேன்மையான பணியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆயர்களை அழைக்கிறேன். எதிர்நோக்குச் சோதிக்கப்படும் இடங்களுக்கு - சிறைச்சாலைகள், மருத்துவமனைகள், மக்களின் மாண்பு சிதைக்கப்படும் இடங்கள், வறுமையும் சமூகச் சீரழிவும் மிகுந்திருக்கும் இடங்களுக்கு  அவர்களை அனுப்புங்கள். இந்த யூபிலி ஆண்டில், கடவுளின் மன்னிப்பையும் ஆறுதலையும் பெறுகிற வாய்ப்பு யாருக்கும் மறுக்கப்பட வேண்டாம் (எண். 24).

தூதர்கள்என்னும் சொல்லைத் திருத்தந்தை பிரான்சிஸ் கூட்டியக்கத்திற்கான மாமன்றத்தின் இறுதி ஆவணத்தில்கூட்டியக்கத்தின் தூதர்கள்என்று பயன்படுத்தி அனைவரையும் இணைந்து பயணிக்க அழைக்கிறார் (கூட்டியக்கத்திற்கான மாமன்றம், இறுதி ஆவணம், எண்கள் 9, 11, 155).  இரக்கத்தின் தூதர்களுடைய சிறப்பான பணியைப் பின்வருமாறு வரையறுக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்: “மன்னிப்பைத் தேடிவருகிற அனைவரையும் வரவேற்கும் தந்தையைப்போல இருங்கள்! நீங்கள் அனைவரும் வரவேற்கிற தந்தையின் அடையாளங்கள் (இரக்கத்தின் முகம், 18). ஒப்புரவு அருளடையாளத்தையும் தாண்டி, இரக்கத்தை அறிவித்தல், மேய்ப்புப்பணியில் உடனிருத்தல், இரக்கத்தின் பண்பாட்டை வளர்த்தல் போன்றவற்றில் ஈடுபட அவர்களை அழைக்கிறார்.

) கடவுளின் பெயர்இரக்கம்

விப 34:6-இல் ஆண்டவராகிய கடவுள் தம் பெயரை மோசேவுக்கு வெளிப்படுத்தும் நிகழ்வில்ஆண்டவர்! இரக்கமும் பரிவும் உள்ள இறைவன். சினம்கொள்ளத் தயங்குபவர், பேரன்பு மிக்கவர், நம்பிக்கைக்குரியவர்என்று அறிவிக்கிறார். நீதி அல்லது அதிகாரத்தை அடிப்படையாக அல்ல; மாறாக, இரக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது ஆண்டவருடைய பெயர். இரக்கம் என்பது கடவுளுடைய பண்புகளுள் ஒன்று அல்ல; மாறாக, அது கடவுளுடையதான்மைஅல்லதுஅடையாளம்ஆகும்.

திருவிவிலியத்தின் பல பகுதிகள் ஆண்டவராகிய கடவுளின் இரக்கத்திற்குச் சான்றாக அமைகின்றன. தன் குழந்தையை மறந்துபோகாத ஒரு தாயின் அன்பைப் போல கடவுளின் அன்பு இருக்கிறது (எசா 49:15). ‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு (திபா 136) என்று கடவுளின் இரக்கத்தை நமக்கு நினைவுறுத்துகிறது. கடவுள் நீதியின்படி தங்களைத் தண்டித்துவிட்டார், பாபிலோனிய அடிமைத்தனத்திற்குத் தங்களை விற்றுவிட்டார் என்று யூதா நாட்டினர் புலம்பும் நேரத்திலும்கூட எதிர்நோக்கு அங்கே ஒளிர்கிறது: “ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்துபோகவில்லை! காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன!” (புலம்பல் 3:22-23).

புதிய ஏற்பாட்டில்காணாமற்போன மகன்உவமை (லூக் 15) மற்றும்நல்ல சமாரியன்உவமை (லூக் 19) என்னும் இயேசுவின் போதனைகள் கடவுளின் பரிவுள்ளத்தை எடுத்துரைப்பதோடு, கடவுளைப்போல பரிவு காட்டவும் நம்மை அழைக்கின்றன. விபசாரத்தில் பிடிபட்ட பெண்மேல் இரக்கம் காட்டுகிறார் இயேசு (யோவா 8:1-11). பரிவு கொண்டு நோயுற்றவர்களைக் குணமாக்குகிறார் (மத் 14:14). எருசலேமுக்காகக் கண்ணீர் விடுகிறார் (லூக் 19:41-44). இறப்பு என்னும் எதார்த்தத்தின்முன் மானிடர் அனுபவிக்கிற வலுவற்ற நிலையை எண்ணிப் பார்த்து இலாசருக்காகக் கண்ணீர் விடுகிறார் (யோவா 11:35). இறுதியாக, சிலுவையில் தொங்கியபோது அனைவரையும் மன்னிக்கிறார் (லூக் 23:34).

ஆகவே, இயேசுவின் போதனைகளும் செயல்களும் அவரை ஓர் இரக்கத்தின் தூதராக நம் முன்னிறுத்துவதோடு, அவரைப்போல அனைவருக்கும் இரக்கம் காட்ட நம்மைத் தூண்டுகின்றன.

) இரக்கத்தில் கனியும் நீதி

திராட்சைத் தோட்டப் பணியாளர் உவமையில் (மத் 20:1-16), காலை 6 மணி முதல் மதியம் 3 மணி வரை பணிக்கு வந்தவர்களுக்குநீதியின்அடிப்படையில் ஒரு தெனாரியம் வழங்குகிறார் நிலக்கிழார். மாலை 5 மணிக்கு வந்து வெறும் ஒரு மணி நேரமே வேலை செய்தவர்களுக்குஇரக்கத்தின்அடிப்படையில் அவர் ஒரு தெனாரியம் வழங்குகிறார். நீதிக்கும் இரக்கத்திற்கும் பொருந்தாமை அல்லது முரண் இருப்பதை நாம் காண்கிறோம். கடவுள் ஏன் ஒருசிலரை நீதியின் அடிப்படையிலும், இன்னும் சிலரை இரக்கத்தின் அடிப்படையிலும் நடத்துகிறார்? என்னும் கேள்வி நம்மில் எழுகிறது.

மேலும், ‘காணாமற்போன மகன்உவமையில் (லூக் 15) இளைய மகன் திரும்பி வந்தவுடன் தந்தை விருந்து அளித்து மகிழ்கிறார். தந்தையின் இச்செயல் மூத்த மகனுக்கு நெருடலாக இருக்கிறது. நினிவே நகர்மேல் இரக்கம் காட்டிய கடவுள்மேல் கோபம் கொண்ட இறைவாக்கினர் யோனாபோல (யோனா 4:1-11) தந்தையின்மேல் கோபம் கொள்கிறார் மூத்த மகன். வீட்டுக்குள் நுழைய மறுக்கிறார். வீட்டுக்கு வெளியே வந்து அவரை உள்ளே அழைக்கிற தந்தைநாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டியது முறையே!’ என்கிறார். நீதியின்படிமுறை இல்லைஎன்று நாம் நினைப்பது இரக்கத்தின் கண்கொண்டு பார்க்கும்போது முறை என்றாகிறது.

நம் உறவு நிலைகளில் பல நேரங்களில் நாம் நீதியின் அடிப்படையில் செயல்படுவதாக நினைத்துக்கொண்டு மற்றவர்கள்மேல் கோபமும் வன்மமும் பகைமையும் பாராட்டுகிறோம். கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் இரக்கம் காட்டுவது நீதிச் செயலே. மாலை ஐந்து மணிக்கு வேலைக்கு வந்தவர் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்தார் என்று கணக்கு பார்ப்பது நீதியான செயலே. அதே வேளையில், அவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் ஒரு தெனாரியம் தேவை என்று இரக்கம் காட்ட வேண்டியதும் நீதியின் செயலே. அவரிடம் கணக்குப் பார்க்க வேறு ஒன்றும் இல்லை. சொத்துகளை இழந்து பசியோடு வீடு திரும்புகிற இளைய மகன் கைகள் வெறுமையாயிருக்கக் கண்டு அவர்மேல் கோபம் கொள்வது நீதியான செயலே. ஆனால், அவர்மேல் கோபம் கொள்வதால் அவர் சொத்துகளை மீண்டும் கொண்டு வந்து சேர்த்துவிடுவாரா? வலுவற்ற நிலையில் நிற்கிற அவர்மேல் இரக்கம் காட்டுவதும் நீதிதானே!

இரக்கம் காட்டிச் சலித்துப் போனேன்!” என்று ஆண்டவராகிய கடவுளும் இஸ்ரயேல் மக்கள்மேல் சில நேரங்களில் கோபம் கொள்கிறார் (எரே 15:6). வலுவற்றவர்கள்மேல் இரக்கம் காட்டும்போது நாம் வலுவற்றவராகிறோம். நல்ல சமாரியன் உவமையில், சாலையில் குற்றுயிராய்க் கிடந்தவரைக் கண்டு கழுதையிலிருந்து கீழே இறங்குகிற சமாரியர் தன்னையே வலுவற்ற நிலைக்கு உட்படுத்துகிறார். ஏனெனில், அவரையும்கூட கள்வர்கள் வந்து கொள்ளையிட நேரிடலாம். ‘இவருக்கு இதைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?’ என நினைத்தால் அது வியாபாரம். ஆனால், ‘இவருக்கு இதைச் செய்யாவிட்டால் அவருக்கு என்ன ஆகும்?’ என நினைத்தால் அது பரிவு. நல்ல சமாரியர் பரிவு கொள்கிறார்.

இன்று நம் வாழ்வில் நாம் இரக்கம் காட்டும்போது நாம் ஏமாற்றப்படலாம்; மற்றவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம்; மற்றவர்கள் நமக்குப் பதிலிரக்கம் காட்டாமல் போகலாம்; இருந்தாலும் நாம் இரக்கம் காட்ட வேண்டும்.

) நாம் அனைவரும் இரக்கத்தின் தூதர்களே!

திருத்தந்தையால் அனுப்பப்பட்ட அருள்பணியாளர்கள் மட்டுமல்ல, நாம் அனைவருமே இரக்கத்தின் தூதர்களே. ஒருவர் மற்றவரை மன்னிக்கும் போதும், பரிவு, கனிவு என்று நம் கரங்களை வலுவற்றவர்கள் நோக்கி நீட்டும்போதும், பகைமையால் புரிதலின்மையால் அந்நியப்பட்டு நிற்பவர்கள் இடையே ஒப்புரவை ஏற்படுத்தும்போதும் நாம் அனைவரும் இரக்கத்தின் தூதர்களே.

இறை இரக்கத்தின் திருநாளைக் கொண்டாடுகிற நாம், கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட இரக்கத்தை ஒருவர் மற்றவருக்கு வழங்க முயற்சி செய்வோம். ஏனெனில்நீரும் போய் அவ்வாறே செய்யும்!” (லூக் 10:37) என்பதே இயேசுவின் கட்டளையாக இருக்கிறது.

news
ஆன்மிகம்
வாழ்ந்து வழிநடத்தும் உயிர்த்த இயேசு!

அண்மையில் ஒரு பிரபலமான பத்திரிகையில் வந்த செய்தி. புத்தரின் இறுதி நாள்கள். அவரது சீடர்களில் ஒருவரான ஆனந்தன் அழுதவண்ணமாக இருந்தார். புத்தர் அவரிடம், “கலங்காதே ஆனந்தா! மரணத்திற்குப் பின்னும் நான் உங்களோடுதான் இருப்பேன்என்றாராம். உலக வரலாற்றிலும் மானுடம் தொடர் சங்கிலியாகப் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஒருவனுடைய பெற்றோர் இறந்தும் இறவாதவர்களாக இருக்கின்றனர். ஏனெனில், தங்கள் பிள்ளைகள் வழியாக வாழ்ந்துகொண்டு, தங்கள் நற்பண்புகளின் வழியாக வழிகாட்டுகின்றனர். பிற சமயத்தவரும்கூட தங்கள் முன்னோர்களின் உடனிருப்பை, முக்கியமாக அவர்கள் இறந்த நாள்களில் நினைவு கூர்ந்து, அவர்களுக்குப் பிடித்தமான பொருள்களைக் கொண்டு தர்ப்பணம்செய்கிறார்கள். யூதச் சமயத்திலும்கூடமேன்மை பொருந்திய நம் முன்னோர்களை மறவாது புகழஞ்சலி செலுத்துவோம் (சீராக் 44:1) என்று சீராக்கின் ஞானாகமம் கூறுகின்றது. இதனடிப்படையில் நற்செய்தி நூல்களும், இறைவன் இயேசு மண்ணில் பிறந்து, மக்களுக்காகத் தம்மைச் சிலுவையில் கையளித்து, உயிர்த்து எழுந்து, நம்முடன் இருந்து செயல்பட்டு நம்மை வழிநடத்துகிறார் (மாற் 16:20) என்பதை எடுத்துரைக்கின்றது.

திரு அவை ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பாஸ்கா மறைநிகழ்வைக் கொண்டாடுகின்றது. இது ஒரு வரலாற்று நிகழ்வின் நினைவுக் கொண்டாட்டமல்ல; நமது வாழ்வை மறுவாசிப்புச் செய்ய அழைப்பு விடுக்கும் ஆன்மாவின் வசந்தகாலம். இதன் சிறப்பைச் சுட்டிக்காட்டும் விதமாகப் புனித அத்தனாசியுஸ், கிறிஸ்துவின் பாஸ்கா விழாவானது மற்ற கிறித்தவ விழாக்களுக்கெல்லாம் முத்தாய்ப்பாக விளங்குகிறதுஎன்றார். “பரிவுமிக்க நம் கடவுள், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்து, நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார் (1 பேது 1:3) என்கிறார் பேதுரு.

மக்களின் கலங்கரை விளக்கான இயேசு

இவ்வுலகில் தோன்றியப் பல கோடி மக்களிடையே விண்மீன்களாகத் தோன்றி மறைந்தவர் பலர். யாரும் பிறர் வாழத் தனக்குத் தெரிந்து தன் உயிரை இழக்கத் தயாராக இருப்பதில்லை. ஆனால், இயேசு ஒருவர் மட்டுமே இறப்பையும் எதிர்கொள்ளத் தயங்கவில்லை. அவர் சாவு நமக்கு வாழ்வானது (His death has become our life). இயேசு தன்னிலை விளக்கமாக, “வாழ்பவரும் நானே, நான் இறந்தேன்; ஆயினும் இதோ, என்றென்றும் வாழ்கின்றேன் (திவெ 1:18) என்கிறார். இன்னும் இரத்தினச் சுருக்கமாக, “நான் வாழ்கிறேன், நீங்களும் வாழ்வீர்கள் (யோவா 14:19) என்று கூறுகின்றார். “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார் (யோவா 8:12) என்று தாம் உலகிற்கு ஒளிவிளக்காகத் திகழ்வதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

திருவிவிலியத்தில் உயிர்த்தக் கிறிஸ்துவைச் சந்தித்தவர்களுள் எம்மாவு சீடர்களும் அடங்குவர். அவர்கள் இதயமும், ஏன் அவர்கள் பயணித்த வேளையில், காரிருள் சூழ்ந்திருக்க இயேசு அவர்கள் முன்னின்று ஒளிரும் தீபமாக வழிநடத்தினார் (லூக் 24:29-32). மேலும், அவரது சீடர்களுக்கும் அப்பாற்பட்டுத் தங்கள் இறையனுபவத்தால் கிறிஸ்துவைச் சந்தித்து வழிநடத்தப்பட்ட எண்ணிலடங்காப் பலரைத் திரு அவை அங்கீகரித்துள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், கி.பி. 5-ஆம் நூற்றாண்டில் திசைமாறிய பறவையாக, பாவச் சேற்றிலே வாழ்ந்த புனித அகுஸ்தினார், “இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்துவிட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டு, பகலில் நடப்பதுபோல் மதிப்புடன் நடந்துகொள்வோம். குடிவெறி, கூடா ஒழுக்கத்தைத் தவிர்ப்போம் (உரோ 13:12-13) என்ற இறைவார்த்தைகளால் தொடப்பட்டு, திரு அவையில் சிறந்த ஓர் ஆயராக, மறைவல்லுநராக மாறி, திரு அவையை வழிநடத்தினார் என்கிறது திரு அவை வரலாறு.

அதேபோன்று, 16-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், உயிர்த்த ஆண்டவரை இறைவார்த்தையாலும் திருப்பலி வழியாகவும் தியானங்களில் அகவழிப் பயணம் செய்து இயேசுவைச் சந்தித்து மனமாற்றம் பெற்றார். இயேசுவின் இதயத்திற்கேற்ற மேய்ப்பனாக மாறி (எரே 3:15), சோர்ந்துபோயிருந்த திரு அவைக்குப் புத்துணர்வையும் புதிய வழிகாட்டுதலையும் அமைத்துக் கொடுக்கும் இயேசு சபையின்நிறுவுநராகி, திரு அவையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டார் புனித லொயோலா இஞ்ஞாசியார்.

மறுபுறம், இயேசு கிறிஸ்துவின் வாழ்வாகும் வார்த்தையால் தொடப்பட்டவர் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் வாழ்ந்த டெரிக் ஃபோன்ஹோவர் என்னும் பிரிவினை சபை அருள்பணியாளர். அக்காலகட்டத்தில் நாசிசக் கொள்கையால் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த அடால்ப் ஹிட்லருக்கு எதிராகக் குரல் கொடுத்ததால் சிறையில் பல துன்பதுயரங்களை அனுபவித்து 1945-இல் தூக்கிலிடப்பட்டார் என்பதைகிறித்தவத்திற்கு உன் உயிர்தான் விலை (The cost of discipleship) என்னும் புத்தகத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

 கால வரலாற்றின் நீரோட்டத்தில் இயேசுவுடன் ஒன்றாகி, மக்களுக்காக வாழ்ந்து இறந்தோர் ஏராளம். அன்னை தெரசா, அருள்சகோதரி இராணி மரியா, பேராயர் ஆஸ்கர் ரொமேரோ, தேவசகாயம், ஸ்டான் சுவாமி போன்றோரைக் குறிப்பிடலாம். மேலும், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, இரவீந்திரநாத் தாகூர் போன்ற மாமனிதர்களையும் இயேசு தமது வார்த்தைகளால் ஆட்கொண்டார் என்பதும் வரலாறு. நாமும் இயேசுவை முன்மாதிரியாகக் கொண்டு, அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி வாழ அழைக்கப்படுகிறோம்.

இயேசு திருப்பணியாற்றிய நாடுகளில் யோர்தானும் ஒன்று. அங்குப் புறப்படும் யோர்தான் ஆறு, யோர்தான் பள்ளத்தாக்கைச் செழிப்படையச் செய்து, கலிலேயா கடலில் மீண்டும் சங்கமமாகி, செல்லுமிடமெல்லாம் பசுமைப் புரட்சியை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், யோர்தான் ஆற்றில் பிரியும் மற்றொரு நீரோட்டமோ சாக்கடலில் (Dead Sea) கலந்து ஆண்டாண்டு காலமாகப் பயனற்றதாக, தனக்கு வரும் நீரை உயிர்வாழ முடியாத அளவிற்கு உவர்ப்புள்ளதாக மாற்றி, ஒன்றுக்கும் உதவாததாக (சாக்கடல் = சாவும் கடலாக) இன்றும் மாற்றிக் கொண்டுள்ளது. உயிர்த்த ஆண்டவரிடம் ஆற்றல் பெற்ற தெய்வீக நீரோட்டம் நம்மில் எவ்வாறு செயல்படுகின்றது? உயிராற்றல் மிக்க நீரூற்றாகவா? அல்லது உயிர்வாழ முடியாத உவர்ப்புள்ளதாக உள்ளதா?

ஆப்பிரிக்கப் பாலைவனத்தில்ஜெரிக்கோ ரோஸ்என்ற தாவரம் உண்டு. தண்ணீர் இல்லாவிட்டாலும், மணலுக்குள் தன்னையே புதைத்துக் கொண்டு தூக்க நிலையிலேயே பல ஆண்டுகள் உயிர் வாழும். மழைத்துளி விழுந்த மறுநிமிடமே துளிர்க்க ஆரம்பித்து விடும். இதற்குஉயிர்த்தெழும் தாவரம்என்று மற்றொரு பெயரும் உண்டு. இவ்வாறுபட்டுப்போன செடியேஉயிர்க்கும்போது, இயேசு நமக்காய் உயிர் தந்து, நம்மை மீட்டு, புதுவாழ்வுக்கு வழிநடத்தும் தீபமாக இருக்கின்றார் என்பதை மகிழ்வுடன் ஏற்போம். உயிராற்றல் மிக்க இயேசுவைச் சந்தித்து, எதிர்நோக்கின் பயணிகளாய் வாழ்ந்து, 2025-ஆம் யூபிலி ஆண்டின் கருப்பொருளாகிய மன்னிப்பு என்னும் பண்பிற்குச் செயல்வடிவம் கொடுப்போம். உயிர்த்த ஆண்டவர் வழங்கும் அமைதியின் தூதர்களாக மாறுவோம். ‘அல்லேலூயாகீதம் ஒலிக்கும் மக்களாக வாழ்வோம்.

அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துகள்!

news
ஆன்மிகம்
அவர்தம் காயங்களால் குணமடைந்துள்ளோம்!

நான்கு நற்செய்தியாளர்களும் இயேசு சிலுவையில் அறையப்பட்டதைப் பற்றிய தரவுகளைக் கொடுக்கின்றனர். ஆனால், ஒவ்வொரு நற்செய்தியாளரும் தனித்துவமான விவரங்களையும் கண்ணோட்டங்களையும் வழங்குகின்றனர். குறிப்பாக, யோவான் நற்செய்தியாளர் இயேசுவின் விலாப்பகுதியில் குத்தப்பட்ட நிகழ்வைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார் (யோவா 19:31-37). கூடுதலாக, உயிர்த்தெழுந்த ஆண்டவர் தம்முடைய சீடர்களுக்குத் தம் கைகள், கால்கள் மற்றும் விலாவைக் காட்டி, அந்தக் காயங்களைத் தொடும்படி அவர்களை அழைப்பது (லூக் 24:39) மற்றும் இயேசுவின் ஐந்து மகிமையான காயங்களின் முக்கியத்துவத்தை (யோவா 20: 20,27) மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்தக் காயங்களைப் பற்றித் தியானிப்பது நமது நம்பிக்கையையும் ஆன்மிகத்தையும் ஆழப்படுத்தும்.

ஐந்து மகிமையான காயங்களுக்கான காரணங்கள்

புனித தாமஸ் அக்குவினாஸ் ஐந்து மகிமையான காயங்களுக்கான ஐந்து காரணங்களை விளக்குகிறார்:

ஐந்து மகிமையான காயங்கள் இயேசு கிறிஸ்துவின் மகிமையைக் குறிக்கின்றன. புனித பீட் (St. Bede) கூறுவார்: “கிறிஸ்து தமது காயங்களைத் தக்க வைத்துக்கொள்வது, அவற்றை அவரால் குணப்படுத்த முடியாது என்பதால் அல்ல; மாறாக, அவர் அவற்றை அவரது வெற்றியின் நிலையான கோப்பையாக அணிந்திருக்கிறார்.”

இயேசுவின் மகிமையான காயங்கள் திருத்தூதர்களின் இதயங்களை வலுப்படுத்தி, அவருடைய உயிர்த்தெழுதலில் அசைக்க முடியாத நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது (லூக் 24:40).

அவருடைய மகிமையான காயங்களைத் தந்தையாகிய கடவுளிடம் ஒப்படைத்து, நமக்காகத் தொடர்ந்து பரிந்துபேசுகிறார் என்பதன் அடையாளம்.

மகிமையான காயங்கள் அவருடைய இரத்தத்தில் மீட்கப்பட்டவர்கள் எந்தளவு இயேசுவின் இரக்கத்தைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இந்த மகிமையான காயங்கள் மூலம் இறுதித் தீர்ப்பில் நம்பிக்கையற்றவர்களுக்குக் கிடைக்கும் நியாயமான கண்டனத்தின் அடையாளம்.

ஐந்து மகிமையான காயங்களைப் பற்றிய சிந்தனைகள்

1. ‘வலது கரத்தின் காயமே... அழகு நிறைந்த இரத்தினமே... அன்புடன் முத்தி செய்கிறேன்

ஆற்றல், மரியாதை மற்றும் செல்வாக்கைக் குறிப்பது வலது கரம். திருமணத்தில் வலது கரம் பிடித்தல், வலது கரத்தினால் ஆசிர்வாதம் செய்தல், கொடுத்தல் என்பதன் சிறப்பு அம்சங்கள் யாவரும் அறிந்ததே. எது இயேசுவின்  வலது கரத்திற்குக் காயத்தைக் கொடுக்கிறது? பணிவு இல்லாத ஆற்றல் - Power without service. நமது ஆற்றலை அல்லது அதிகாரத்தைச் சுய இலாபத்திற்காக அல்லது சுயநலத்திற்காகப் பயன்படுத்துவது இயேசுவின் வலது கரத்தைக் காயப்படுத்துகிறது. திருவிவிலியத்தில் சிறந்த உதாரணம்: நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைத் தன்னுடைய ஆற்றலால் பறிக்க நினைத்த ஆகாபு  அரசன். நாபோத் தன் திராட்சைத் தோட்டத்தைக் கொடுக்காததற்கு இரண்டு காரணங்கள்: 1) மூதாதையரின் உரிமைச் சொத்தை விற்பது ஆண்டவரின் விருப்பத்திற்கு எதிரானது.

2) சட்டப்படி அவருடைய சொத்தை விற்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால், ஆகாபு செய்தது என்ன? நாபோத் இறந்து போனதைக் கேட்டு அவருடைய திராட்சைத் தோட்டத்தைத் தன்னுடைய உடைமையாக்கிக்கொள்ளப் புறப்பட்டுப் போனான் (1அர 21:16). ஆகாபின் இறுதி நிலை யாவரும் அறிந்ததே (1அர 22:38).

2. ‘இடது கரத்தின் காயமே, கடவுளின் திரு  அன்புருவே...... அன்புடன் முத்தி செய்கிறேன்

வலது கரம் பலத்தைக் குறிக்கிறது எனில், இடது கரம் பலவீனத்தை, வலுவின்மையைக்  குறிக்கும். புனித பவுல் ஊனியல்பின் செயல்பாடுகளைப் பட்டியலிடுவார்: “பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை, சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும் (கலா 5:19-21). என் பலவீனம் அல்லது வலுவின்மை என்ன? சினம் கொள்ளுதலா? பழிவாங்கும் எண்ணமா? மன்னிக்க இயலாத நிலையா? எது இயேசுவின்  இடது கரத்திற்குக் காயத்தைக் கொடுக்கிறது? நம் வலுவின்மை அல்ல; மாறாக, நம் வலுவின்மை எதிர்நோக்கு இல்லா வலுவின்மையாக (Weakness without hope) மாறும்பொழுது, ஆண்டவருடைய இடது கரத்திற்குக் காயத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

புனித பவுலின் வலுவின்மை, தன் உடலில் தைத்த முள்போல் தன்னை வருத்திக் கொண்டிருந்த ஒன்று. அதை நீக்கியருளுமாறு மூன்று முறை கடவுளிடம் வேண்டுகிறார். ஆனால், ஆண்டவர் அதை எடுத்துவிடவில்லை; மாறாகஎன் அருள் உனக்குப் போதும்எனக் கூறி அந்த வலுவின்மையை வல்லமையாக மாற்றுகிறார் (2கொரி 12:7-10).

பேதுருவின் வலுவின்மை ஆண்டவரை மூன்று முறை மறுதலித்தல்; யூதாசின் வலுவின்மை ஆண்டவரைக் காட்டிக்கொடுத்தல். இதில் வேறுபாடு என்னவென்றால், தன் வலுவின்மையிலிருந்து வல்லமை பெற ஆண்டவரைத் தேடினார் புனித பேதுரு. ஆனால், யூதாஸ் வலுவின்மையில் தன்னை மட்டுமே தேடினான். அதன் விளைவு நாம்  அறிந்த ஒன்றே.

3. ‘வலது பாதக் காயமே, பலன் மிகத் தரும் நற்கனியே....... அன்புடன் முத்தி செய்கிறேன்

வலது பாதம் என்பது நீதியை நிலைநாட்ட ஆர்வம் கொண்டிருத்தலைக் குறிக்கும். எது இயேசுவின் வலது பாதத்திற்குக் காயத்தைக் கொடுக்கிறதுஇரக்கமற்ற நீதி (Justice Without Mercy). நீதி மறுக்க முடியாத அளவுக்கு இன்றியமையாதது என்றாலும், “இரக்கமற்ற நீதி கொடுமைஎன்று புனித தாமஸ் அக்குவினாஸ் வேதனையுடன் குறிப்பிடுகிறார். விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணின் கதையில் நீதியைத் தாண்டிய இரக்கத்தின் ஆழமான விளக்கத்தைக் காணலாம் (யோவா 8:1-11). ஒருபுறம் நீதியின் பாதுகாவலர்களாகத் தங்களையே முன்னிறுத்தும் மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் மோசேயின் சட்டத்தை நிலைநிறுத்த இரக்கமற்ற நீதியின்பால் நிற்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, வெறும் நீதியின் வரம்புகளைக் கடந்து இரக்கத்தின் உருவகமான இயேசு மறுபுறம் நிற்கிறார். இறுதியில் வென்றது இரக்கத்தையும் மனிதாபிமானத்தையும் புதைக்கும் நீதி அல்ல; மாறாக, நீதியைத் தாண்டிய இரக்கம்: “நீர் போகலாம்.”

4. ‘இடது பாதக் காயமே, திடம் மிகத் தரும் தேனமுதே....... அன்புடன் முத்தி செய்கிறேன்

இடது பாதம் என்பது திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொரு கிறித்தவர்களின் சாட்சிய வாழ்வை முன்னிலைப்படுத்துகிறது. யோசுவாவின் யாவே இறைவனைக் குறித்த சாட்சியம் சிறந்த உதாரணம்: “ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால், நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம் (யோசுவா 24:15). எது இயேசுவின் இடது பாதத்திற்குக் காயத்தைக் கொடுக்கிறது? சான்றுபகராக் கிறித்தவ வாழ்வே! (Christian life without witness).

திருத்தூதர் பணிகள் 1:8 - “நீங்கள் என் சாட்சிகள்.”

யோவான் 1:1 - “நாங்கள் கண்ணால் பார்த்ததை, தொட்டு உணர்ந்ததை அறிவிக்கிறோம்.” 

திருத்தந்தை பிரான்சிஸ் கூறுகிறார்Not I have a mission, but I am the mission.” நானே ஒரு நற்செய்திப் பணியாக மாற வேண்டும். எப்பொழுதெல்லாம் கிறித்தவ வாழ்க்கை சாட்சிய வாழ்க்கையாக இல்லையோ, அப்பொழுதெல்லாம் இயேசுவின் இடது பாதத்தில் காயத்தை உண்டாக்குகிறோம்.

5. ‘திருவிலாவின் காயம் அருள் சொரிந்திடும் ஆலயமே....... அன்புடன் முத்தி செய்கிறேன்

இயேசுவுக்கு ஏற்பட்ட காயங்களில் மிகப்பெரிய காயம் திருவிலாவின் காயம். இயேசு தோமாவிடம்இதோ! என் கைகள்! இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்என்றார் (யோவான் 20:27). இயேசு தோமாவைப் பார்த்து விரலை அல்ல, கையை நீட்டிஎன் விலாவில் இடுஎன்கிறார். ஒருவேளை கை செல்லும் அளவுக்கு அந்தக் காயம் பெரியதாக இருந்திருக்கும். எது இயேசுவின் திருவிலாக் காயத்தைக் கொடுக்கிறது? விண்ணகம் இல்லா மண்ணக வாழ்வு - Earth without heaven. எப்பொழுதெல்லாம் நாம் வாழ்கின்ற மண்ணக வாழ்வு விண்ணகத்தை நோக்கியப் பயணமாக இல்லாமல் இருக்கிறதோ, அப்பொழுதெல்லாம் ஆண்டவருக்கு மிகப்பெரிய காயத்தினைக் கொடுக்கிறோம்.  “நீங்கள் இயேசு கிறிஸ்துவோடு உயிர்த்தெழுந்தீர்கள் என்றால், மேல் உலகில் உள்ளவற்றை நாடுங்கள் (கொலோ 3:1).

ஒரு பங்கில் 40 நாள் தவக்காலத்தை எப்படிச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதைப் பற்றிய குறிப்பு: அலைப்பேசியின்றி 20 நாள்கள், புறணி பேசாமல் 20 நாள்கள். நாமும் முயற்சி செய்யலாமே?

அவர்தம் காயங்களால் குணமடைந்துள்ளோம் (1பேதுரு 2:24).

இதில் நகைமுரண் என்னவென்றால், அவருடைய காயத்திற்குக் காரணம் நாம். நம்மால் தான் அவருக்கு அவ்வளவு காயங்கள் உண்டாயின. எந்தக் காயத்தை நாம் அவருக்குக் கொடுத்தோமோ, அதே காயங்களின் வழியாக நம் காயங்களைக் குணமாக்குகின்றார்.

என் உடல், உள்ளம் சார்ந்த நோய்களைக் குணமாக்குகிறார். எப்படி? 1பேதுரு 1:18-19 - “உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று அழிவுக்குட்பட்டது அல்ல; மாறாக, மாசுமருவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தமாகும்.”

என் வாழ்க்கையில் உடல் - உள்ளம் சார்ந்த காயங்கள், தழும்புகள் இருக்கின்றன என்றால், அதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைய வேண்டும், பெருமை கொள்ள வேண்டும். ஏனெனில், ‘என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவின் அடிமை என்பதைப் பறைசாற்றும் (கலா 6:17).

இறுதி நாளில் ஆண்டவர் என்னைப் பார்த்துக் கேட்கக்கூடிய ஒரே கேள்வி: ‘உன் தழும்புகள் எங்கே?’ (where are your wounds)).

news
ஆன்மிகம்
நாம் உயிர்ப்பின் மக்கள்! அல்லேலூயா!

அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துகள்! அன்புக்குரியவர்களே, பாஸ்கா திருவிழிப்பு, ‘திருவிழிப்புகளுக்கெல்லாம் தாய்என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திருவிழிப்பிலே ஆண்டவர் சாவை வென்று வெற்றி வீரராக உயிர்த்தெழுகிறார்! நம்மையும் உயிர்ப்பின் மக்களாய் ஆக்குகின்றார். தந்தையாம் கடவுள் தம் மக்களை எப்படி விடுவிக்கின்றார்; எப்படித் தம் மக்களோடு இருக்கின்றார்; எப்படி அடிமைத் தனத்திலிருந்து காக்கின்றார்; எப்படி இன்றைக்கும் கடவுள் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துகின்றார்; வாழவைக்கின்றார் என்கிற மீட்பின் வரலாற்றை இன்றைய வாசகங்கள் மிக அழகாக விளக்குகின்றன. இன்றைய இரவின் மகிமையை நாம் அனைவரும் உணரும் வண்ணமாகப் பாஸ்காப் புகழுரை நமக்குத் தரப்பட்டுள்ளது.

இந்த நாள் நமக்கு என்னென்ன செய்திகளைக் கூறுகின்றது என்பதை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன். உயிர்ப்புப் பெருவிழா என்பது விழாக்களுக்கெல்லாம் பெருவிழா! இலத்தீன் மொழியிலேfestum festorumஎன்று அழைக்கப்படுகிறது. எத்தனை விழாக்கள் இருந்தாலும், நமக்குத் தலையாய விழா - உயிர்ப்பு! ஏனென்றால், இந்த உயிர்ப்புப் பெருவிழாதான் நமது நம்பிக்கை வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கிறது. இந்த உயிர்ப்புப் பெருவிழாவிலிருந்துதான் நமது கிறித்தவ வாழ்வை அர்த்தமுள்ள விதத்திலே வாழ்வதற்கான ஓர் ஆற்றல் நமக்குக் கிடைக்கிறது.

புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தில்கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும் (1கொரி 15:14) என்கிறார். “கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றால் நம்முடைய நம்பிக்கை வீணானது; அர்த்தம் இல்லாதது. இந்த நம்பிக்கையை உலகமெல்லாம் பரப்பிக் கொண்டிருக்கிறார்களே... அதுவும் வீணானது. நாங்கள் உங்களுக்குக் கொடுக்கின்ற அந்தப் போதனையும் வீணானதுஎன்று திருத்தூதர் பவுல் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார். ஆகவே, நம்முடைய நம்பிக்கை வாழ்வின் அடித்தளமாகிய இந்த உயிர்த்தெழுதலை நாம் மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்; நன்றியோடு கொண்டாடுவோம். ஏனென்றால், இறைவன் நம்மையும் உயிர்ப்பின் மக்களாய் வாழ வைக்கிறார்.

ஆண்டவரின் உயிர்ப்பிலே பழைய வாரம் முடிந்துவிட்டது; புதிய வாரம் தொடங்குகிறது. பழைய காலம் முடிந்துவிட்டது; புதிய யுகம் ஆரம்பமாகிறது. காலையிலேயே கதிரவன் எழும் வேளையில் இருளின் ஆட்சி முடிந்து போயிற்று; இப்பொழுது புதிய ஒளி உதித்திருக்கிறது. இந்த உலகத்தின் இருளை அகற்ற வந்த புதிய ஒளி இங்கே உதித்திருக்கிறது.

தொடக்கத்தில் கடவுள் விண்ணுலகையும் மண்ணுலகையும் படைத்த பொழுது, மண்ணுலகு உருவற்று வெறுமையாய் இருந்தது; ஆழத்தின்மீது இருள் பரவியிருந்தது; வெறுமை - இருள் மக்களுடைய வாழ்விலே இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் ஆண்டவர் பேசுகிற முதல் வார்த்தை: “ஒளி தோன்றுக!” (தொநூ 1:3) என்பதுதான். ஆண்டவருடைய உயிர்த்தெழுதலிலே ஆண்டவர் புதிய படைப்பு நிகழ்வாக உயிர்த்தெழுகிறார். நம்மையும் உயிர்ப்பின் மக்களாய் உயிர்த்தெழ வைக்கிறார். அவர்தான் புதிய ஒளி! அவர்தான் புதிய கதிரவன்! பழைய காலம் முடிந்துவிட்டது; நமது புதிய வாழ்வு பிறந்துள்ளது. அந்தப் புதிய வாழ்வை நமக்குத் தருபவர் நம்முடைய ஆண்டவர் இயேசு. நம் ஒவ்வொருவரையும் புதுப்படைப்பாக மாற்ற அவர் நம் இதயத்திலே ஒளி வீசுகின்றார்.

உயிர்ப்பின் நிகழ்வில் மகதலா மரியா, யாக்கோபின் தாய் மரியா, சலோமி ஆகியோர் கல்லறைக்குச் செல்கின்ற பொழுது, அவர்கள் கலக்கத்தோடு செல்கிறார்கள். அவருடைய கலக்கத்திற்குக் காரணம் என்ன? பெரிய கல் அந்தக் கல்லறை வாயிலை மூடியிருக்கிறது. ‘இந்தக் கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?’ இந்த வார்த்தையிலே பொதிந்திருக்கிற உணர்வு பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றிய எல்லா மக்களின் மனங்களையும் அழுத்திக் கொண்டிருந்தது. ‘இவர் ஒரு நல்ல மனிதர், நல்லதைத்தானே செய்தார்என்று எண்ணி அவரிடம் நம்பிக்கை கொள்ளாத மக்கள் கூட, ‘ஏன் இப்படி ஒரு கேவலமான மரணம்? ஏன் இத்தனை கொடுமை கள்? எத்தனை வேதனைகள்? எத்தனை கசையடிகள்? கடவுள் ஏன் அவரைக் கைவிட்டார்?’ இதுதான் பெண்களுடைய மனத்திலும் சீடருடைய மனத்திலும் ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொண்ட மக்கள் மனத்திலும் ஒரு பெரிய பாரமாக இருந்தது.

எவ்வளவு அருமையான போதனைகளை எல்லாம் நமக்குச் சொல்லிக் கொடுத்தார். நாம் எப்படி நல்ல மனிதர்களாக வாழ்வது என்று நமக்குக் கற்றுத் தந்தாரே! இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழ வேண்டும் என நமக்குச் சொல்லிக் கொடுத்தாரே! ‘ஒருவருக்கொருவர் அன்பு செய்யுங்கள்என்று நமக்குச் சொல்லிக் கொடுத்தாரே! எத்தனை எத்தனை அற்புதங்கள் செய்தார்! மக்களுக்கு இவ்வளவு நன்மை செய்தும் மக்களை வாழவைத்தும் தந்தை கடவுள் அவரை விட்டுவிட்டாரே! ‘என் தந்தையே, ஏன் என்னைக் கை நெகிழ்ந்தீர்?’ என்று இவரை வேதனையோடு புலம்ப வைத்துவிட்டாரே இந்தக் கடவுள்! ஏன் இப்படிச் செய்தார்?” இந்தத் தாங்க முடியாத மனவேதனையோடும் அழுத்தத்தோடும் பாரத்தோடும்தான் அங்கே ஆண்டவர் இயேசுவினுடைய சீடர்களும், அவரை ஏற்றுக்கொண்ட மக்களும் நடைபிணமாய்த் திரிந்து கொண்டிருந்தார்கள். ஆனால், ஆண்டவருடைய உயிர்ப்பு அவர்களுக்கு ஒரு விடை தருகிறது. கடவுள் ஆண்டவர் இயேசு இறக்கின்றபோது அவரோடு அவரும் இறந்து, அவரோடு பாதாளத்தில் இறங்கி, அவரைத் தூக்கி எல்லா மனிதர்களுக்கும் மேலாக அவரை உயர்த்தி விடுகின்றார்; அவரை எழுப்பி விடுகின்றார். இந்த உயர்வை, மாட்சியை, மகிமையைத்தான் நாம் இன்று உணர்ந்துகொள்ள வேண்டிய முதல் செய்தி.

ஆனாலும், இன்னும் ஒரு கேள்வி. அப்படிச் சிலுவையிலே முழுமையாக இறக்கும் வரை தந்தை ஏன் காத்திருக்க வேண்டுமா? அதற்கு முன்பாக அவரைக் காப்பாற்றி நம் எல்லாருக்கும் மீட்பளித்திருக்க முடியாதா? என்கிற ஒரு கேள்வி நமக்கு எழும். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஆண்டவருடைய அன்பை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். தம்முடைய ஒரே மகனை மானுட மீட்புக்காக, மனிதகுல வாழ்வுக்காக, மனிதனுடைய விடுதலைக்காக ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் கடவுளின் திருவுளம். அதற்குக் காரணம் நம்மீது ஆண்டவர் கொண்ட அன்பு மட்டுமே (யோவா 3:16). அன்புதான் வாழவைக்கும்; ஆற்றல் அழித்துவிடும். ஆகவேதான் ஓர் அறிஞர் இவ்வாறு கூறுகிறார்: “நீ கடவுளை அன்பாகப் புரிந்துகொள். எல்லை இல்லாத இரக்கமாக அவரை ஏற்றுக்கொள். எல்லாம் வல்லவர் என்று நினைக்காதே.” நாம் உணர வேண்டிய ஆழமான கருத்து.

நம்முடைய உள்ளங்களிலே ஏராளமான பாரங்கள் இருக்கலாம்; சோகங்கள் இருக்கலாம்; வேதனைகள் இருக்கலாம்; பெரிய பாறைகள் இருக்கலாம்; ஆனால், அந்தப் பாறைகளையும் கற்களையும் வேதனைகளையும் சோதனைகளையும் எல்லாவற்றையுமே ஆண்டவர் தம்முடைய அன்பினால் புரட்டிப் போடுவார். எனவே, நாம் உயிர்த்த ஆண்டவரிலே நம்பிக்கை வைப்போம்; அவரிலே நாம் சரணடைவோம் என்பதுதான் நாம் முதன் முதலாக உணர வேண்டிய கருத்து.

இரண்டாவதாக, ஆண்டவர் இயேசுவினுடைய உயிர்ப்பு என்பது தந்தை கடவுள் அவர் சொன்னதையும் செய்ததையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம். இயேசுவைக் கொல்ல நினைத்தவர்கள் அவரை மட்டுமல்ல, இயேசுவினுடைய போதனைகளையும் அவருடைய இலட்சியங்களையும் அவருடைய இறையாட்சிக் கனவுகளையும் மக்களுக்காக அவர் எடுத்த நிலைப்பாட்டையும் கொன்றுபோட்டதாக நினைத்தார்கள். ஆனால், இறுதியிலே வென்றது கடவுள்தாம்! ஏனென்றால், தம்முடைய மகனின் உயிர்ப்பிலே ஆண்டவர் எதை எண்பிக்கின்றார்? “என்னுடைய அன்பு மகனிலே நான் பூரிப்படைகிறேன். அவர் என்னுடைய பணிகளைத்தான் செய்தார். தம் இன்னுயிரைக் கையளித்தபோது என்னுடைய திருவுளத்தை நிறைவேற்றினார் என்று நானும் உணர்ந்தேன். எனவே, அவர் எவற்றையெல்லாம் போதித்தாரோ, அவையெல்லாம் என்னுடையவை; அவர் என்னவெல்லாம் செய்தாரோ, அவையெல்லாம் எனக்கு ஏற்புடையவை. ஆகவே, அவரையும் அவருடைய வாழ்வையும் அவர்களுடைய செயல்களையும் அவருடைய போதனைகளையும் அப்படியே நான் ஏற்றுக்கொள்கிறேன்என்று அவருக்கு நற்சான்றிதழ் கொடுப்பதுதான் உயிர்ப்பு.

மூன்றாவதாக, உயிர்ப்பிலே சீடர்கள் கலிலேயாவுக்குச் செல்ல வேண்டும் என்ற செய்தி தரப்படுகிறது. ‘உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குச் சென்றிருக்கிறார். அவர் சொன்னபடியே நீங்கள் அவரை அங்கே சந்திப்பீர்கள். ஏன் அவர்கள் கலிலேயாவுக்குச் செல்ல வேண்டும்? ஏன் அவர்கள் எருசலேமில் இருக்கக்கூடாது?’ எனச் சிந்திப்போம். ஆண்டவர் இயேசு கூறுவதிலே ஆழமான ஓர் உண்மை இருக்கிறது. “எருசலேம் என்னுடைய பாடுகளின் இடம். நான் இங்கே இறந்திருக்கிறேன்; நான் இங்கே புதைக்கப்பட்டு இருக்கிறேன்; ஆனால், கலிலேயா என்னுடைய வாழ்வின் இடம். என்னுடைய பணிகளை நான் அங்கே செய்தேன்மக்களோடு அங்கே நான் ஒன்றாக இணைந்து வாழ்ந்து கொண்டிருந்தேன். அவர்களுடைய துன்பத்தில் நான் பங்கு கொண்டேன். அவர்களுடைய இன்பத்திற்கு நான் வழிவகுத்தேன். அவர்களுடைய வாழ்க்கைக்காக என்னையே நான் அர்ப்பணித்துக் கொண்டேன். ஆகவே, நீங்களும் அங்கே வாருங்கள். இறப்பின் காட்சி எங்கே நடக்கிறதோ, அந்த இடத்தை விட்டுவிட்டு ஆயிரக்கணக்கான மக்களுக்கு நான் வாழ்வு கொடுத்திருக்கிறேனே, அந்த இடத்திற்கு வாருங்கள். எதற்காக? நீங்களும் மக்களை வாழவையுங்கள். நீங்களும் மக்களுக்கு நற்செய்தியை அறிவியுங்கள். ‘கடவுள் அவர்களோடு இருக்கின்றார்; அவர்களை வாழ வைக்கின்றார்என்கிற நற்செய்தியை அந்த மக்களுக்கு அறிவியுங்கள். நீங்களும் எருசலேமுக்குத் திரும்பிச் சென்று அங்கே ஆண்டவருக்கு நீங்கள் சாட்சியம் சொல்வீர்கள். ஆண்டவர் கூறியபடியே, திருத்தூதர்கள் எருசலேமுக்குச் சென்று உயிர்த்த ஆண்டவருக்குச் சாட்சியம் பகிர்கிறார்கள்.

இன்று நமக்கு என்ன அழைப்புத் தரப்படுகிறது? நீங்களும் நானும் உயிர்த்த ஆண்டவருக்குச் சாட்சிகளாய் வாழ வேண்டும். நம்முடைய வாழ்விடங்களில் நாம் உயிர்த்த ஆண்டவருக்குச் சாட்சிகளாய் இருக்க வேண்டும் என்று அழைக்கப்படுகிறோம். எப்போது நாம் உயிர்த்த ஆண்டவருக்குச் சாட்சிகளாக இருப்போம்? எப்பொழுதெல்லாம் ஏழைகளை வாழ வைக்கின்றோமோ, எப்பொழுதெல்லாம் சுமை சுமந்து சோர்ந்து கிடப்பவர்களுடைய சுமைகளைத் தாங்குகின்றோமோ, எப்பொழுதெல்லாம் சமுதாயத்தினுடைய விளிம்புகளுக்குத் தள்ளப்படுகின்ற மக்களை மையத்திற்கு அழைத்து வருகின்றோமோ, எப்பொழுதெல்லாம் மக்களுடைய கண்ணீரைத் துடைத்து அவர்களுக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றோமோ, எப்பொழுதெல்லாம் அநீதிக்கு எதிராகப் போராடி நீதியை நிலைநாட்டுவதற்கு நாம் முயற்சி செய்கின்றோமோ, எப்பொழுதெல்லாம் இந்தச் சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பதற்காக நாம் பாடுபடுகின்றோமோ, எப்பொழுதெல்லாம் நம்மை ஏழை எளிய மக்களுக்காகக் கையளிக்கின்றோமோ... அப்பொழுதெல்லாம் நாம் உயிர்த்த ஆண்டவருக்குச் சாட்சியம் பகிர்கிறோம். அப்படிப்பட்ட சாட்சிகளாய் நாம் வாழ வேண்டும் என்று ஆண்டவர் இன்று நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.

புனித அகுஸ்தினார் நமக்குக் குறிப்பிடுவது போல நாம் உயிர்ப்பின் மக்கள், ‘அல்லேலுயாஎன்பது நம்முடைய கீதம்! We are an Easter people.  Alleluia is our song. Happy Easter!

news
ஆன்மிகம்
இதயத் துடிப்பின் இனிய வெளிப்பாடே குருத்துவம்

குருத்துவம்என்ற வார்த்தையை எழுதும்போதே என்னைப் புரட்டிப் போடுவதை உணர்கிறேன். என் மூளை, மூட்டு, நரம்புகளையெல்லாம் ஆட்டிப் படைத்து அசைத்துப் போடுவதை உணர்கிறேன். ஏனென்றால், குருத்துவம் இயேசுவின் இதயத் துடிப்பின் இனிய வெளிப்பாடு என்பதை அவரின் பணி வாழ்வின் வீரியத்திலிருந்தும் விருட்சத்திலிருந்தும் உணர முடிகிறது. அவரின் இறையாட்சிக் கனவின் இன்ப ஊற்றிலிருந்து உன்னதமாக வெளிப்பட்ட உயர்ந்த நிலை என்பதை என்னால் அறிய முடிகிறது.

இயேசு தமக்குப்பின் இறையாட்சிப் பணிக்காகப் பணியாளர்களைத் தெரிந்தெடுத்து, அர்ச்சித்து அனுப்புவதே குருத்துவம். இயேசுவின் குருத்துவம் மனிதப் பார்வையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதும் வேறுபட்டதும் ஆகும். புனித வியாழனன்று அழியா முத்திரையாகச் சிறப்பான சித்திரமாகக் குருத்துவத்தை ஏற்படுத்தினார்.

குருத்துவம் ஆண்டவர் இயேசுவால் கொடுக்கப்பட்ட தனிப்பெரும் கொடை! தனித்தன்மை வாய்ந்த தன்னிகரற்ற வாழ்வு! இத்தரணியையே தலைசாய்க்க வைக்கும் பணி! அர்ப்பணம் கொண்ட தலைசிறந்தப் பரிசு! இது திரு அவைக்கு இறைவன் கொடுத்த ஒப்புயர்வற்ற மாபெரும் கொடை!

திரு அவையிலிருந்து குருத்துவத்தைப் பிரிக்க முடியாத அளவுக்குப் பிணைப்பையும் இணைப்பையும் இறைவன் பகுத்துத் தொகுத்து வைத்துள்ளார். அதுதான் இறைவன் வகுத்து வைத்தத் திட்டமும் தீர்மானமும் ஆகும். எனவேதான் திரு அவையிலிருந்து குருத்துவத்தைத் தனித்துப் பிரித்துப் பார்க்கவோ பகுக்கவோ இயலாது. குருவானவர் இல்லையேல் நற்கருணை இல்லை. நற்கருணை இல்லையேல் இயேசு இல்லை. இயேசு இல்லையேல் திரு அவை இல்லை. இம்மூன்றும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. தாம் பாடுபடுவதற்கு முந்தைய நாள் புனித வியாழன் அன்று இயேசு நற்கருணையை ஏற்படுத்தியதோடல்லாமல் தமது இதயத் துடிப்பின் இனிய வெளிப்பாடாகக் குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்.

குருத்துவ வாழ்வு என்பது மகிழ்ச்சிஎன்று திருத்தந்தை பிரான்சிஸ் குறிப்பிடுகிறார். நற்கருணையாக வாழவும், நற்கருணையை நாளும் இறைமக்களுக்கு வழங்கவும் இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தினார்.

இயேசுவின் குருத்துவக் கனவு யூத சமயக் குருத்துவத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. மாற்றுச்சிந்தையில் உருவானது. அவ்வேளையில் குருத்துவம் மக்களிடமிருந்து அகன்று அந்நியப்பட்டிருந்தது. ஆணவமும் ஆதிக்கமும் தலைதூக்கி நின்றது. வெறும் வெற்றுச் சடங்குகளுக்கும் சட்டங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் முக்கியத்துவத்தையும் முதன்மை இடத்தையும் கொடுத்து, ஏழைகளை முன்னேறவிடாமல், முன்னுக்குவரவிடாமல் முடக்கிப் போட்டக் குருத்துவத்தைக் கேள்வி கேட்கிறார் இயேசு. ஆன்மிகத் தேவைகளை நிறைவேற்றாமல் மக்களை ஆடு மாடுகளாகவும் அடிமைகளாகவும் நுகர்வோர்களாகவும் மட்டுமே பார்த்தனர் யூத சமயக் குருக்கள்.

இப்பார்வையையும் பணியையும் வேரறுத்து, குரு என்பவர் மனிதர்களை இறைவனோடு இணைக்கும் பாலம் என்ற கருத்தைப் பதிவு செய்கிறார் இயேசு. அதையும்விட மேலாகக் குருவானவர் என்பவர் பணி ஏற்பவர் அல்லர்; பணிவிடை புரிபவர். பாதங்களைப் பணிந்து, குனிந்து, கழுவித் துடைத்து முத்தமிடுபவர் என்பதைச் சொல்லால் அல்ல, செயலால் காட்டுகிறார். “இயேசு பந்தியிலிருந்து எழுந்து தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி, இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார் (யோவா 13:4-5). பின்னர் அவர் சீடர்களிடம்நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் போதகர் என்றும் ஆண்டவர் என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன் (யோவான் 13:13-14) எனக் குறிப்பிடுகிறார்.

இயேசு தம்மை ஒரு குருவென்று அழைக்க விரும்பவில்லை. அவர் தம்மை ஓர் இறைவாக்கினர் என்றே அடையாளம் காட்டினார். ஆனால், அவரது வாழ்வும் பணியும் அவரை நல்லதொரு குருவாக அடையாளப்படுத்தின. இயேசு தேவையில் இருந்தவர்களைத் தேடிச்சென்று பேணிக்காத்தார். அவர்களின் வாழ்வை வளமாக்கி, அவர்களோடு வாழ்வைக் கொண்டாடி மகிழ்ந்தார். கடவுள் தூரத்தில் இல்லை, துன்பப்படும் மக்களின் மத்தியில்தான் உள்ளார் என்பதை உடனிருந்து உணர வைத்தார். அவரது குருத்துவப் பணியின் உச்சமாகவும் துச்சமாகவும் உயிராகவும் உயரமாகவும் விளங்கியது அவரது சிலுவைச் சாவு. குரு என்பவர் தனக்காக வாழ்பவர் அல்லர்; தன்னலத்தோடு வாழ்பவரும் அல்லர்; சுயநலத்தில் சுருங்கி வாழ்பவரும் அல்லர்; அவர் பிறருக்காக, பிறர் வாழ்வுக்காகத் தன்னை முழுமையாகக் கொடுப்பதே குருத்துவத்தின் அர்ப்பணம் என்பதை அவருடைய இறப்பு நமக்கு வெளிப்படுத்துகிறது. குருத்துவம் பிழைப்புக்காக அல்ல, பிறரைப் பிழைக்க வைக்க என்பதை உணர்வோம். குருத்துவ வாழ்வை மதிப்போம்.

கடவுளின் அருளும் இரக்கமும் இல்லாமல் யாரும் குருத்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. எனவே, நாம் குருக்களுக்காக இறைவேண்டல் செய்வோம். அவர்களின் வாழ்வும் பணியும் இயேசுவின் வாழ்வும் பணியுமாக அமைய வேண்டுமென்று ஒவ்வொரு நாளும் அவர்களைத் திருப்பலியிலும், நமது தனிப்பட்ட மற்றும் குடும்ப இறைவேண்டல்களிலும் ஒப்புக்கொடுப்போம். “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால், தமது அறுவடைக்கு வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள் (லூக் 10:2) என்று மொழிந்த ஆண்டவரிடம் மன்றாடுவோம். “என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும் முன்மதியுடனும் வழிநடத்துவார்கள் (எரே 3:15) என்று கூறிய கடவுள் தொடர்ந்து நல்ல அருள்பணியாளர்களைத் தர வேண்டுவோம்.

அருள்பணியாளர்களே! அருளடையாளங்களை நிறைவேற்றுபவர்களே! அயராது அன்பு மக்களுக்காய்ப் பணியாற்றி அர்ப்பணிக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் அருள்பணியாளர்கள் தின நல்வாழ்த்துகள்!