news
வத்திக்கான் செய்திகள்
“இளையோருக்குத் திருவிவிலியம் எளிதில் கிடைக்கச் செய்யவேண்டும்”- திருத்தந்தை லியோ

வத்திக்கானில் கத்தோலிக்கத் திருவிவிலிய வல்லுநர்களுடனான கலந்துரையாடலில், திருத்தந்தை லியோ மக்களுக்காக அவர்கள் ஆற்றிவரும் பணியைப் பாராட்டி, தனது நன்றியையும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தனது கருத்துகளை முன்வைத்த அவர், தெய்வீக வெளிப்பாடு குறித்த கோட்பாடானதேய் வெர்பும்-இன் (Dei Verbum) 60-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில்  திருவிவிலியத்தை எல்லா இடங்களிலும் எளிதாக அணுகவும் மகிமைப்படுத்தவும் முயற்சி மேற்கொள்ள அவர் அழைப்பு விடுத்துள்ளார்.  தொடர்ந்து பேசிய திருத்தந்தை, இன்றைய சூழலில் இளம் தலைமுறையினர் புதிய டிஜிட்டல் உலகில் வாழ்கின்றனர் எனவும், அங்கு கடவுளின் வார்த்தை எளிதில் மறைக்கப்பட்டு விடுவதாகவும் குறிப்பிட்டு, இளம் தலைமுறையினர் திருவிவிலியத்தை எளிதாக அணுக வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“நாம் படைப்புகளின் பாதுகாவலர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்”- திருத்தந்தை லியோ

பிரேசிலில் நடைபெற்று வரும் .நா. சபையின் பருவநிலை மாநாட்டில் பங்கேற்கும் உலகளாவிய தெற்கு ஆயர்கள் மற்றும் கர்தினால்களுடன் திருத்தந்தை லியோ அவர்கள் காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது, “நீங்கள் விரக்தியை விட நம்பிக்கையையும் செயலையும் தேர்ந்தெடுத்து, ஒன்றாகச் செயல்படும் உலகளாவிய சமூகத்தை உருவாக்கியுள்ளீர்கள்எனப் பெருமிதம் கொண்டார். “முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அங்கீகரிக்கும் அதேவேளையில் அது போதுமானதல்லஎன்றும், “நம்பிக்கை மற்றும் உறுதிப்பாடு புதுப்பிக்கப்பட வேண்டும்என்றும் திருத்தந்தை அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“சவால்கள் நிறைந்த நேரத்தில் கிறிஸ்துவை நம் மையத்தில் கொள்வோம்”- திருத்தந்தை லியோ

உரோமை, அவென்டைன் மலையில் உள்ள  தூய  அன்செல்மோ ஆலய அர்ப்பணிப்பின் 125-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பெனடிக்டைன் அருள்பணியாளர்கள் மத்தியில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை லியோ, “கிறிஸ்துவை நம் வாழ்வின் மையமாகக்கொண்டு, இன்றைய சூழலில் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்குப் பதிலளிக்க வேண்டும்என அறிவுறுத்தினார். “சமூகத்தில் நாம் காணும் திடீர் மாற்றங்கள் நம்மைத் தூண்டிவிடுவது மட்டுமின்றி, கேள்வி எழுப்பவும் செய்கிறதுஎனக் குறிப்பிட்ட திருத்தந்தை, இதற்கு முன்பு நாம் சந்திக்காத பிரச்சினைகளைத் தற்போது சந்தித்து வருகிறோம் எனவும் கூறினார். இத்தகைய சூழலில், “கிறிஸ்துவை நமது இருப்பு மற்றும் நமது பணியின் மையத்தில் வைப்பதன் மூலமாக மட்டுமே, நமது அழைப்புப் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியும்எனவும் அவர் நினைவூட்டினார்.

news
வத்திக்கான் செய்திகள்
சுகாதாரப் பராமரிப்பில் A.I. பயன்பாட்டை உறுதி செய்யவேண்டும்’- திருத்தந்தை லியோ

வத்திக்கானில் நடைபெற்ற உலகச் சுகாதார மாநாட்டில்AI மற்றும் மருத்துவம்: மனித மாண்பின் சவால்என்ற  தலைப்பில்  சுகாதாரப் பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், மனிதகுலத்தின்மீது AI மற்றும் பிற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது நாம் சிந்திக்கும் விதத்தைப் பெரிதும் பாதிக்கிறது என்றும், நம்மையும் மற்றவர்களையும் நாம் எப்படி உணர்கிறோம் என்பதை மாற்றுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  நாம் தற்போது இயந்திரங்களுடன் இடைத்தரகர்கள் போலத் தொடர்புகொள்கிறோம்; இதனால் அவற்றின் நீட்டிப்பாக மாறிவிடுகிறோம்; அவ்வாறே, நம்மைச் சுற்றியுள்ள மக்களின் முகங்களை நாம் மறந்துவிடுவது மட்டுமல்லாமல், மனிதத்தை எவ்வாறு அங்கீகரிப்பது, போற்றுவது என்பதையும் மறந்துவிடுகிறோம்என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“கத்தோலிக்கக் கல்வி என்பது நம்பிக்கையின் அறிகுறிகளை வழங்கவேண்டும்”- திருத்தந்தை லியோ

ஆப்பிரிக்காவில் தரமான கத்தோலிக்கக் கல்வியையும், உலகளாவிய தெற்கு மற்றும் வடக்கு இடையேயான ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கும் உறுப்பினர்களைச்  சந்தித்த திருத்தந்தை, “ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள கத்தோலிக்கப் பள்ளிகள், அங்குள்ள மாணவர்கள் உதவிக்காக  எழுப்பும் அமைதியான கூக்குரல்களுக்குப் பதிலளிக்கவேண்டும்என்று கேட்டுக்கொண்டார்.

கத்தோலிக்கக் கல்வி மற்றும் ஆப்பிரிக்கச் சூழலில் நம்பிக்கையின் அறிகுறிகளை ஊக்குவித்தல்என்ற கருப்பொருளில் கென்யாவின் நைரோபியில் நடைபெறவுள்ள இரண்டாவது மாநாடு குறித்துக் குறிப்பிட்ட திருத்தந்தை, ஆப்பிரிக்க அடையாளத்தால் நிரப்பப்பட்ட தரமான கல்வியை வளர்ப்பதன் மூலம் அந்நாட்டு இளைஞர்களை உருவாக்குவதற்கான அவர்களின் விருப்பத்தை வெகுவாகப் பாராட்டினார். மேலும், அனைத்து வயதினரிலும் வளரும் பொதுவான உள் பலவீனத்தின் அறிகுறிகளைப் பற்றிக் கவலையுற்ற திருத்தந்தை, “உதவிக்கான இந்த அமைதியின் கூக்குரல்களுக்கு நாம், நம் கண்களை மூடிக்கொள்ளக் கூடாதுஎன்று குறிப்பிட்டார்.

news
வத்திக்கான் செய்திகள்
‘உங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ளத் தயங்காதீர்கள்’- திருத்தந்தை லியோ

வத்திக்கானில் ஒருங்கிணைந்த திரு அவை முன்னெடுப்புக் குழுக்கள் மற்றும் பங்கேற்பு அமைப்புகளின் உறுப்பினர்களைத் திருத்தந்தை லியோ சந்தித்துள்ளார். அப்போது அவர்கள் மத்தியில் உரையாற்றியவர் மூவேளை இறைச்சிந்தனையின்போது, “கடவுளோடு கொண்ட உறவில் மனத்தாழ்மையையும், நேர்மையான இதயத்தையும் வளர்த்துக் கொள்ளவேண்டும்என வலியுறுத்தினார். மேலும், “ஒருவரின் தகுதிகளை வெளிப்படுத்துவதன் மூலமோ, ஒருவரின் தவறுகளை மறைப்பதன் மூலமோ அல்ல; மாறாக, நாம் இருப்பதுபோல் கடவுளுக்கு முன்பாகவும், மற்றவர்கள் முன்பாகவும் நேர்மையாக இருப்பவரே மீட்கப்படுகிறார்என்று விளக்கினார்.

புனித அகுஸ்தினாரை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, நிலையற்ற பெருமையால் தனது காயங்களை மறைப்பவர் ஒரு நோயாளிக்குச் சமம் என்றும், குணமடைய தனது காயங்களைத் தாழ்மையுடன் வெளிப்படுத்துவதையே இறைவன் விரும்புகிறார் என்றும் தெரிவித்து, நம் தவறுகளை நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்கக்கூடாது என்றும், மனத்தாழ்மையின் இந்தப் பாதைதான், உள்மனக் குணப்படுத்துதலையும் கடவுளது அரசின் வளர்ச்சியையும் கொண்டுவருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.