‘ஆயர் மாமன்றச் செயலாக்கத்திற்கான பாதைகள்’ என்னும் புதிய ஆவணம் வடிவமைக்கப்பட்டு, அகில உலகத் திரு அவை முழுவதும் ஒரே பாதையில் ஒன்றாகப் பயணிக்கும் பொதுவான, பகிரப்பட்ட கட்டமைப்பை வழங்க வெளியிட்டுள்ளது. இந்த ஆவணத்தில் ஆயர் மாமன்றச் செயலாக்கப் பாதையின் விளக்கங்கள், நோக்கங்கள், ஆயர் மாமன்றத்தில் பங்கேற்கும் குழுக்கள், அவர்களின் பங்களிப்பு, இறுதி ஆவணத்திற்கான பரிந்துரைகள் மற்றும் முறைகள் இடம்பெற்றன எனவும், ஒருங்கியக்கத் திரு அவை என்பது மறைபரப்புப் பணியில் உள்ளது என்றும், இந்தப் பணியே ஆயர் மாமன்றத்தைச் செயல்படுத்தத் தூண்டுகிறது என்றும் ஆயர் மாமன்றத்தின் பொதுச்செயலாளர் கர்த்தினால் மரியோ கிரேச் தெரிவித்தார்.