திருத்தந்தை
லியோ தனது முதல் திருத்தூதுப் பயணமாக துருக்கி மற்றும் லெபனான் செல்ல இருப்பதாகத் திருப்பீட ஊடக இயக்குநர் மேட்டியோ புருனி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வரும் நவம்பர் மாத இறுதியில் பயணம் மேற்கொள்ள உள்ள திருத்தந்தை, டிசம்பர் முதல் வாரம் வரை பயணத்திற்கான திட்டமிடல்களை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்
பயணத்தின்போது, திருத்தந்தை லியோ துருக்கியில் உள்ள இஸ்னிக் நகருக்குச் சென்று, நைசியா முதற்சங்கத்தின் ஆயிரத்து 700-வது ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், தொடர்ந்து லெபனான் செல்ல இருக்கும் திருத்தந்தை, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் மக்களையும் சந்திக்கவுள்ளதாகவும், இது அவர்களுக்கு ‘நம்பிக்கையின் பெரிய அடையாளமாக இருக்கும்’
எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.