நைஜீரியாவில்
அண்மைக்காலமாகத் தொடர்ந்து நடைபெற்றுவரும் கொடூரமான தாக்குதல்களுக்குத் திருத்தந்தை லியோ தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். வன்முறையினால் உயிரிழந்த மக்களுக்காகவும், அவர்களது குடும்பங்களுக்காகவும் தனது துயரத்தையும் கவலையையும் வெளிப்படுத்திய திருத்தந்தை, “பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நான் செபிக்கிறேன்; ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உயிரையும் உறுதி செய்ய நைஜீரிய அதிகாரிகள் உறுதியுடன் செயல்பட வேண்டும்”
என்றும் கேட்டுக்கொண்டார்.
பிப்ரவரி
3 அன்று வோரோ கிராமத்தில் 160 பேர் கொல்லப்பட்ட துயரத்தையும், கதுனா மாநிலத்தில் அருள்பணியாளர் உள்பட 51 பேர் கடத்தப்பட்ட நிகழ்வையும் திருத்தந்தை சுட்டிக்காட்டியதோடு, காகு பகுதியில் உள்ள ஹோலி டிரினிட்டி ஆலயத்தின் பங்குத்தந்தை நதானியேல் அசுவாயே கடத்தப்பட்டதற்கும், மூன்று பேர் கொல்லப்பட்டதற்கும் திருத்தந்தை வருத்தம் தெரிவித்துள்ளார்.