news
வத்திக்கான் செய்திகள்
திரு அவையின் மறைவல்லுநராகும் ஜான் ஹென்றி நியூமன்!

திருத்தந்தை லியோ, ஆங்கிலேய இறையியலாளர் ஜான் ஹென்றி நியூமனுக்குதிரு அவையின் மறைவல்லுநர் (டாக்டர் ஆஃப் தி சர்ச்) என்ற பட்டத்தை வழங்கி சிறப்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். நியூமன் கிறித்தவ இறையியல் மற்றும் போதனையில் முக்கியப் பங்களிப்பைச் செய்தவர் எனவும் திருத்தந்தை லியோ அவரைப் பாராட்டியுள்ளார். சிறந்த எழுத்தாளரான இவருக்குக் கடந்த 2010-ஆம் ஆண்டு திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் அருளாளர் பட்டம் வழங்கினார்அதனைத் தொடர்ந்து கடந்த 2019-ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவருக்குப் புனிதர் பட்டம் வழங்கினார்.

1801-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதி இலண்டனில் பிறந்த நியூமன், தனது 24-வது வயதில் ஆங்கிலிக்கன் அருள்பணியாளரானார். 1845-ஆம் ஆண்டு கத்தோலிக்கத் திரு அவையில் சேர்ந்தார். புகழ்பெற்ற இறையியலாளர் மற்றும் தத்துவ ஞானியான இவர், திருத்தந்தை லியோ அவர்களால் கர்தினாலாக நியமிக்கப்பட்டார்.

இத்தகைய சிறப்பு மிக்க நியூமனின் வாழ்க்கைஇதயம் இதயத்துடன் பேசும்எனும் வசனத்தில் வெளிப்பட்டது என, புனித பான்ஸ் டி சேல்ஸ் கூறியதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“படைப்புத் திறன்களைப் பலவீனப்படுத்துகிறது AI”- வத்திக்கான் ஊடக ஆணையம் கவலை!

செயற்கை நுண்ணறிவுடன் (AI) தொடர்புடைய அபாயங்கள் குறித்து வத்திக்கான் ஊடக ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.  இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “AI மீதான அதிகப்படியான நம்பிக்கை, மனிதர்களின் விமர்சனச் சிந்தனை மற்றும் படைப்புத்திறன்களைப் பலவீனப்படுத்துகிறது எனவும், இத்தகைய அமைப்புகளின் ஒருமித்தக் கட்டுப்பாடு, அதிகாரத்தை மையப்படுத்துதல் மற்றும் சமத்துவமின்மை போன்ற அதீத விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், AI-யினால் பெரிதும் ஈர்க்கக்கூடிய, தவறாக வழிநடத்தித் தீங்கு விளைவிக்கும் தகவல்களை உருவாக்க முடியும் என்பதால், மனிதர்களுடைய குரல்கள் மற்றும் முகங்களை உருவாக்கி, தவறான தகவல்களைப் பரவச்செய்யும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அந்த ஆணையம் கூறியுள்ளது.

news
வத்திக்கான் செய்திகள்
உலகச் சமூகத் தொடர்பு தினம் 2026: கருப்பொருளை அறிவித்த திருத்தந்தை லியோ!

மனிதர்களின் தனித்துவத்தைப் பாதுகாப்பது இன்றைய சூழலில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததுஎன்ற தலைப்பை முன்மொழிந்து 2026-ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதிக்கான 60-வது உலகச் சமூகத் தொடர்பு தினக் கருப்பொருளை அறிவித்திருக்கிறார் திருத்தந்தை லியோ. ‘Preserving human voices and facesஎன்ற கருப்பொருளை மையப்படுத்தி, இந்த உலகச் சமூகத் தொடர்பு தினம் கொண்டாடப்படவுள்ளது. செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பக் கட்டமைப்புகள், மனிதர்களைப் பின்னுக்குத் தள்ளி அதன் ஆதிக்கத்தை அனைத்துத் துறைகளிலும் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும், இது எந்தச் சூழலிலும் மனிதர்களுக்கே உரிய கருணை, நெறிமுறை மற்றும் ஒழுக்கம் உள்ளிட்ட பொறுப்புகளுடன் செயலாற்றாது எனவும், இயந்திரங்கள் மனிதர்களின் வேலையை எளிமையாக்கவே பயன்படுத்தப்பட வேண்டுமே அன்றி, மனிதர்களை ஓரங்கட்டுவது ஏற்கமுடியாதது என வத்திக்கான் ஊடகப் பேராணையம் தெரிவித்திருக்கிறது. ஆகவே, சமூகத்திற்கு வழிகாட்டும் முகவராக மனிதகுலம் இருப்பதை உறுதி செய்வதுடன், மனிதத்தின் தனித்துவத்தைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, மனித வாழ்க்கையை இணைப்பதுடன் எளிதாக்கக்கூடிய கருவிகளாக, இயந்திரங்கள் செயல்படும் இடமாகத் தகவல்தொடர்பின் எதிர்காலம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த உலகச் சமூகத் தொடர்பு தினம் கொண்டாடப்படவுள்ளது.

news
வத்திக்கான் செய்திகள்
“இதுபோன்ற ஒரு சூழலை இதுவரை பார்த்தது இல்லை”- காசா குறித்துக் கவலை தெரிவித்த கர்தினால் பிட்சா பால்லா!

காசாவிற்கு அமைதிஎன்ற இணையவழி செப விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உரையாற்றிய முதுபெரும் தந்தை, பிரான்சிஸ்கன் சபை துறவியாக, புனித பூமியில் 35 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில் இவ்வளவு கடினமான தருணத்தை தான் இதுவரை பார்த்ததில்லை என வேதனை தெரிவித்துள்ளார். காசாவில் வாழும் மக்கள் போர் மற்றும் வன்முறையால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டுவர முடியாமல் தவித்து வருவதாகவும், இருக்க இடமின்றி, வாழ வழியின்றி புலம்பெயர்ந்து வருகின்றனர். வலிமையின் மொழி தோல்வியடையும் போது, வன்முறையின் முழு கோட்டையும் இடிந்து விழும்போது, நாம் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அழகு நிறைந்த புனித பூமியை அன்பு மற்றும் சாந்த குணத்துடன் மீட்டெடுக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்எனக்  கேட்டுக்கொண்டார்.

news
வத்திக்கான் செய்திகள்
‘இருளில் இருந்து ஒளியை நோக்கி’கடவுளின் அழைப்பை எடுத்துரைத்த திருத்தந்தை!

வத்திக்கானில் பொதுப்பார்வையாளர்கள் கூட்டத்தில் உரையாற்றிய திருத்தந்தை லியோ, “கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பு மிக ஆழமும், முழுமையான தியாகமும் கொண்டதுஎன நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், தந்தையின் அன்பிற்குச் சாட்சியாக விளங்கும் கிறிஸ்துவின் இந்த வழிமுறை கடந்த காலத்துடன் மட்டுமல்ல, இன்றும் பொருந்திச் செல்கிறது. நமது கடந்த கால இரவுகளோ அல்லது பழமையான தவறுகளோ, உடைந்து போன பிணைப்புகளோ, அது எதுவாக இருந்தாலும் அவருடைய மீட்பில் இருந்து எதையும் நாம் விலக்கி வைக்கமுடியாது. கடவுளின் கருணையால் தொட முடியாத அளவுக்கு அழிக்கப்பட்ட கடந்த காலம் எதுவும் இல்லை; சமரசத்திற்கு உள்ளான வரலாறும் இல்லை. கடவுள் நம்மை இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்கிறார். தனிமை, அவமானம், கைவிடுதல் மற்றும் வாழ்க்கைப் போராட்டத்தின் அன்றாட நரகத்திலும், நாம் தந்தையின் அன்பிற்குச் சாட்சியமளிக்க முடியும்என்று உறுதிபடத் தெரிவித்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
ஆயுதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்; சகோதரத்துவமும் நீதியும் தளிர்க்க வேண்டும்!

திருத்தந்தை லியோ உக்ரேனிய மக்களுக்காக உடனடிப் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததுடன், அண்மையில் அமெரிக்காவின் மினசோட்டாவில் கத்தோலிக்கப் பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், மவுரித்தேனியா கடற்கரையில் இறந்த புலம்பெயர்ந்தோருக்காகவும் தனது ஆழ்ந்த இரங்கலையும் இறைவேண்டலையும் தெரிவித்துள்ளார். மேலும், “ஆயுதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்; சகோதரத்துவமும் நீதியும் தளிர்க்க வேண்டும்!” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். “உலகில் ஒவ்வொரு நாளும் கொல்லப்படும் அல்லது காயமடையும் குழந்தைகளுக்காக அன்றாடம் இறைவேண்டல் செய்வதாகக் கூறிய திருத்தந்தை, “உலகத்தைப் பாதிக்கும் பெரிய மற்றும் சிறிய ஆயுதங்களின் தொற்றுநோயைத் தடுக்க கடவுளிடம் மன்றாடுவோம்எனவும் அழைப்பு விடுத்திருக்கிறார்.