news
வத்திக்கான் செய்திகள்
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!

அண்மையில் ‘Streets of Fear: Freedom of Religion and Belief in 2024/25’ என்ற  அறிக்கையை  வெளியிட்ட பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் (HRCP), கிறித்தவர்கள் மற்றும் இந்துகளுக்கு எதிரான வன்முறைகள் பாகிஸ்தானில் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளது. “சிறுபான்மையினருக்கு எதிரான அடிப்படைப் பாகுபாட்டைத் தவிர்க்க பாகிஸ்தான் தவறிவிட்டது; உலகம் ஒருங்கிணைப்பு நோக்கிச் செல்லும் வேளையில், நாமோ சகிப்புத்தன்மையற்ற, கொடூரமான சுழலில் சிக்கிக்கொண்டிருக்கிறோம்என்றுதேசிய நீதியும் அமைதியும்ஆணையத்தின் (NCJP) துணை இயக்குநர் அட்டாவுரெஹ்மான் சமன் தெரிவித்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
புனிதராக அறிவிக்கப்பட்ட அருள்சகோதரி மரியா துரொன்காத்தி

திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட் அவர்களால் 2012-ஆம் ஆண்டு அருளாளராக அறிவிக்கப்பட்ட அருள்சகோதரி மரியா துரொன்காத்தி அவர்களுக்குத் திருத்தந்தை லியோ அவர்கள் அக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை உலக மறைப்பணி ஞாயிறன்று  புனிதர் பட்டம் வழங்குவதாக  அறிவித்துள்ளார். தான் ஒரு மறைப்பணியாளராக இருக்கவேண்டும் என்பதையே தனது உறுதியான நம்பிக்கையாகக் கொண்டு வாழ்ந்த இத்தாலியைச் சேர்ந்த சலேசியச் சபை அருள்சகோதரியான மரியா துரொன்காத்தி அவர்கள், 1883-ஆம் ஆண்டு பிப்ரவரி 16 அன்று பிரேசியாவில் பிறந்தார். 1969, ஆகஸ்டு 25 அன்று குயிட்டோவிற்குச் சென்ற அவர், விமான விபத்தில் இறந்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
இளையோரின் ஜூபிலி - 2025

ஜூலை 28 முதல் ஆகஸ்டு 3 வரை உரோமையில் கத்தோலிக்க இளையோர் ஒன்றிப்பு ஜூபிலி - 2025 நடைபெற்றது. 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இந்த ஆன்மிக விழாவில், 146 நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான இளையோர் பங்கேற்றனர். ‘Pilgrims of hope’- ‘நம்பிக்கையின் திருப்பயணிகள்என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்வில் உரையாற்றிய திருத்தந்தை, “இளைஞர்கள் துணிச்சலுடன் நம்பிக்கையை வாழ்வாக்க வேண்டும்; சமூக ஊடகங்களை ஆக்கப்பூர்வமான வழிகளுக்குப் பயன்படுத்த வேண்டும்; நட்பும் நீதியும் உங்கள் வாழ்க்கையின் அடிப்படையாக வேண்டும்என வலியுறுத்தினார்.

news
வத்திக்கான் செய்திகள்
“நாம் கடவுளின் மிக அழகியப் படைப்பு!”- திருத்தந்தை லியோ

ஏழைகள், ஆதரவற்றோர், வீடற்றவர்கள் என அல்பானோ மறைமாவட்டத்தில் காரிதாஸ் நிறுவனத்தால் பராமரிக்கப்படும் ஏழைகளோடு அமர்ந்து விருந்து உண்ட திருத்தந்தை லியோ, “எல்லாப் படைப்புகளிலும் மிக அழகானது, கடவுளின் சாயலில் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே! நாம் அனைவரும் கடவுளின் அன்பு உருவத்தைப் பிரதிபலிக்கின்றோம்; இந்த விருந்தோம்பல் நிகழ்வு ஒற்றுமை, சகோதரத்துவம், கடவுளுடன் ஒன்றாக இணைந்திருப்பது போன்ற அனுபவங்களின் வெளிப்பாடுஎன்றும், “நற்செய்தி விருந்தோம்பல் ஏழைகளிடமிருந்து தொடங்குகிறதுஎன்றும் குறிப்பிட்டுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
அருளாளர்கள் பிரசாத்தி, அகுதீஸ் உருவ தபால் தலை வெளியீடு

திரு அவையின் புதிய புனிதர்களாக அறிவிக்கப்பட இருக்கும் அருளாளர்கள் ஜார்ஜோ பிரசாத்தி மற்றும் கார்லோ அகுதீஸ் ஆகியோரின் உருவப் படங்களைத் தபால் தலைகளாக வத்திக்கான் தபால் தொடர்புத்துறை  வெளியிட உள்ளது. ஓவியர் ஆல்பர்டோ ஃபால்செட்டி (1878-1951) என்பவரால் வரையப்பட்ட அருளாளர் பியர் ஜோர்ஜோ பிராசாத்தியின் (1901-1925) உருவப்படம், அருளாளர்  கார்லோ அகுதீஸ் (1991-2006) அசிசி, சுபாசியோ மலையில், அவரது இறப்பிற்கு முந்தைய கடைசிப் பயணங்களின்போது எடுத்தப் புகைப்படமான சிவப்பு நிற அரைச்சட்டை அணிந்து, தோளில் ஒரு பையைச் சுமந்து நிற்கும் புகைப்படம் ஆகியன செப்டம்பர் 7 அன்று தபால் தலைகளாக வெளியிடப்படுகின்றன.

news
வத்திக்கான் செய்திகள்
திருப்பயணிகளோடு சிறைக் கைதிகளைச் சந்தித்தார் திருத்தந்தை!

வெனிஸ் நகரின் தூய மேரி மேஜர் சிறைச்சாலையில் உள்ள மூன்று கைதிகளை, அந்நகரின் திருப்பயணக் குழுவோடு திருத்தந்தை லியோ சந்தித்தார். “திருப்பயணமும், திருத்தந்தையுடன் நடந்த சந்திப்பும் கைதிகளின் ஆன்மா, வாழ்க்கை மற்றும் வரலாற்றில் சிறைக் கைதிகளைச் சமூக வாழ்வில் மீண்டும் இணைக்கும்; அனைவரின் மனத்திலும் அழியாத அடையாளத்தை விட்டுச்செல்லும்என்று வெனிஸ் முதுபெரும் தந்தை பேராயர் மொராலியா தெரிவித்துள்ளார்.