news
வத்திக்கான் செய்திகள்
வத்திக்கான் விண்வெளி ஆய்வகத்திற்குப் புதிய இயக்குநர்!

திருப்பீடத்தின் விண்வெளி ஆய்வக இயக்குநராகத் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் இயேசு சபையைச் சேர்ந்த அருள்சகோதரர் காய் கன்சோல்மேக்னோ அவர்களின் பணிக் காலம் வரும் செப்டம்பர் மாதத்தில் நிறைவுபெறும் நிலையில், அதன் புதிய இயக்குநராக இந்தியாவின் கோவாவைச் சேர்ந்த புகழ்பெற்ற விண்வெளி அறிஞரான அருள்பணி. ரிச்சர்டு அந்தோணி டி சூசா சே.. அவர்கள், திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். ‘Max Planckநிறுவனம் மற்றும் மெச்சிகன் பல்கலைக்கழகத்தில் வானியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பால்வெளி அண்டத்தின் உருவாக்கம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சியில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனைச் சந்தித்த திருத்தந்தை 14-ஆம் லியோ

உரோமையில் உள்ள குழந்தை இயேசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்லிம்போமா, அதாவது நிணநீர்ச் சுரப்பிப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 15 வயது இக்னாசியோ என்னும் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த சிறுவனையும், அவனது குடும்பத்தாரையும் சந்தித்து அவர்களுக்காகச் செபித்து, தனது ஆசிரையும் அவர்களுக்கு வழங்கினார் திருத்தந்தை.

திருத்தந்தையின் இந்தச் சந்திப்பு நிகழ்வு பற்றிக் குறிப்பிட்ட தாய் குளோரியா, “கடவுள் எங்களைக் கைவிடவில்லை என்பதற்கான அடையாளமாகத் திருத்தந்தையின் சந்திப்பைக் கருதுகிறோம்என்று தெரிவித்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
கடவுளால் இணைக்கப்படும் திரு அவையின் வலையமைப்பு!

திருப்பீடத்தின் நற்செய்தி அறிவிப்புப்பணித்துறையும், சமூகத் தொடர்புத்துறையும் இணைந்து யூபிலியின் ஒரு செயல்பாடாக, இணைய வழியில் மறைப்பணியாற்றும் அனைவரையும் ஒன்றாக இணைத்துச் செபிக்கவும், இந்த யூபிலியைக் கொண்டாடவும் இளையோரை அழைத்துள்ளது. இதன் தொடக்க விழாவில் உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின், “கடவுளால் இணைக்கப்படும் திரு அவையின் வலையமைப்பு நம்பிக்கையிலும் அன்பிலும் இணையத்தில் பகிரப்படும் ஒரு சிறிய பதிவுகூட இறையருளின் தீப்பொறியாக மாறும்என்று கூறியுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
டாக்டர் ஜெய்சங்கருடன் பேராயர் காலகர் சந்திப்பு

வத்திக்கானின் மாநில உறவுகளுக்கான செயலாளரும் தூதரகத் தலைவருமான பேராயர் பால் ரிச்சர்ட் காலகர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரையும் அவரது குழுவினரையும் சந்தித்து உலகப் பிரச்சினைகளைத் தீர்க்க மதத்தின் பங்கு, திறந்த உரையாடலின் அவசியம் மற்றும் தூதரக முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பு உலக அமைதிக்காக வத்திக்கான் தொடர்ந்து முன்னெடுக்கும் தூதரகப் பணி மற்றும் ஒத்துழைப்பை மீண்டும் உறுதி செய்கிறது.

news
வத்திக்கான் செய்திகள்
திருவழிபாட்டு விழாக்களுக்கான சிறப்புத் தூதராக கர்தினால் இராபர்ட் சாரா நியமனம்

ஜூலை 25, 26 ஆகிய நாள்களில் பிரான்சின் வானேஸ் மறைமாவட்டத்தில் உள்ள அவுரேபியில் பிரிட்டன் இவான் நிக்கோலஸ் என்னும் விவசாயிக்கு புனித அன்னா காட்சியளித்ததன் 400-வது ஆண்டுத் திருவிழா வழிபாட்டு நிகழ்வுகளுக்குத் திருத்தந்தையின் சார்பில் பங்கேற்க கர்தினால் இராபர்ட் சாரா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 1966-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அங்கு வந்து குடும்பங்களில் நம்பிக்கை, எதிர்நோக்கு, தொண்டு ஆகியவற்றை வளர்த்து உயிர்ப்பிக்க வலியுறுத்தினார் என்றும் திருத்தந்தை 14-ஆம் லியோ மொழிந்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
வளர்ச்சி என்பது பெண்களின் மாண்பை மதித்தல்!

நியூயார்க் ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் உயர்நிலை அரசியல் மன்றக் கருத்தரங்கத்தின்போது நிலையான வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் பேசிய .நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Gabriele Caccia, உடல் நலம் என்பது நோயற்ற நிலை மட்டுமல்ல, உடல், உளவியல், சமூக, ஆன்மிக மற்றும் உணர்வுப்பூர்வமான நல்வாழ்வை உள்ளடக்கியது என்றும், உண்மையான பாலினச் சமத்துவம் ஒவ்வொரு நபரின் மனித மாண்பில் வேரூன்றியுள்ளது என்றும், வளர்ச்சி என்பது பெண்களின் மாண்பை மதிக்கவேண்டும்; அவர்களை வெறும் பொருளாதார, அரசியல் கருவிகளாகக் கருதக் கூடாது என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.