news
வத்திக்கான் செய்திகள்
“போர் வெறிக்கு நடுவே வாழ்வைப் பாதுகாப்போம்” - திருத்தந்தை லியோ

போர் எனும் மூடத்தனம் உலகைச் சூழ்ந்துள்ள இக்காலத்தில், கரு உருவானது முதல் அதன் இயற்கையான முடிவுவரை மனித வாழ்வைப் பாதுகாப்பது மிக அவசியமானதுஎன்று திருத்தந்தை லியோ வலியுறுத்தியுள்ளார். வத்திக்கானில் நடைபெற்ற பொதுமறை உரையின்போது போலந்து நாட்டின்வாழ்வின் புனித நாள் (Day for the Sanctity of Life) மற்றும் மங்கள வார்த்தைத் திருவிழாவை முன்னிட்டு உரையாற்றிய அவர், “வன்முறையும் இறப்பும் மலிந்துவிட்ட தற்போதைய சூழலில், ஒவ்வொரு மனித உயிரும் புனிதமானது என்பதை உலகம் உணரவேண்டும்என்று கேட்டுக்கொண்டார். பிரெஞ்சு மற்றும் அரபு மொழி பேசும் நம்பிக்கையாளர்களிடம் பேசுகையில், “அமைதியான உலகைக் கட்டியெழுப்பக் கிறித்தவர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணிக்கவேண்டும்; நற்செய்தியின் துணிச்சலான தூதுவர்களாக மாறி அன்பைப் பரப்பவேண்டும்என்று அழைப்பு விடுத்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
“சிறுவர்கள் திரு அவையின் உயிர்நாடி” - திருத்தந்தை

சிறுவர் பாதுகாப்பிற்கான பாப்பிறை ஆணையத்தின் (Pontifical Commission for the Protection of Minors) பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய திருத்தந்தை 14-ஆம் லியோ, “திரு அவையில் பாலியல் குற்றங்களைத் தடுப்பது என்பது ஒரு விருப்பத்தேர்வு அல்ல; மாறாக, அது திரு அவையின் வாழ்வோடு இணைந்த கடமைஎன்று வலியுறுத்தியுள்ளார். மேலும், “பாதுகாப்பு என்பது வெறும் நெறிமுறைகளோ அல்லது நடைமுறைகளோ மட்டும் அல்ல; அது ஒருகவனிப்புக் கலாச்சாரத்தை (Culture of Care) உருவாக்குவதாகும். சிறுவர்கள் மற்றும் நலிவடைந்த நிலையில் உள்ளவர்களைப் பாதுகாப்பது வெளியில் இருந்து திணிக்கப்படும் சுமையாக இல்லாமல், நமது நம்பிக்கையின் இயல்பான வெளிப்பாடாக இருக்க வேண்டும்என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களைக் கேட்டறிவது வேதனையானது என்றாலும், அது உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என்றும், மனத்தாழ்மையைக் கற்றுத்தரும் என்றும் டிஜிட்டல் தளங்களில் சிறுவர்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுப்பதிலும், உலகளாவிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உருவாக்குவதிலும் ஆணையம் முனைப்புடன் செயல்படவேண்டும் என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“சுகாதாரக் காப்பீடு வெறும் தொழில்நுட்ப இலக்கல்ல; அது ஒரு சமூகத்தின் தார்மிகக் கடமையாகும்”- திருத்தந்தை

ஐரோப்பாவில் அதிகரித்து வரும் வறுமை, தனிமை மற்றும் சுகாதாரத்துறையில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் குறித்து திருத்தந்தை லியோ தனது கவலையை வெளியிட்டுள்ளார். “அனைவருக்கும் சுகாதாரக் காப்பீடு என்பது வெறும் தொழில்நுட்ப இலக்கு மட்டுமல்ல; அது ஒரு நீதியான சமூகத்தின் தார்மிகக் கடமையாகும்என்று அவர் வலியுறுத்தியுள்ளார். வத்திக்கானில் நடைபெற்றஇன்று எனது அயலான் யார்?’ என்ற கருத்தரங்கில் உரையாற்றிய திருத்தந்தை, உலகச் சுகாதார நிறுவனத்தின் (WHO) அறிக்கையைச் சுட்டிக்காட்டிப் பேசினார். ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏழை மற்றும் நலிவடைந்த மக்கள் மருத்துவ வசதியின்றித் தவிப்பதையும் குறிப்பாக, இளைஞர்களின் மனநலம் புறக்கணிக்கப்படுவதையும் பிறரின் துன்பங்களைக் கண்டும் காணாமல் இருக்கும்உதாசீனக் கலாச்சாரத்தைகைவிட்டு, நல்ல சமாரியன் மனப்பான்மையுடன் நலிவடைந்தவர்களுக்குக் கைகொடுக்கவேண்டும் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
இணையதள உலகம் இறையழைத்தலின் புதிய களம்!

இன்றைய நவீன எண்ணிம (டிஜிட்டல்) உலகில், சமூக வலைதளங்கள் வெறும் தகவல் பரிமாற்றக் கருவிகள் மட்டுமல்ல; அவை இறையழைத்தலை வளர்க்கும் ஒரு புனிதமான பணித்தளம் என்று அண்மையில் நடைபெற்ற பன்னாட்டு இணையவழி கருத்தரங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ‘சமூக ஊடகங்களும் இறையழைத்தல் மேம்பாடும்என்ற தலைப்பில் பிப்ரவரி 27, 2026 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில், உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 548 துறவியர் மற்றும் தொடர்பாளர்கள் பங்கேற்றனர். இதில் உரையாற்றிய ஊடகவியலாளர் இரபேல் புஸ்கெமி, “இணைய உலகம் மாயையல்ல; அது உண்மையானது. அங்கு நாம் பதிவிடும் உள்ளடக்கங்களை விட, நமது நேர்மையான நோக்கமே முக்கியம்என்றார். சமூக வலைதளங்களை வெறும்தொலைக்காட்சிபோல ஒருதலைபட்சமாகப் பயன்படுத்தாமல், இளைஞர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் உரையாடல் தளமாக மாற்றவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், “டிஜிட்டல் கண்டத்தில் திறந்தநிலை மடாலயமாக இருந்து, தேடுதலில் உள்ள இளைஞர்களுக்குத் துணைநிற்பதே எங்களது பணிஎன்று அவர்கள் பகிர்ந்து கொண்டனர். சமூக வலைதளங்களில் தனிநபர் புகழைத் தவிர்த்து, சமூகமாக இணைந்து செயல்படுவதன் அவசியத்தையும் இக்கருத்தரங்கம் வலியுறுத்தியுள்ளது.

news
வத்திக்கான் செய்திகள்
வளைகுடா நாடுகளில் ஏவுகணைத் தாக்குதல்கள்: அமைதிக்காகச் செபிக்க வடக்கு அரேபியாவின் திருத்தூதர் அழைப்பு!

ஈரான்,  இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பஹ்ரைன்குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் ஏவுகணைத் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளனஇதனைத் தொடர்ந்து, வடக்கு அரேபியாவின் திருத்தூது நிர்வாகம், தனது அனைத்துத் திரு அவைச் செயல்பாடுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், “தற்போதைய நிச்சயமற்ற சூழலில்அனைவரும் ஒன்றிணைந்து அமைதிக்காகச் செபிக்கவேண்டும்அரசு அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைத் துல்லியமாகப் பின்பற்றுங்கள்என்று அவர் நம்பிக்கையாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும்முதியவர்கள்நோயாளிகள் மற்றும் நலிவடைந்தவர்கள் மீது தனிக்கவனம் செலுத்துமாறு பங்குத்தந்தையர்களுக்கு அறிவுறுத்தியுள்ள அவர், “அரேபியாவின் அன்னை நம் அனைவரையும் பாதுகாப்பாராகஎன்று கூறிஉலகளாவிய சமூகமும் அமைதிக்காகச் செபிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“திரு அவை அன்பின் கோட்டையாகத் திகழ வேண்டும்” - திருத்தந்தை லியோ

உரோமை நகரின் மையப்பகுதியில் உள்ள காஸ்ட்ரோ பிரிட்டோரியோ புனித இருதய பேராலயத்திற்குத் திருத்தந்தை லியோ கடந்த பிப்ரவரி 22 அன்று சென்றிருந்தார். இரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்திருக்கும் அப்பகுதியில் நிலவும் வறுமை மற்றும் வாழ்வியல் சவால்களைக் கண்டபோது, திரு அவை அன்பின் புகலிடமாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தனது மறையுரையில், “ஒரே இடத்தில் நவீன வசதிகளுடன் பயணிப்பவர்களையும், வீடற்ற ஏழைகளையும் நாம் காண்கிறோம். காலத்தின் முரண்பாடுகள் நிறைந்த இப்பகுதியில், திரு அவை வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல ; அது பசித்தவர்களுக்கு உணவும் தங்குமிடமும் வழங்கும் கருணையின் கோட்டையாக இருக்கவேண்டும்என்றும் தெரிவித்துள்ளார்.