நியூயார்க்
ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் உயர்நிலை அரசியல் மன்றக் கருத்தரங்கத்தின்போது நிலையான வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் பேசிய ஐ.நா.விற்கான
திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Gabriele Caccia, உடல்
நலம் என்பது நோயற்ற நிலை மட்டுமல்ல, உடல், உளவியல், சமூக, ஆன்மிக மற்றும் உணர்வுப்பூர்வமான நல்வாழ்வை உள்ளடக்கியது என்றும், உண்மையான பாலினச் சமத்துவம் ஒவ்வொரு நபரின் மனித மாண்பில் வேரூன்றியுள்ளது என்றும், வளர்ச்சி என்பது பெண்களின் மாண்பை மதிக்கவேண்டும்; அவர்களை வெறும் பொருளாதார, அரசியல் கருவிகளாகக் கருதக் கூடாது என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.