news
வத்திக்கான் செய்திகள்
மனிதக் கடத்தலுக்கு எதிராகப் பிலிப்பைன்ஸ் ஆயர்கள்!

மனிதக் கடத்தல் மற்றும் சுரண்டல்களுக்கு எதிராகப் பிலிப்பைன்ஸ் திரு அவை தனது மறைமாவட்டக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டுமெனப் பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவை (CBCP) அழைப்புவிடுத்துள்ளது. பிப்ரவரி 1 அன்று அனுசரிக்கப்பட்ட தேசிய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், நாடு எதிர்கொள்ளும் பல்வேறு சமூகச் சீர்கேடுகள் குறித்து ஆயர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சட்டவிரோத ஆள்சேர்ப்பு, கட்டாய உழைப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இணையவழியில் பெருகிவரும் பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியவை பிலிப்பைன்சில் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. வறுமை, கல்வியறிவின்மையைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு எனும் பெயரில் டிஜிட்டல் தளங்கள் வாயிலாக மக்கள் கடத்தப்படுகின்றனர். மறைமாவட்ட அளவில்மனிதக் கடத்தலுக்கு எதிரான குழுக்களைஅமைப்பதன் மூலம், அரசுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பும் நீதியும் வழங்க முடியும் என ஆயர் சாக்ரடீஸ் மெசியோனா வலியுறுத்தியுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
புனித ஜான் ஹென்றி நியூமன் பொது உரோமன் நாள்காட்டியில் இணைப்பு!

திரு அவையின் மறைவல்லுநரான புனித ஜான் ஹென்றி நியூமன் அவர்களைக் கத்தோலிக்கத் திரு அவையின் பொது உரோமன் நாள்காட்டியில் இணைப்பதாகத் திருத்தந்தை லியோ அறிவித்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ ஆணையைத் திருவழிபாடு மற்றும் அருளடையாள ஒழுங்குமுறைக்கான திருப்பீடம் 2026, பிப்ரவரி 3 அன்று வெளியிட்டது. இதன்படி, இனி ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 9-ஆம் தேதி புனித ஜான் ஹென்றி நியூமனின் நினைவு நாளாகக் கொண்டாடப்படும். 19-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து திரு அவையின் குருவாக இருந்த இவர், 1845-இல் கத்தோலிக்கத் திரு அவைக்கு மாறினார். பின்னர் கர்தினாலாக உயர்ந்த இவருக்கு, 2019-இல் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. கடந்த நவம்பர் 2025-இல் திருத்தந்தை இவரைதிரு அவையின் கல்விப் பணிக்கான இணைப் பாதுகாவலர்மற்றும்மறைவல்லுநர்என்று அறிவித்திருந்தார். அறிவுசார் தேடலும், ஏழைகளுக்கான சேவையும் இவரது வாழ்வின் இரு கண்களாக இருந்தன. ‘வரலாற்றில் பயணம் செய்யும் திரு அவையின் ஒளிமிகுந்த விளக்குஎன்று போற்றப்படும் இவரது நினைவு நாள், கிறித்தவர்களுக்கு ஒரு முன்மாதிரி என்று இந்த ஆணை புகழாரம் சூட்டியுள்ளது.

news
வத்திக்கான் செய்திகள்
“நம்மில் ஆழமான செவிமடுத்தலும் உண்மையான உரையாடலும் வேண்டும்” – திருத்தந்தை

ஆயுதமற்ற அமைதியை நோக்கிஎன்ற வலிமையான செய்தியை 59-வது உலக அமைதி தினத்தை முன்னிட்டு திருத்தந்தை லியோ அவர்கள் வெளியிட்டுள்ளார். அதில் அமைதி என்பது வெறும் இலக்கல்ல; மாறாக, அது ஒரு தொடர் பயணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வன்முறை மற்றும் பிரிவினைகளால் ஏற்பட்ட வடுக்களை ஆற்றமறு சீரமைப்பு நீதி (Restorative Justice) முறையைப் பின்பற்றுமாறு அவர் உலகிற்கு அழைப்புவிடுத்துள்ளார். “இது வெறும் தண்டனை வழங்குவதைவிட, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் இடையே உறவைச் சீரமைப்பதில் கவனம் செலுத்துகிறதுஎன்று தெரிவித்துள்ளார். ஆழமான செவிமடுத்தல் மற்றும் உண்மையான உரையாடல் மூலமே பிளவுகளைக் கடந்து அமைதியை நிலைநாட்ட முடியும் என்றும் திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“உண்மையைக் கண்டிப்புடனும் கருணையுடனும் பாதுகாப்போம்!”

வத்திக்கான் உச்ச நீதிமன்றமானஉரோமை ரோட்டா (Roman Rota) அமைப்பின் புதிய நீதித்துறை ஆண்டைத் தொடக்கி வைத்து நீதிபதிகளிடம் உரையாற்றிய திருத்தந்தை, “உண்மையை எவ்விதச் சமரசமும் இன்றிப் பாதுகாக்கவேண்டும்; அதேசமயம் அதில் பிடிவாதம் இருக்கக்கூடாது. எதையும் புறக்கணிக்காமல் அன்பைச் செயல்படுத்தவேண்டும். நீதியும் அன்பும் முரண்பட்டவை அல்ல; மாறாக, அவை இறைவனின் மறைப் பொருளில் ஒன்றிணைந்தவை.  மேய்ப்புப்பணி ஆர்வத்தினால் வரும் தவறான இரக்கம் வழக்கின் உண்மையை மறைத்துவிடக்கூடாதுஎன்று எச்சரித்த திருத்தந்தை லியோ, “தனிநபர்கள் மீதான மனிதாபிமானம் இல்லாத, உணர்ச்சியற்ற தீர்ப்புகளும் நீதியாகாது; குறிப்பாக, திருமண முறிவு வழக்குகளில் போதிய ஆதாரங்களின்றி முடிவெடுப்பது சட்டத்தின் மாண்பைச் சிதைக்கும்என்றும்  சுட்டிக்காட்டினார்.

news
வத்திக்கான் செய்திகள்
“புதிய மறைப்பணி இயக்கத்திற்கு தூண்டுகோல் புனித லீமா ரோஸ்!” - கர்தினால் தாக்லே

பெரு நாட்டின் புகழ்பெற்ற புனிதரான லீமா நகர் புனித ரோஸ் (St. Rose of Lima) குறித்த உலகளாவிய கருத்தரங்கு உரோமையில் உள்ள கிரகோரியன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. வத்திக்கான் தோட்டத்தில் இப்புனிதரின் திருவுருவம் நிறுவப்பட்டுள்ள நிலையில், இந்த நிகழ்வு பெரிதும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நிகழ்வைத் தொடங்கி வைத்த கர்தினால் லூயிஸ் அந்தோணியோ தாக்லே, “புனித ரோஸின் ஆன்மிகம் கடல்களைக் கடந்து தென்கிழக்கு ஆசியா வரை பரவியுள்ளது. போதனைகளை விட முன்மாதிரிகளை விரும்பும் இன்றைய இளைஞர்களுக்கு அவர் ஒரு சிறந்த வழிகாட்டிஎன்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த முயற்சி ஒரு புதிய மறைப்பணி இயக்கத்திற்கு விதையாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருத்தந்தை லியோ முன்னிலையில் திறக்கப்படவுள்ள இத்திருவுருவம், முற்றிலும் பெரு நாட்டின் மூலப்பொருள்களால் செதுக்கப்பட்டுள்ளதாகவும், இயேசு புனித ரோஸிற்கு மலர்களை வழங்கும் காட்சியை இது சித்தரிப்பதாகவும் வத்திக்கான் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது. மேலும், பூக்கடைக்காரர்கள் மற்றும் தோட்டக்காரர்களின் பாதுகாவலியாகப் போற்றப்படும் இப்புனிதர், ‘முள்களுக்கு இடையே மலர்ந்த லீலிஎனத் திரு அவையால் புகழப்படுகிறார்.

news
வத்திக்கான் செய்திகள்
“இனப்படுகொலை எனும் கொடூரம், எந்தவோர் இனத்திற்கும் இனி நேரிடக்கூடாது”- திருத்தந்தை லியோ

உலகஹாலோகாஸ்ட் (Holocaust) நினைவு தினத்தை முன்னிட்டு, உலகில் இனி எந்தவோர் இனத்திற்கும் எதிராக இனப்படுகொலை எனும் கொடூரம் நிகழக்கூடாது என்று திருத்தந்தை லியோ வலியுறுத்தியுள்ளார். இலட்சக்கணக்கான யூதர்கள் மற்றும் அப்பாவி மக்களின் உயிரிழப்பிற்குக் காரணமான அந்தப் பழைய கசப்பான நிகழ்வுகளை வத்திக்கானில் நடைபெற்ற வாராந்திரப் பொதுமறை உரையின்போது வேதனையுடன் நினைவுகூர்ந்த திருத்தந்தை, “யூத எதிர்ப்பு உணர்வு, ஒடுக்குமுறை மற்றும் துன்புறுத்தல்கள் இல்லாத உலகத்தை அருளுமாறு எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்என்று பரஸ்பர மரியாதை மற்றும் பொதுநலனை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.