news
வத்திக்கான் செய்திகள்
கடவுளால் இணைக்கப்படும் திரு அவையின் வலையமைப்பு!

திருப்பீடத்தின் நற்செய்தி அறிவிப்புப்பணித்துறையும், சமூகத் தொடர்புத்துறையும் இணைந்து யூபிலியின் ஒரு செயல்பாடாக, இணைய வழியில் மறைப்பணியாற்றும் அனைவரையும் ஒன்றாக இணைத்துச் செபிக்கவும், இந்த யூபிலியைக் கொண்டாடவும் இளையோரை அழைத்துள்ளது. இதன் தொடக்க விழாவில் உரையாற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின், “கடவுளால் இணைக்கப்படும் திரு அவையின் வலையமைப்பு நம்பிக்கையிலும் அன்பிலும் இணையத்தில் பகிரப்படும் ஒரு சிறிய பதிவுகூட இறையருளின் தீப்பொறியாக மாறும்என்று கூறியுள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
டாக்டர் ஜெய்சங்கருடன் பேராயர் காலகர் சந்திப்பு

வத்திக்கானின் மாநில உறவுகளுக்கான செயலாளரும் தூதரகத் தலைவருமான பேராயர் பால் ரிச்சர்ட் காலகர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கரையும் அவரது குழுவினரையும் சந்தித்து உலகப் பிரச்சினைகளைத் தீர்க்க மதத்தின் பங்கு, திறந்த உரையாடலின் அவசியம் மற்றும் தூதரக முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பு உலக அமைதிக்காக வத்திக்கான் தொடர்ந்து முன்னெடுக்கும் தூதரகப் பணி மற்றும் ஒத்துழைப்பை மீண்டும் உறுதி செய்கிறது.

news
வத்திக்கான் செய்திகள்
திருவழிபாட்டு விழாக்களுக்கான சிறப்புத் தூதராக கர்தினால் இராபர்ட் சாரா நியமனம்

ஜூலை 25, 26 ஆகிய நாள்களில் பிரான்சின் வானேஸ் மறைமாவட்டத்தில் உள்ள அவுரேபியில் பிரிட்டன் இவான் நிக்கோலஸ் என்னும் விவசாயிக்கு புனித அன்னா காட்சியளித்ததன் 400-வது ஆண்டுத் திருவிழா வழிபாட்டு நிகழ்வுகளுக்குத் திருத்தந்தையின் சார்பில் பங்கேற்க கர்தினால் இராபர்ட் சாரா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், 1966-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அங்கு வந்து குடும்பங்களில் நம்பிக்கை, எதிர்நோக்கு, தொண்டு ஆகியவற்றை வளர்த்து உயிர்ப்பிக்க வலியுறுத்தினார் என்றும் திருத்தந்தை 14-ஆம் லியோ மொழிந்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
வளர்ச்சி என்பது பெண்களின் மாண்பை மதித்தல்!

நியூயார்க் ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் உயர்நிலை அரசியல் மன்றக் கருத்தரங்கத்தின்போது நிலையான வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் பேசிய .நா.விற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Gabriele Caccia, உடல் நலம் என்பது நோயற்ற நிலை மட்டுமல்ல, உடல், உளவியல், சமூக, ஆன்மிக மற்றும் உணர்வுப்பூர்வமான நல்வாழ்வை உள்ளடக்கியது என்றும், உண்மையான பாலினச் சமத்துவம் ஒவ்வொரு நபரின் மனித மாண்பில் வேரூன்றியுள்ளது என்றும், வளர்ச்சி என்பது பெண்களின் மாண்பை மதிக்கவேண்டும்; அவர்களை வெறும் பொருளாதார, அரசியல் கருவிகளாகக் கருதக் கூடாது என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
இஸ்ரேல் பிரதமருடன் திருத்தந்தை தொலைப்பேசி உரையாடல்

ஜூலை 18, வெள்ளிக்கிழமை திருத்தந்தை 14-ஆம் லியோ இஸ்ரேல் இராணுவத்தால் காசாவின் திருக்குடும்பக் கத்தோலிக்க ஆலயங்கள் தாக்குதலுக்கு உள்ளானதை முன்னிட்டு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர்களுடன் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு அங்கு நிலவி வரும் சூழல் குறித்து அறிந்துகொண்டார். காசாவில் உள்ள மக்களின் மனிதாபிமான நிலைமை குறித்துக் கவலை தெரிவித்த திருத்தந்தை குறிப்பாக, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் போரினால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

news
வத்திக்கான் செய்திகள்
ஆயர் மாமன்றச் செயலாக்கத்திற்கான புதிய ஆவணம்

ஆயர் மாமன்றச் செயலாக்கத்திற்கான பாதைகள்என்னும் புதிய ஆவணம் வடிவமைக்கப்பட்டு, அகில உலகத் திரு அவை முழுவதும் ஒரே பாதையில் ஒன்றாகப் பயணிக்கும் பொதுவான, பகிரப்பட்ட கட்டமைப்பை வழங்க வெளியிட்டுள்ளது. இந்த ஆவணத்தில் ஆயர் மாமன்றச் செயலாக்கப் பாதையின் விளக்கங்கள், நோக்கங்கள், ஆயர் மாமன்றத்தில் பங்கேற்கும் குழுக்கள், அவர்களின் பங்களிப்பு, இறுதி ஆவணத்திற்கான பரிந்துரைகள் மற்றும் முறைகள் இடம்பெற்றன எனவும், ஒருங்கியக்கத் திரு அவை என்பது மறைபரப்புப் பணியில் உள்ளது என்றும், இந்தப் பணியே ஆயர் மாமன்றத்தைச் செயல்படுத்தத் தூண்டுகிறது என்றும் ஆயர் மாமன்றத்தின் பொதுச்செயலாளர் கர்த்தினால் மரியோ கிரேச் தெரிவித்தார்.