news
வத்திக்கான் செய்திகள்
திரு அவைக்கு நற்கருணை ஆன்மிகம் தேவை! திருத்தந்தை வலியுறுத்தல்!

அண்மையில்தூய  நற்கருணையின் ஆராதனைச் சகோதரிகள்(The Perpetual Adorers of the Most Blessed Sacrament, known as the Sacramentine Nuns) அமைப்பின் பிரதிநிதிகளை வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை லியோ, “திரு அவையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்ப அன்பும் இறைநம்பிக்கையும் நிறைந்தநற்கருணை ஆன்மிகம்மிகவும் அவசியமானதுஎன்று வலியுறுத்தியுள்ளார். மேலும், “அப்பத்தின் வடிவில் தம்மையே நமக்களித்த இறைவனைத் தொடர்ந்து ஆராதிக்கும் அவர்களின் பணி, மனித இதயங்களில் இறைவனைக் காண்பதற்கான ஏக்கத்தை நிறைவு செய்கிறதுஎன்றும் புகழாரம் சூட்டினார். புனித அசிசியாரின் போதனைகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், நற்கருணையும் திராட்சை இரசமும் நம்பிக்கையாளர்களின் ஒற்றுமையின் அடையாளம் என்றார். செபம், உழைப்பு மற்றும் சகோதரத்துவப் பகிர்வு ஆகியவற்றின் மூலம் திரு அவையில் அன்பையும் ஒற்றுமையையும் வழங்கும் இணைப்பாளர்களாக இக்கன்னியர் திகழவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை லியோ, நற்செய்தியின் போதனைகளுக்கு உண்மையோடு வாழ்ந்து புனித பாதையில் தொடர அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
“இளைஞர்கள் அன்பின் சாட்சிகளாகத் திகழவேண்டும்”- இளைஞர்களுக்குத் திருத்தந்தை அழைப்பு!

போர்களும் மோதல்களும் நிறைந்த உலகில், மேற்கு ஆப்பிரிக்க இளைஞர்கள் அன்பு, நீதி மற்றும் அமைதியின் தூதுவர்களாக வாழவேண்டும் என்று திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார். கானாவின் அக்ரா நகரில் செப்டம்பர் 7 முதல் 12 வரை நடைபெறும் முதலிடைக்கால மேற்கு ஆப்பிரிக்க இளைஞர் தின மாநாட்டிற்கு, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் அனுப்பிய வீடியோ செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சந்தேகங்களும் பாதுகாப்பற்ற  சூழலும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் இந்தக் காலகட்டத்தில், நம்பிக்கையை இழக்காமல் முன்னேறிச் செல்லவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார். “இளைஞர்கள் தியாகம் மேற்கொண்ட முந்தைய தலைமுறை அல்ல; அவர்கள் இறைவனின் மற்றும் திரு அவையின் நிகழ்காலம்என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் வீணாக நேரத்தைக் கழிப்பதைத் தவிர்த்து, மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் பாடுபடவேண்டும். மக்களுக்கும், கலாச்சாரங்களுக்கும், சமயங்களுக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டு, யாருக்கும் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட உணர்வு வராதபடி இணைந்து பணியாற்றுங்கள்என்று வாழ்த்தித் தனது செய்தியை நிறைவு செய்துள்ளார்.

news
வத்திக்கான் செய்திகள்
‘துயரங்கள் தீர்க்கும் இல்லம்’

இத்தாலியின் சான் ஜியோவான்னி ரொட்டோண்டோவில் புனித பியோ என்பவரால் நிறுவப்பட்டதுயரங்கள் தீர்க்கும் இல்லம்(Casa Sollievo della Sofferenza) ஆராய்ச்சி மருத்துவமனை அறக்கட்டளையின் கண்காணிப்புக் குழுவை, திருத்தந்தை லியோ சந்தித்துப் பேசினார். கடந்த மே 27, 2026 அன்று திருத்தந்தையால் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்ட இக்குழு, தங்களின் தலைவரான மக்சிமினோ கபாயெரோ லெடோ தலைமையில் இச்சந்திப்பில் பங்கேற்றது. சந்திப்பின்போது, மருத்துவமனையின் தற்போதைய நிதிநிலைமை, பணியாளர்களுடனான உறவை முறைப்படுத்துதல், அரசு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு மற்றும் நீண்டகாலச் செயல்பாடுகளுக்கான திட்டங்கள் குறித்துத் திருத்தந்தையிடம் விவரிக்கப்பட்டது. கண்காணிப்புக் குழுவின் செயல்பாடுகளைக் கவனமாகக் கேட்டறிந்த திருத்தந்தை, மருத்துவமனையின் எதிர்கால வளர்ச்சிக்கான பாதையைத் தொடர்ந்து கூர்ந்து கவனிக்க உள்ளதாக உறுதியளித்தார். நோயாளிகளுக்கும், அவர்கள் குடும்பங்களுக்கும் தொண்டாற்றும் புனித பியோவின் இம்மாபெரும் பணியைத் தடையின்றி முன்னெடுக்க இக்குழுவின் பணிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன.

news
வத்திக்கான் செய்திகள்
ரிமினியில் நோயுற்றோர், ஏழைகளுடன் திருத்தந்தை சந்திப்பு!

ரிமினியில் நடைபெற்ற 47-வதுமக்களிடையேயான நட்புறவு மாநாட்டில்பங்கேற்ற பிறகு, பேராலயத்திற்குச் சென்ற திருத்தந்தை லியோ, அங்கிருந்த நோயுற்றோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும்கரித்தாஸ்(Caritas) அமைப்பினால் பராமரிக்கப்படும் ஏழை எளிய மக்களைச் சந்தித்து உரையாடினார். அப்போது திருத்தந்தை அவர்களிடம், “இயேசு நோயுற்றோரையும், ஏழைகளையும், மாற்றுத்திறனாளிகளையும் அரவணைத்து, அவர்களுக்குக் குணமளித்து, மாண்பு நிறைந்த கண்ணியமான வாழ்வை மீட்டுக்கொடுத்தார். எனவே, இறைவனின் இல்லமாகிய இந்தப் பேராலயத்தில் நீங்கள் உங்கள் சொந்த இல்லத்தில் இருப்பதுபோல உணருங்கள்என்று ஆறுதல் கூறினார். மேலும், இறைவனின் இரக்கத்தையும் அன்பையும் பெற்றுக்கொண்ட நாம் அனைவரும் திரு அவையின் செயல்பாடுகளில் இணைந்து பயணிக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ரிமினி மறைமாவட்ட ஆயர் நிகோலோ அன்செல்மி திருத்தந்தையை வரவேற்றுப் பேசுகையில், இப்பகுதியில் இயங்கும் கரித்தாஸ் அமைப்பு உணவுக்கூடம், சிறைச்சாலைச் சேவை மற்றும் தெருவோர உதவிகள் மூலம் மிகவும் நலிவடைந்த மக்களுக்குச் சேவை செய்து வருவதைச் சுட்டிக்காட்டினார். நோயினாலும் வறுமையினாலும் பாதிக்கப்பட்டுள்ள மனிதர்களுக்கு ஆதரவளிக்கும் திருத்தந்தையின் மேய்ப்புப்பணிக்குத் தங்களின் ஆதரவை வழங்குவதாகவும் ஆயர் உறுதியளித்தார்.

news
வத்திக்கான் செய்திகள்
“பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துங்கள்”- திருத்தந்தை லியோ

பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப்பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று திருத்தந்தை லியோ மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மேலும், “இப்பகுதியில் அமைதியும் நிலையான தீர்வும் ஏற்பட இரு நாடுகள் கொள்கையை உலக நாடுகள்   விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இணைந்து வாழ்வதே உண்மையான அமைதிக்கு வழிவகுக்கும் என்று வத்திக்கான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, 2025 ஜூலையில் .நா.விடம் உரையாற்றிய பேராயர் கேப்ரியல் காச்சியா குறிப்பிட்டதுபோல, பாதுகாப்பான மற்றும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளின் அடிப்படையிலான இரு நாடுகள் கொள்கையே புனித பூமியில் நீதியான மற்றும் நிலையான அமைதிக்கான ஒரே சாத்தியமான மற்றும் நியாயமான வழி என்பதை வத்திக்கான் வலியுறுத்தியது.

news
வத்திக்கான் செய்திகள்
“இளைஞர்களே, கிறிஸ்துவின் உப்பாகவும் ஒளியாகவும் திகழுங்கள்”

பெரு நாட்டில் ஜூலை 30 முதல் ஆகஸ்டு 2 வரை நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான தேசிய இளைஞர் தின விழாவில் பங்கேற்ற இளைஞர்களுக்குக் காணொளி வாயிலாகச் செய்தி அனுப்பிய திருத்தந்தை லியோ, கிறிஸ்து மீது அன்பு கொண்ட இளைஞர்களின் மகிழ்ச்சியான சாட்சியமே தற்கால உலகிற்குத் தேவை என்று வலியுறுத்தியுள்ளார். பியூரா மண்டலத்தில் உள்ள சூலுகானாஸ் நகரில் நடைபெறும் இந்நிகழ்வில், பெரு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் 4,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஆயர்கள் மற்றும் துறவறத்தார் பங்கேற்றுள்ளனர். ‘துணிவுகொள்ளுங்கள், கிறிஸ்து வாழ்கிறார்!’ என்ற கருப்பொருளின் கீழ் இந்த மாநாடு நடத்தப்பட்டது. “துன்பப்படும் பலருடைய இதயங்களில் நம்பிக்கையை மீண்டும் மூட்டி வளர்க்கும் இறைவனின் கருவிகளாக மாற அஞ்சாதீர்கள். கிறிஸ்து நமது மத்தியில் வாழ்கிறார் என்ற உறுதியே நமக்குத் துணிவைத் தருகிறதுஎன்று தனது செய்தியில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.