உயிர்
கிடைத்தது வாழ்வதற்கு அல்ல; வாழ வைப்பதற்கே!
மனிதனானது
பெறுவதற்கல்ல; பகிர்வதற்கே!
இத்தகைய
அர்த்தமுள்ள பிறவியின் சின்னமாக இம்மண்ணில் மலர்ந்தவர்தான் தந்தை அன்சால்தோ. கி.பி. 1771-இல்
புதுவை மண்ணில் மறைப்பணியாற்ற அடியெடுத்து வைத்த இவர்...
சமூகத்தின்
சாயலில் மறைந்த துயரம் எங்கும் பார்த்தார்.
கருணையின்
குரலில் இறைவனின் அழைப்பைக் கேட்டார்.
சீரான
வாழ்க்கையைத் தேடிய அநேகர் நடுவே இவர்
சிதைந்த
இதயங்களை இணைக்க விரைந்தார்.
‘சேவைதான் தியாகம், அன்புதான் வழி’ என்று
கருணையின்
விதை விதைத்து, நம்பிக்கையை வளர்த்தார்.
அந்த
நம்பிக்கையின் மலராக அன்று
எம்
தாயாம் கொன்சாகா சபை மலர்ந்தது.
காலத்தின்
சோதனைகள் எங்கள் பாதையைத் தொட்டன.
ஆனால்,
நம்பிக்கையின் தீ எம்முள் எரிந்தது.
விதிகளும்
சோதனைகளும் வந்தபோதும் தளரவில்லை,
இறை
நம்பிக்கையில் இச்சபை தழைக்கத் தவறவில்லை.
அர்ப்பணிப்பின்
வழியில் நடந்த சகோதரிகள் பலர்
இருளில்
ஒளி பாய்ச்சும் கருணையின் விளக்குகள் ஆயினர்.
அறிவூட்டும்
கல்வி எங்கள் கரத்தின் விழிப்பு.
சமூகச்
சேவையே எங்கள் சாட்சியம் என
அன்பால்
உலகை மாற்றும் புனிதப் பாதையில்,
எம்
கொன்சாகா அருள்சகோதரிகள் இன்று
ஒளியாய்
நிற்கின்றனர். இவ்வாறு...
• அறியாமையின் இருளை உடைக்கும் ஒளியாக நாங்கள் ஒவ்வொரு குழந்தையின் கனவில் நம்பிக்கையை எழுதுகிறோம்.
• வலி கொண்ட உடலில் நிம்மதியை விதைக்கும் நாங்கள், கண்ணீரின் விழியில் ஆறுதலை ஊற்றுகிறோம்.
• தள்ளப்படுபவரைத் தழுவி, அமைதியின் மொழி பேசுகிறோம்.
• அன்பும் சமத்துவமும் எம் கொடிகளாகப் பறக்க, இறை உலகை இங்கேயே கட்டுகிறோம்.
இன்று
250 ஆண்டுகள் நிறைவு கண்ட சபை, எத்தனை இதயங்களில் நம்பிக்கையின் சுடர் ஏற்றிய சபை, அர்ப்பணமாய் பணியாற்றும் எம் சகோதரிகள், அன்பை வாழ்வாக மாற்றும் இறை முகங்கள்!
எங்கள்
தந்தை மைக்கேல் அன்சால்தோ...
அவரின்
இதயம் கருணையின் கடல்!
அவரின்
கைகள் தியாகத்தின் துறைமுகம்!
அவரின்
பார்வை எம் பாதையை ஒளிர்வித்தது. அவரின் கனவு
எம்
சபையின் உயிராகியது!
இன்று
அந்தத் தந்தையின் கனவு...
எம்
கையில் மலர்கிறது!
அவரின்
சிந்தனை எம் பணியில் வாழ்கிறது!
ஆக,
இன்று உலகின் பல மூலைகளில் எங்கள்
பாதம் பதிந்தது. அன்பும் சேவையும் இணைந்த புனிதப் பாட்டொன்று எழுந்தது. இங்ஙனம் நம்பிக்கை விதைக்கும் எம் ஒவ்வொரு கையிலும், அந்த தந்தையின் ஆன்மா இன்னும் வாழ்கிறது. மனிதனின் கண்ணீரைக் கருணையால் துடைத்து, மறக்கப்பட்டவர்களின் வாழ்வை நம்பிக்கையால் நனைத்து,
அன்பும்
அர்ப்பணிப்பும்
சங்கமித்த
தாயகம் - அதுவே
கொன்சாகா
சபையின் தெய்வப் புனிதம்!