news
வத்திக்கான் செய்திகள்
“நாம் படைப்புகளின் பாதுகாவலர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்”- திருத்தந்தை லியோ

பிரேசிலில் நடைபெற்று வரும் .நா. சபையின் பருவநிலை மாநாட்டில் பங்கேற்கும் உலகளாவிய தெற்கு ஆயர்கள் மற்றும் கர்தினால்களுடன் திருத்தந்தை லியோ அவர்கள் காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது, “நீங்கள் விரக்தியை விட நம்பிக்கையையும் செயலையும் தேர்ந்தெடுத்து, ஒன்றாகச் செயல்படும் உலகளாவிய சமூகத்தை உருவாக்கியுள்ளீர்கள்எனப் பெருமிதம் கொண்டார். “முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அங்கீகரிக்கும் அதேவேளையில் அது போதுமானதல்லஎன்றும், “நம்பிக்கை மற்றும் உறுதிப்பாடு புதுப்பிக்கப்பட வேண்டும்என்றும் திருத்தந்தை அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“சவால்கள் நிறைந்த நேரத்தில் கிறிஸ்துவை நம் மையத்தில் கொள்வோம்”- திருத்தந்தை லியோ

உரோமை, அவென்டைன் மலையில் உள்ள  தூய  அன்செல்மோ ஆலய அர்ப்பணிப்பின் 125-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பெனடிக்டைன் அருள்பணியாளர்கள் மத்தியில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை லியோ, “கிறிஸ்துவை நம் வாழ்வின் மையமாகக்கொண்டு, இன்றைய சூழலில் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்குப் பதிலளிக்க வேண்டும்என அறிவுறுத்தினார். “சமூகத்தில் நாம் காணும் திடீர் மாற்றங்கள் நம்மைத் தூண்டிவிடுவது மட்டுமின்றி, கேள்வி எழுப்பவும் செய்கிறதுஎனக் குறிப்பிட்ட திருத்தந்தை, இதற்கு முன்பு நாம் சந்திக்காத பிரச்சினைகளைத் தற்போது சந்தித்து வருகிறோம் எனவும் கூறினார். இத்தகைய சூழலில், “கிறிஸ்துவை நமது இருப்பு மற்றும் நமது பணியின் மையத்தில் வைப்பதன் மூலமாக மட்டுமே, நமது அழைப்புப் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும்எனவும் அவர் நினைவூட்டினார்.

news
வத்திக்கான் செய்திகள்
சுகாதாரப் பராமரிப்பில் A.I. பயன்பாட்டை உறுதி செய்யவேண்டும்’- திருத்தந்தை லியோ

வத்திக்கானில் நடைபெற்ற உலகச் சுகாதார மாநாட்டில்AI மற்றும் மருத்துவம்: மனித மாண்பின் சவால்என்ற  தலைப்பில்  சுகாதாரப் பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், மனிதகுலத்தின்மீது AI மற்றும் பிற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது நாம் சிந்திக்கும் விதத்தைப் பெரிதும் பாதிக்கிறது என்றும், நம்மையும் மற்றவர்களையும் நாம் எப்படி உணர்கிறோம் என்பதை மாற்றுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  நாம் தற்போது இயந்திரங்களுடன் இடைத்தரகர்கள் போலத் தொடர்புகொள்கிறோம்; இதனால் அவற்றின் நீட்டிப்பாக மாறிவிடுகிறோம்; அவ்வாறே, நம்மைச் சுற்றியுள்ள மக்களின் முகங்களை நாம் மறந்துவிடுவது மட்டுமல்லாமல், மனிதத்தை எவ்வாறு அங்கீகரிப்பது, போற்றுவது என்பதையும் மறந்துவிடுகிறோம்என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“கத்தோலிக்கக் கல்வி என்பது நம்பிக்கையின் அறிகுறிகளை வழங்கவேண்டும்”- திருத்தந்தை லியோ

ஆப்பிரிக்காவில் தரமான கத்தோலிக்கக் கல்வியையும், உலகளாவிய தெற்கு மற்றும் வடக்கு இடையேயான ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கும் உறுப்பினர்களைச்  சந்தித்த திருத்தந்தை, “ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள கத்தோலிக்கப் பள்ளிகள், அங்குள்ள மாணவர்கள் உதவிக்காக  எழுப்பும் அமைதியான கூக்குரல்களுக்குப் பதிலளிக்கவேண்டும்என்று கேட்டுக்கொண்டார்.

கத்தோலிக்கக் கல்வி மற்றும் ஆப்பிரிக்கச் சூழலில் நம்பிக்கையின் அறிகுறிகளை ஊக்குவித்தல்என்ற கருப்பொருளில் கென்யாவின் நைரோபியில் நடைபெறவுள்ள இரண்டாவது மாநாடு குறித்துக் குறிப்பிட்ட திருத்தந்தை, ஆப்பிரிக்க அடையாளத்தால் நிரப்பப்பட்ட தரமான கல்வியை வளர்ப்பதன் மூலம் அந்நாட்டு இளைஞர்களை உருவாக்குவதற்கான அவர்களின் விருப்பத்தை வெகுவாகப் பாராட்டினார். மேலும், அனைத்து வயதினரிலும் வளரும் பொதுவான உள் பலவீனத்தின் அறிகுறிகளைப் பற்றிக் கவலையுற்ற திருத்தந்தை, “உதவிக்கான இந்த அமைதியின் கூக்குரல்களுக்கு நாம், நம் கண்களை மூடிக்கொள்ளக் கூடாதுஎன்று குறிப்பிட்டார்.

news
வத்திக்கான் செய்திகள்
‘உங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ளத் தயங்காதீர்கள்’- திருத்தந்தை லியோ

வத்திக்கானில் ஒருங்கிணைந்த திரு அவை முன்னெடுப்புக் குழுக்கள் மற்றும் பங்கேற்பு அமைப்புகளின் உறுப்பினர்களைத் திருத்தந்தை லியோ சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் மத்தியில் உரையாற்றியவர் மூவேளை இறைச்சிந்தனையின்போது, “கடவுளோடு கொண்ட உறவில் மனத்தாழ்மையையும், நேர்மையான இதயத்தையும் வளர்த்துக் கொள்ளவேண்டும்என வலியுறுத்தினார். மேலும், “ஒருவரின் தகுதிகளை வெளிப்படுத்துவதன் மூலமோ, ஒருவரின் தவறுகளை மறைப்பதன் மூலமோ அல்ல; மாறாக, நாம் இருப்பதுபோல் கடவுளுக்கு முன்பாகவும், மற்றவர்கள் முன்பாகவும் நேர்மையாக இருப்பவரே மீட்கப்படுகிறார்என்று விளக்கினார்.

புனித அகுஸ்தினாரை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, நிலையற்ற பெருமையால் தனது காயங்களை மறைப்பவர் ஒரு நோயாளிக்குச் சமம் என்றும், குணமடைய தனது காயங்களைத் தாழ்மையுடன் வெளிப்படுத்துவதையே இறைவன் விரும்புகிறார் என்றும் தெரிவித்து, நம் தவறுகளை நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்கக்கூடாது என்றும், மனத்தாழ்மையின் இந்தப் பாதைதான், உள்மனக் குணப்படுத்துதலையும் கடவுளது அரசின் வளர்ச்சியையும் கொண்டுவருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
திருத்தந்தையின் திருப்பயண இலச்சினை!

நவம்பர் 27 முதல் டிசம்பர் 2 வரை துருக்கி மற்றும் லெபனானுக்குத் திருத்தந்தை லியோ மேற்கொள்ளவுள்ள திருத்தூதுப்  பயணங்களுக்கான இலக்கு வாசகம் கொண்ட இலச்சினை, திருப்பீடத்தால் வெளியிடப்பட்டது.  திருத்தந்தையின் துருக்கி பயணத்தின் இலச்சினை முக்கியமான நினைவுச்சின்னத்தைப் பிரதிபலிக்கிறது; ஏனெனில், இது ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சந்திப்பைக் குறிக்கும் டார்ட னெல்லஸ் பாலத்தைச் சுற்றியுள்ள ஒரு வட்டத்தைக் கொண்டுள்ளது. மேலும், கடவுளுக்கும் மனிதகுலத்திற்கும் இடையிலான பாலமாகக் கிறிஸ்துவைக் குறிக்கிறது. பாலத்தின் கீழ், திருமுழுக்கு நீரையும், இஸ்னிக் ஏரியையும் தூண்ட அலைகள் இடம்பெற்றுள்ளன என்று திருப்பீடப் பத்திரிகை அலுவலகம் விளக்கியது.

லோகோவின் வலதுபுறத்தில் 2025 யூபிலியின் சிலுவை உள்ளது. அதேநேரத்தில் மேல் இடதுபுறத் தில் மூன்று பின்னிப்பிணைந்த வளையங்கள் மூவொரு இறைவனைக் குறிக்கின்றன. இந்தச் சின்னம் எபேசியர்களுக்கு புனித பவுல் எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்டஒரே இறைவன், ஒரே நம்பிக்கை, ஒரே திருமுழுக்குஎன்ற பயணத்தின் குறிக்கோளைப் பிரதிபலிக்கிறது..

வட்டம் கடவுளின் ஒற்றுமையைக் குறிக்கிறது; பாலம் மக்களை ஒன்றிணைக்கும் ஒரே நம்பிக்கை  மற்றும் அலைகள், கடவுளின் குழந்தைகளுக்குப் புதிய வாழ்க்கையைத் தரும் திருமுழுக்குஎன்றுஹோலி சீபத்திரிகை அலுவலகம் தெரிவித்துள்ளது. இது கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே சகோதரத்துவத்தையும் உரையாடலையும் கட்டியெழுப்ப நம்மை அழைக்கிறது.

இந்தப் பயணத்திற்கான சின்னத்தில் திருத்தந்தை  தனது வலது கையை ஆசிர்வாதத்தில் உயர்த்தி, அமைதியைக் குறிக்கும் புறாவையும், லெபனானின் வளமான நம்பிக்கை மற்றும் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தைக் குறிக்கும் சிடார் மரத்தையும் சித்தரிக்கிறார். படத்தின் வலதுபுறத்தில் 2025 யூபிலி லோகோவிலிருந்து  நங்கூர வடிவில் ஒரு சிலுவை உள்ளது. இது கிறிஸ்துவின் மீதான நம்பிக்கையில் நிறுவப்பட்ட உறுதியான நம்பிக்கையைக் குறிக்கிறது.