“சில கருத்தியல்களோடு நான் முரண்படுகிறேன். நான் பங்களிப்பு செய்ய அல்லது நான் சார்ந்த சமூகத்திற்கு என் பங்களிப்பை மறுக்கும் கருத்தியலை நான் மறுக்கிறேன். ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் கருத்தியல் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இவ்வரசமைப்பு உரிமைச் சட்டம் அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கியது. பிரிவினைவாதத்தை (division) உள்ளடக்கிய இக்கருத்தியலை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் உற்றார் உறவினர் எவரும் கடைப்பிடிப்பதில்லை. ஆனால், ஏனையோர் இக்கருத்தியலை ஏற்கவேண்டும் என்று வற்புறுத்துகின்றனர்.”
“இதே கருத்தியல்தான்
மகாத்மாவின்
கொலைக்குக்
காரணி
ஆனது.
இதே
கருத்தியல்தான்
பாபாசாகேப்
அம்பேத்கரை
‘லில்லிபுட்’ என்று அழைக்கவைத்தது.
இதே
கருத்தியல்தான்
நூற்றுக்கும்
மேற்பட்ட
இடங்களில்
மக்களைத்
திரட்டி,
இந்திய
அரசமைப்புச்
சட்டத்தை
மறுக்கவும்
மனுஸ்மிருதியை
அதனிடத்தில்
வைக்கவும்
மக்களைத்
தூண்டியது.
கடந்த
ஒரு
நூற்றாண்டாக
இந்திய
மண்ணில்
விதைக்கப்பட்டு
வரும்
இக்கருத்தியலால்தான்
உச்ச
நீதிமன்ற
நீதியரசர்
ஒருவரின்
மதம்
பற்றிய
கருத்தால்
செருப்படி
வாங்க
நேர்ந்தது.”
கர்நாடக மாநிலத்தின்
இன்றைய
உள்துறை
அமைச்சர்
பிரியங்க்
கார்கே
அவர்கள்,
கடந்த
2025, டிசம்பர்
15 அன்று
‘பிரண்ட்
லைன்’ என்ற ஆங்கில
மாத
இதழுக்கு
அளித்த
நேர்காணலின்
சில
பகுதிகள்.
ஆறு
மாதங்களுக்கு முன்னர்
ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் கருத்தியலைத் தோலுரித்துக் காட்டிய கார்கே, ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு நிலவும் சட்ட விதிகளை மதித்து நடக்கவேண்டும் எனவும், அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்கள், பொது மைதானங்கள், சாலைகள், பூங்காக்களை விருப்பம்போல் பயன்படுத்துவதை அனுமதிக்க உரிய அனுமதி (Permission) பெறவேண்டும்
எனவும் கோரிக்கை வைத்தபோது, ஆர்.எஸ்.எஸ். என்ற மூல அமைப்பும், அவ்வமைப்பின் கிளை அமைப்புகளும் சினம் பொங்கத் துள்ளிக்குதித்தன.
திரு.
கார்கே அவர்களின் கோரிக்கையை ஏற்ற சித்தாராமையா அரசு, அரசின் அனுமதியைக் கட்டாயமாக்கி ஆணை பிறப்பித்தது.
இப்போதும் என்ன?
‘இந்நாட்டின் பாரம்பரியப் பெருமையையும், கலாச்சார மேன்மையையும், மதரீதியிலான தேசியத்தையும் வளர்த்தெடுக்கும் நோக்கில் உருவாகிச் செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆதிமூலம் எது?’ என்ற கேள்வியை ஒருவர் எழுப்பி, இவ்வமைப்பின் அடிப்படையைக் கேள்விக்குள்ளாக்குகிற கொடுமை இன்று நிகழ்ந்துள்ளது. ஆம், ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். என்ற மூல அமைப்பை, அவ்வமைப்பின் கிளை அமைப்புகளை, ஆர்.எஸ்.எஸ். நடத்தும் ஷாகாக்களை, பகை வளர்க்கும் பரப்புரைகளை, பிரிக்கும் மத உணர்வுகளால் மக்களைத்
துருவப்படுத்தியுள்ள
(Polaris) தேசிய
அமைப்பின் பிறப்பினை, அதன் ஆதிமூலத்தை கார்கே கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார். இது எப்படிச் சாத்தியமானது?
ஆர்.எஸ்.எஸ். எனும் பூனையின் கழுத்தில் கட்டப்பட்ட மணி தரும் செய்தியால், கார்கே ஒரு பூகம்பத்தையே கட்டவிழ்த்துள்ளார். ஒரு நிறுவனத்தை நாடெங்கும் கிளை பரப்பி, ‘ஷாகா’ என்ற பெயரில் இராணுவ ரீதியான பயிற்சி அளித்து இந்திய ஊடகங்களை, தொடர்பு சாதனங்களைத் தமதாக்கி, விஷமத்தனமானப் பிரச்சாரங்களால் வன்மம் வளர்த்து, கடந்த பன்னிரண்டு ஆண்டுகாலமாக அசைக்க இயலாத அளவுக்கு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆட்சியாளரின் பூர்வக் கதையையும், அவர்களின் முகவரியையும் கேள்வி கேட்கத் துணிந்துள்ளார் ஓர் இளைய அமைச்சர். இவர் இளைஞர் மட்டுமல்லர்; இவர் ஒரு பட்டியலினத்தவர். காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைகள்கூட வாக்கு வங்கி அரசியலுக்கு அஞ்சி எழுப்ப அஞ்சும் கேள்வியை இதே கட்சியைச் சேர்ந்த ஒருவர் எழுப்புவது சங்கப் பரிவாரங்களிடம் கோபத்தை எழுப்பியிருப்பதில் வியப்பு ஒன்றுமில்லையே!
கார்கே என்னதான்
கேட்டார்?
கார்கே
இப்போதைய சிவக்குமார் அரசில் உள்துறை அமைச்சர்; ஏற்கெனவே முதல்வராக இருந்த சித்தாராமையா அரசில் வேறு துறையில் அமைச்சராக இருந்தபோதுதான், தனது கல்புர்கி தொகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நடத்தவிருந்த ஆர்.எஸ்.எஸ். பவனியின்போது, அரசிடம் முன் அனுமதி கேட்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். இதனால் சித்தாராமையா பெறவேண்டிய அனுமதியைச் சட்டப்பூர்வமாக்கினார் (Mandatory).
இப்போது
கோபக்குரல் எழுப்பும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்த்து உள்துறை அமைச்சர் என்ற உயர் பொறுப்பிலிருப்பவர் பொங்கி எழுந்துள்ளார்.
‘நூற்றாண்டு கண்ட ஆர்.எஸ்.எஸ். என்ற நிறுவனம் எங்கே, எப்படிப் பதிவு (Register) செய்யப்பட்டுள்ளது?’
என்பதே இவரின் தலையாய கேள்வி. ஒரு மாநிலத்தின் அமைச்சர்களுள் ஒருவர், இப்படி ஒரு வினா எழுப்பியதைக் கண்டு அதிர்ந்து போன சங்கப் பரிவாரங்கள் சார்பாக அதன் இப்போதைய தலைவர் மோகன் பகவத் என்ன பதில் கூறுகிறார்?
ஆர்.எஸ்.எஸ். நாடு முழுவதும் நாள்தோறும் ஓயாது செயல்பட்டு வருவதாகவும், இவ்வமைப்பு முழுக்க முழுக்க வெளிப்படைத்தன்மையோடு தன் பணிகளை நடத்தி வருவதாகவும் பதிலிறுத்ததோடு, இவ்வமைப்பைப் பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை என்கிறார். அதை நியாயப்படுத்த, இந்து தர்மம்கூட இன்னும் பதிவு செய்யப்பெறவில்லை என்றும் விரைந்து பதிலிறுத்தார். “இந்து தர்மமே பதிவு செய்யப் பெறாமலே, மக்கள் இத்தர்மத்தை அனுசரித்து வருகையில், இந்துகளுக்கான ஆர்.எஸ்.எஸ். ஏன் பதிவு செய்யப்பெறவேண்டும்?” என்று வினா எழுப்புகிறார்.
1925-இல் நாக்பூரைத்
தலைமையிடமாகக் கொண்டு தொடங்கப்பெற்ற ஆர்.எஸ்.எஸ். இதன் மதத்தீவிரவாதப் போக்கால் வரலாற்றில் மூன்று முறை ஒன்றிய அரசால் தடைசெய்யப்பட்டது என்பதை மக்கள் அறிவர். மகாத்மா காந்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கோட்சேயால் கொலை செய்யப்பட்ட போது பண்டித நேரு, சர்தார் படேல் எனும் பெருந்தலைவர்களின் ஒப்புதலோடு ஆர்.எஸ்.எஸ். முதல் முறையாகத் தடை செய்யப்பட்டது. அன்றைய ஆர். எஸ்.எஸ். தலைவர் குருஜி கோல்வாக்கர் எடுத்துக் கொண்ட முயற்சிகளாலும், ‘இவ்வமைப்பு நாட்டுப் பற்றில் நம்பிக்கை கொண்டது’ என்று படேல் போன்றோர் கொண்ட நம்பிக்கையினாலும் அந்தத் தடை நீக்கப்பட்டது.
ஆனால்,
தடை நீக்கத்திற்கு ஒப்புக்கொண்ட பண்டித நேரு, ஒரே ஒரு கோரிக்கையை முன் வைத்தார்: “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நோக்கம் மற்றும் அதன் அமைப்பு (Constitution) பற்றிய
விளக்கத்தை எழுத்துவடிவில் எழுதித் தரட்டும்; நிரந்தரமாகத் தடைநீக்கம் பற்றி யோசிக்கலாம்” என்றார்.
இப்போது
திரு. கார்கே ‘இவ்வமைப்பு பதிவு செய்யப்பட்ட ஒன்றா?’ என்றுதான் கேள்வி எழுப்புகிறார். 1948-இல் நேரு தலைமையிலான ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரான சர்தார் படேல், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கான அமைப்பு விதி (Constitution) பற்றிக்
கேள்வி எழுப்பினார். அப்போதுதான் ஓர் உண்மை அம்பலமாகியது - இவ்வமைப்புக்கென்று ஓர் அமைப்பு விதி இல்லை என்ற கதை. உடனே இவ்வமைப்பின் மேல்மட்ட உறுப்பினர்கள் ஒன்றுகூடி, அவசர அவசரமாக ஓர் அமைப்பு விதியை உருவாக்கி, ஒன்றிய அரசிற்குச் சமர்ப்பித்த பின்பே ஆர்.எஸ்.எஸ். மீதான தடை நீக்கப்பட்டது. இவ்வமைப்பின் தலைவராக ஒருவர் நியமிக்கப்படுகிறார். போட்டியின்றி நியமிக்கப்படும் தலைவருக்குப் பதவிக்காலம் நிர்ணயிக்கப்படுவதில்லை. இவ்வமைப்பின் ஆட்சிக் குழுவில் பெண்களுக்கு இடமில்லை. இவ்வமைப்பின் செயல் திட்டங்களுக்குப் பின் எவ்விதச் சனநாயக முறைமையும் கடைப்பிடிக்கப் பெறுவதில்லை. சுருக்கமாகக் கூறினால், இது ஒரு சனநாயக அமைப்பே இல்லை; சனநாயகப் பண்பு இதன் அடிப்படையில் இல்லை என்பதால்தான், இன்றைய மோடி அரசின் போக்கில் சனநாயகத்தின் எச்சம் எதையும் நம்மால் காணமுடியவில்லை.
இவ்வமைப்பு
பதிவு செய்யப்படாத நிலையில், எவருக்கும், ஏன் அரசுக்கும்கூட பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. இந்திய நாட்டில் மக்களிடம் அல்லது சமூகத்தில் செயல்படும் சிறு அமைப்புகள் கூட பதிவுசெய்யப்பட்டவைதாம். அனைத்து நிதி நிறுவனங்களையும் பதிவு செய்தால் மட்டுமே அவை இயங்குவதற்கான உரிமம் என்ற பெயரில் அனுமதியைப் பெறுகின்றன. அப்படியிருக்க, இலட்சக்கணக்கான உறுப்பினர்களை வைத்து நடத்தப்பெறும் செயல்பாடுகள், பயிற்சிகள்... இவையெல்லாம் தங்குதடையின்றி நடத்தும் போது அதைப் பதிவுசெய்ய இவர்களுக்கு என்ன தயக்கம்?
“ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் புது தில்லியில் இவ்வமைப்பின் தலைமைச் செயலகத்தைத் திறந்து வைக்கிறார். இவ்வலுவலகம் 3.75 ஏக்கரில் அமையப் பெற்றுள்ளது. 150 கோடி ரூபாய் செலவில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இவ்வலுவலகம் கட்டி முடிக்க எங்கிருந்து நிதி பெறப்பட்டது? நாட்டு மக்களின் நலனுக்காகவே இவ்வமைப்பு செயல்படுகிறது என்று கூறிவருவது உண்மையானால், இப்பணிக்கான செலவீனங்களை அல்லது நிதி ஆதாரங்களை எங்கிருந்து பெற்றீர்கள் என்று கூறவேண்டாமா? மக்களுக்கு ஆற்றவிருப்பதாகச் சொல்லப்படும் அனைத்துப் பணிகளுக்கும் நிதி வேண்டுமே! அந்த நிதியை எங்கிருந்துதான் பெறுகின்றீர்கள்?” - கார்கே. ‘பிரண்ட் லைன்’,
15-12- 2025.
மேற்கண்ட திரு.
கார்கே அவர்களின் கூற்றின் நீட்சிதான் இப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பதிவு பற்றிய கோரிக்கை. வெளிநாட்டு நிதியுதவி பெறுதற்கான F.C.R.A-வின்மீது
தொடர்ந்து மிகு தீவிர அக்கறை காட்டிவரும் இன்றைய ஒன்றிய அரசு, மதச்சிறுபான்மையினர் பெறும் நிதி ஆதாரங்கள் அனைத்தும் அரசு விதித்த தணிக்கை முறைக்கு ஆட்படுத்தப்பட்டபோதும் எப்போதும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதும், நிதி பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூகப் பணியாற்றும் சமய நிறுவனங்கள், குடிமைச் சமூக அமைப்புகள் என இவையனைத்தும் முடக்கப்
பெறுவதை நாளும் பார்க்கிறோம். முறையான உரிமம் பெற்றுச் செயல்படும் இந்நிறுவனங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டவை.
ஆனால்,
வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் கணக்கிலடங்கா நிதிபெற்று இந்தியாவில் செயல்படும் விசுவ இந்து பரிஷத் (VHP) என்ற
ஆர்.எஸ்.எஸ்-சின் கிளை அமைப்பு இதுவரை பெற்ற நிதியின் அளவை எவரும் அறியார். இந்தியாவின் மிகப்பெரிய N.G.O. போல
இயங்கும் ஆர்.எஸ்.எஸ். என்ற மதவாத அமைப்பின் வரவு-செலவை மிகப்பெரிய அளவில் ‘சிதம்பர இரகசியமாக’
காப்பாற்றி வரமுடிவதன் காரணம், இதன் பதிவு செய்யப்படாத நிலைதான்.
இந்தியாவின் மிகப்பெரிய
மதப்பாதுகாப்பிற்கென உருவான ஆர்.எஸ்.எஸ். மதப்பெரும்பான்மை எனும் வாக்கு வங்கியினைக் காட்டி அச்சுறுத்தி வருவதால், சமய சார்பற்ற சனநாயக சக்திகள்கூட இம்மாதிரியான கேள்விகளை எழுப்ப அஞ்சுகின்றன. தேர்தல் அரசியல் தரும் அச்சம் இக்கட்சிகளை மௌனியாக்கிவிடுகின்ற சூழலில், கார்கே போன்றவர்களின் நிலைப்பாட்டைப் பாராட்டுவோம்.
“கார்கேயின் இந்த உறுதியான தலையீட்டை, வெளிப்படையான சவாலைக் கேள்விக்குட்படுத்த முடியாத அளவுக்கு அரசின் மறைமுகப் பலமாகச் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அம்பலப்படுத்திய போக்கை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இவ்வமைப்பு இந்நாட்டில்தான் நினைத்ததையெல்லாம் செய்துவருகிறது. இவ்வமைப்பு இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஒருபோதும் ஏற்றதேயில்லை. அரசமைப்புச் சட்டத்தின் அனைத்துப் பண்புகளும் செயலிழக்கும் வகையில் இவ்வமைப்பு தன் செயலைத் திறம்பட நடத்தி வருகிறது. இந்து வாக்குகளை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் காங்கிரஸ் இவ்வமைப்பைக் கேள்விக்குள்ளாக்க அஞ்சினால் அது ஓர் அரசியல் தற்கொலையே.”
எ.நாராயணா, அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம், ‘பிரண்ட் லைன்’,
15-12-2025.
இன்றைய தொழில்நுட்ப உலகம் ஒரு சுவாரசியமான போர்க்களமாக மாறியிருக்கிறது. ஒருபுறம், அமெரிக்காவின் வற்றாத முதலீடு, அதிநவீன ஆராய்ச்சி, உலகையே மிரட்டும் கார்ப்பரேட் செல்வந்தர்கள் என அசுர வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், ‘நாங்கள் என்ன சளைத்தவர்களா?’ என்று சவால் விடுகிறது சீனா. அமெரிக்காவிடம் தனியார் நிறுவனங்களின் பலம் இருந்தால், சீனாவிடம் ஒட்டுமொத்த அரசின் இரும்புக்கரமும் இருக்கிறது. ஏ.ஐ. கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, புதிய மாடல்களை மின்னல் வேகத்தில் அறிமுகப்படுத்துவது, அதைத் தங்களின் அன்றாடப் பயன்பாட்டில் புகுத்துவது... என சீனா கொடுக்கும் கழுத்தை நெரிக்கும் போட்டி அமெரிக்காவையே யோசிக்க வைக்கிறது.
இவர்கள்
அனைவரின் ஒற்றை இலக்கு AGI (Artificial General Intelligence) என்னும்
மனிதனுக்கு நிகரான அல்லது மனிதனை மிஞ்சிய, சிந்தனைத் திறன் கொண்ட ஏ.ஐ. மாடலை
முதலில் உருவாக்குவது யார் என்பதுதான். இப்போட்டியில் ஓபன் ஏ.ஐ., கூகுள்,
அன்த்ரோபிக், மைக்ரோசாஃப்ட், மேடா போன்ற புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனங்கள் இறங்கியுள்ளன. இதற்குத் தேவையான பில்லியன் கணக்கில் பணத்தைக் கொட்டவும், சிறிதும் தயக்கம் காட்டாமல் இரவும் பகலும் உழைத்து வருகின்றன. இந்த ஏ.ஐ. பந்தயம்
வெறும் ஆய்வகங்களோடு நின்றுவிடவில்லை. உலகளவில் பல்வேறு துறைகளில் இருக்கும் வேலைவாய்ப்புகளைத் தலைகீழாக மாற்றி வருகிறது. இத்தொழில்நுட்பம் அனைத்துலகக் கவனத்தையும் திருப்பியுள்ளதோடு, இத்துடிப்பான ஏ.ஐ. ஆராய்ச்சியில்
அமெரிக்கா முன்னிற்பதால் மாணவர்களை ஈர்ப்பதில் முன்னிலை வகிக்கிறது.
தொழில்நுட்பமும்
மாணவர்களும்
ஹார்வர்ட்
கென்னடி பள்ளியின் ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் பாலிடிக்ஸ்’ நிறுவனம்
2025-இல் நடத்திய ஆய்வு சுமார் 70% கல்லூரி மாணவர்கள்
ஏ.ஐ.-யைத் தங்கள்
வேலைவாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலாகக் கருதுகின்றனர் என்றும், அண்மைய ‘Gallup’ நிறுவன ஆய்வுகள்,
அமெரிக்கத் தொழிலாளர்கள் புதிய தொழில்நுட்பங்களால் தங்களுக்குப் பதிலாக இயந்திரங்கள் வந்துவிடுமோ என்ற நிச்சயமற்றத்தன்மை, தொழில்கல்வி சார்ந்த கல்வி பயில்பவர்களிடையே அதிகமாக இருப்பதாகவும் கூறுகின்றன.
மாணவர்கள்
ஏ.ஐ.-யில் நிபுணத்துவம்
பெற வேண்டிய அவசியத்தை உணர்ந்தாலும், அதே சமயம், அதுவே தங்களை வேலையிலிருந்து நீக்கிவிடுமோ என்று அஞ்சுவதாகக் கூறப்படுகிறது. இளம் மாணவர்கள் பாரம்பரியக் கல்வித் திட்டங்களில் படிப்பை முடித்து வெளிவரும்போது, முற்றிலும் மாறிப்போகும் வேலைச் சந்தையைச் சந்திப்பதாகக் கூறுகின்றனர். என்றாலும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏ.ஐ. எவ்வாறு
பயன்படுத்துவது என்பது குறித்துக் கற்பிக்கப்படுவது மிகவும் அல்லது ஓரளவிற்கு முக்கியமானதும்கூட என்று பெரும்பாலான அமெரிக்கர்கள் நம்புவதாக மற்றோர் ஆய்வு கூறுகிறது. இதே மனநிலைதான் உலகளவில் பரவலாக இருப்பதாகவும் உணரப்படுகிறது.
ஏ.ஐ.யினால்
பாதிக்கப்படாத
பாடப்பிரிவுகளைத்
தேடி...
சில
ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் ஒருவர் பல கல்விப் பிரிவுகளை
ஆய்வுசெய்து, ஒரு திட்டத்துடன் ‘பிசினஸ் அனலிட்டிக்ஸ்’ (Business Analytics) என்ற துறையில் திறன்களைக் கற்று, படிப்பை முடித்ததும், ஒரு நல்ல வேலையில் சேர வேண்டும் என்று பட்டமும் பெறுகிறார். ஆனால், ஏ.ஐ.-யின்
வளர்ச்சி, அவரின் திட்டங்களை முற்றிலும் மாற்றிவிட்டது. அவர் அந்தப் படிப்பைக் கற்று முடித்து வேலை தேடும் தருவாயில், புள்ளி விவரப் பகுப்பாய்வு (Statistical analysis), கணினி
குறியீடு (Coding) போன்ற
அடிப்படைத் திறன்களை ஏ.ஐ. எளிதாகச்
செய்யும் நிலை உருவாகி, அவரின் கனவு உடைந்துபோனது. இவ்வாறு ஆரம்பநிலை வேலைகள் (Entry-level
jobs) பலவற்றை ஏ.ஐ. பறித்து
விடுவது பலர் மனத்தில் பயத்தையும், எதிர்காலம் குறித்த கேள்வியையும் எழுப்புகிறது என்கிறார் ஓஹியோவில் உள்ள மியாமி பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் ஒருவர்.
இச்சூழலில்,
மாணவர்கள் தங்கள் பாடப்பிரிவை மாற்றியமைத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல், இன்றைய கல்லூரி மாணவர்கள், ‘ஏ.ஐ.-யினால்
பாதிக்கப்படாத’ ஒரு
முதன்மைப் பாடத்தைத் (major) தேர்ந்தெடுத்தல் என்பது நகரும் இலக்கைக் குறிவைப்பது (carrot infront of the cart) என்றாகிவிட்டது.
வேலைக்கேற்ற கல்வி
உலகளவில்
இன்று பிளம்பர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர் போன்ற உடல் உழைப்பு சார்ந்த எந்தவொரு வேலையும் ஏ.ஐ. ஆக்கிரமிக்க
முடியாதது. அதேநேரத்தில், மருத்துவம், நீதித்துறை மற்றும் கட்டடக்கலை போன்றவற்றைத் தவிர, பட்டதாரிகள் சேரும் பல வேலைகள் அவர்கள்
படித்த பாடத்தோடு நேரடியாகத் தொடர்புடையவை அல்ல என்பதுதான் உண்மை. எனவே, ஒரு பட்டம் என்பது, நாம் எந்தப் பாடத்தைப் படித்திருந்தாலும் நம்மால் ஒரு கருத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யவும், பகுப்பாய்வு செய்யவும் விமர்சிக்கவும் மற்றும் தகவல்களைச் செயல்படுத்தவும் முடியும் என்பவைகளுக்கு அடிப்படையாய் உள்ளதென்பது நம் அனுபவமும்கூட.
நாம்
‘மனிதர்களைக் கணினிகளாக மாற்ற’ முயற்சி செய்தோம். இப்போது கணினிகள் நம்மை விடச் சிறப்பாகச் செயல்படுகின்றன. என்றாலும், வருங்காலத்தில் இயந்திரங்களால் வழங்க முடியாத மனிதப்பண்புகளே அதிக முக்கியத்துவம் பெறும் என்றும் குறிப்பாக, இரக்கம் (Empathy), அறநெறி
(Ethics) மற்றும்
படைப்பாற்றல் மிக புதிய சிந்தனை (Innovative Thinking) போன்ற
திறன்களே மனிதர்களை இயந்திரங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் என்பது நம் இடைக்கால அனுபவமுமாக உள்ளது.
அறிவியல்
என்பது ஒரு வலிமையான வாகனம் என்றால், மனிதநேயம் என்பது அந்த வாகனத்தைச் சரியான திசையில் செலுத்தும் திசைக்காட்டி. திசைக்காட்டி இல்லாத பயணம் ஆபத்தானது என்பதை உணர்கிறோம். இன்று STEM (விஞ்ஞானம்,
தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) அறிவியல்-கல்வி முறைக்கு முதலிடம் கொடுப்பதைக் காண்கிறோம். இது வேலை வாய்ப்பிற்கு ஏற்றதென்றாலும், முழுமையான மனிதனை உருவாக்குவதில் பின்தங்கியுள்ளது. அறிவியல் நமக்கு எப்படி ஒரு கருவியை உருவாக்குவது என்பதைக் கற்றுக் கொடுக்கிறது. ஆனால், மனிதநேயம் (Humanities) மட்டுமே
அக்கருவியை ஏன் உருவாக்கவேண்டும்? எப்படிப் பயன்படுத்தவேண்டும்? என்ற அறநெறியைக் கற்றுத்தருகிறது.
உதாரணமாக,
அணுசக்தி என்பது ஒரு வீறு கொண்ட பொருள். இது மின்சாரம் தயாரிப்பதற்கா அல்லது அழிக்கும் ஆயுதமாக மாறவேண்டுமா என்பதைத் தீர்மானிப்பது மனிதநேயம்தானே! அடித்தளம் பலமாக இருக்க STEM கல்விப்
பிரிவுகள் தேவைதான். இன்று, அந்த அடித்தளத்தின் மேல் கோபுரம் கட்ட ஏ.ஐ. தேவை
என்றாகிவிட்டதால், ஒரே திசைக்கல்வி என்றில்லாமல், பல்முனை அறிவு இன்றைய சமுதாயத்தின் தேவை என்றும் உணரப்படுகிறது. எனவே, STEM-உடன்
சேர்த்து மனிதநேயப்
பண்புகளையும் (Humanities/Arts) ஊக்குவிப்பது
இன்றைய தொழில்நுட்பத்தின் கட்டாயமாக உள்ளது.
எதிர்காலத்தைச்
சந்திக்கத்
தயார்படுத்திக்
கொள்வதன்
அவசியம்
வருங்காலத்தில்
நம்மை அசைத்துக் கொண்டிருக்கும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சிதான் ஏ.ஐ.-ஐவிடப்
பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்திலிருந்து பிராந்திய அல்லது குழுவாதப் (tribalised) பொருளாதாரமாக மாறும் சூழலில், அந்தப் பாதிப்புகளிலி ருந்து தப்பிக்க முடியாத துறைகளைக் கண்டறிந்து, தவிர்க்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.
எனவே,
ஏ.ஐ.-யைப் பற்றி
அதிகம் கவலைப்படாமல், நாம் எதில் சிறந்திருக்கிறோமோ, எதை விரும்பிச் செய்கிறோமோ அதனை மேம்படுத்தவும், ஒரு நிறுவனத்திற்கு நாம் ஒரு சொத்தாக இருப்போமென்பதையும் வெளிப்படுத்த வேண்டியது இன்றைய தேவை. அதோடு, எதிர்காலம் எப்படி மாறினாலும், நம் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நம்பகமான கூடுதல் தொழிலை (side hustle) வளர்த்துக்கொள்வது நமக்கு நம்பிக்கை
கொடுப்பதோடு, ஏ.ஐ.-யினால்
வரும் எதிர்பாராத பாதுகாப்பின்மை மற்றும் நம்பகத்தன்மை போன்ற சிக்கல்களைச் சமாளிக்க உதவும்.
மாணவர்களின் இன்றைய
நிலை
“மாணவர்கள் தங்கள் பாடப்பிரிவுகளை (Majors) மாற்றுவது
இயல்பானது; ஆனால், அதற்குப் பல காரணங்கள் இருக்கும்” என்கிறார்
லுமினா (Lumina) கல்வி
அறக்கட்டளையின் துணைத் தலைவர் கோர்ட்னி பிரவுன். “இத்தனை மாணவர்கள் ஏ.ஐ. காரணமாகப்
பாடப்பிரிவை ஏன் மாற்றுகிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது” என்றும்
அவர் கூறுகிறார்.
‘ஜென் ஜி’
(Gen Z) இளையோரிடம்
நடத்தப்பட்ட கேலப் நிறுவன ஆய்வில், ஏ.ஐ. பயன்பாடு
அதிகரித்து வந்தாலும், இத்தலைமுறையைச் சார்ந்த பலர் இத்தொழில்நுட்பத்தில் உள்ள குறைபாடுகளைக் கண்டு அஞ்சுகின்றனர். குறிப்பாக, தங்களின் சிந்திக்கும் திறன் மற்றும் வேலைவாய்ப்புகள்மீது ஏ.ஐ. ஏற்படுத்தும்
தாக்கம் குறித்து அவர்கள் கவலைப்படுகின்றனர். கணிசமான ஜென் ஜி பணியாளர்கள் வேலைவாய்ப்புச்
சந்தையில் ஏ.ஐ.-யினால்
கிடைக்கும் நன்மைகளைவிட ஆபத்துகளே அதிகம் என்று உணர்கின்றனர் என்று கூறும் பிரவுன், இன்றைய கல்லூரி மாணவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்னவென்றால், அவர்கள் வழக்கமாக ஆலோசனை கேட்கும் பேராசிரியர்கள், ஆலோசகர்கள் அல்லது பெற்றோரிடமே இதற்குப் பதில்கள் இல்லை என்பதுதான்.
மேலும்,
“மாணவர்கள் எந்தவித வழிகாட்டியும் (GPS) இல்லாமல்,
தாங்களாகவே இந்தப் புதிய சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது” என்கிறார்
பிரவுன்.
திருத்தந்தை 13-ஆம் லியோ 1891-ஆம் ஆண்டு ‘தொழிலாளர் நிலைமை’ (ரேரும் நொவாரும்) என்ற சுற்றுமடலை வெளியிட்டார். இது அன்றைய தொழில்புரட்சியின் பின்புலத்தில், ஆலைத் தொழிலாளர்களின் பிரச்சினையை முன்னிறுத்தி எழுதப்பட்ட மடலாகும். தொழிலாளர் நிலைமை சுற்றுமடல் வெளியான 135-வது ஆண்டின் நினைவாக இன்றைய திருத்தந்தை 14-ஆம் லியோ ‘மகத்தான மானுடம்’ (மாக்னிபிக்கா ஹூமானித்தாஸ்) என்ற தனது முதல் சுற்றுமடலை, கடந்த மே 25 அன்று வெளியிட்டிருக்கிறார். இது இன்றைய செயற்கை நுண்ணறிவு காலத்தின் மனித மாண்பைப் பாதுகாப்பது குறித்து எழுதப்பட்ட மடலாகும்.
இன்றைய தொழில்நுட்பம் என்பது மனிதரை ஆளக் கூடாது; மாறாக, அது (செயற்கை நுண்ணறிவு உள்பட) மனிதருக்குப் பணியாற்றவேண்டும், சேவை செய்யவேண்டும். மேலும், இம்மடல் மனிதரின் சுதந்திரம், உண்மை, சமூகநீதி, அமைதி போன்ற கருத்துகள் பற்றியும் பேசுகிறது. இம்மடல் ஐந்து அத்தியாயங்களைக் கொண்டது. அவை முறையே:
1.
நற்செய்திக்குப்
பிரமாணிக்கமான
நம்பகத்தன்மையோடு
கூடிய அணுகுமுறை
திருத்தந்தை 13-ஆம் லியோ தொழில்புரட்சி காலத்தில் தொழிலாளர்களுடைய பிரச்சினைகளுக்குப் பதில் கூறினார். தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் காலம்வரை பல திருத்தந்தையர்கள் சமுதாயப் பிரச்சினைகளுக்குப் பதில்கூறி வந்திருக்கின்றனர். இன்றைய செயற்கை நுண்ணறிவின் சவால்களுக்குத் திருத்தந்தை இச்சுற்று மடல் மூலம் பதில் கூறுகிறார். மாறாத நற்செய்தி, மாறிவரும் காலத்தின் அறிகுறிகளுக்கு ஏற்ப புதிய விளக்கங்களைத் தந்து கொண்டிருக்கிறது.
2.
திரு அவை சமூகப் படிப்பினையின் அடிப்படைகளும் கொள்கைகளும்
கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மானிடர் வெறும் உற்பத்திக் கருவி அல்லர்; அவரின் மாண்பு பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்து மானிடரின் நலனும் குறிப்பாக, நலிவுற்றோர் நலனும் பேணப்படவேண்டும். பொதுநன்மை, கூட்டுத் தோழமை, சமூகநீதி, துணை நிலைக் கொள்கை (‘சப்சிடியாரிட்டி’) போன்ற திரு அவையின் அடிப்படைக் கொள்கைகள் பாதுகாக்கப்படவேண்டும்.
3.
தொழில்நுட்ப
ஆதிக்கம்,
செயற்கை
நுண்ணறிவின்
வாக்குறுதிகள்
ஒளியில்
மகத்தான
மானுடம்
நுண்ணறிவு ஒரு கருவியே அன்றி, அது மனிதரைவிட உயர்ந்ததோ மேலானதோ அல்ல; மானிடர் இயந்திரம் அல்லர்; அவர் அன்பு, மனச்சான்று, அருள்வாழ்வு, உறவுகளுக்குச் சொந்தக்காரர். தொழில்நுட்பத்தின் மூலம் மானிடரின் இயல்பான வரம்புகளை மீறி, அவர்களை மேம்படுத்த முயலும் போக்கை திருத்தந்தை லியோ விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார்.
4.
மாற்றத்தின்
காலத்தில்
மானிடரைப்
பாதுகாத்தல்
பொய்ச்செய்திகள், தகவல்திரிப்புகள் சனநாயகத்தைப் பாதிக்கின்றன. எனவே, உண்மை பகிரப்படவேண்டும். கல்வி என்பது வெறும் தகவல் பரிமாற்றம் மட்டும் அல்ல; மாறாக, கல்வி மனித ஆளுமையைச் செழுமைப்படுத்தவேண்டும். தொழில்நுட்பம் மனிதருக்காக; மனிதர் தொழில்நுட்பத்திற்காக அல்லர். ஊடகங்களை அளவுக்கு மீறிப் பயன்படுத்தி அவற்றிற்கு அடிமைகளாகும் அபாயம் இருக்கிறது. இதுகுறித்துச் சுயவிமர்சனமும் விழிப்புணர்வும் தேவைப்படுகிறது. அதிகாரத்தின் நாகரிகமும், அன்பின் பண்பாடும் போர், வன்முறை, அதிகாரக் குவிப்புப் பற்றியும் இம்மடல் பேசுகிறது. ஆயுதங்கள் மனிதகுலத்திற்கு ஆபத்து. கொலை முடிவுகளை இயந்திரங்களிடம் ஒப்படைக்கக்கூடாது. பாபேல் கோபுரம்போல அதிகாரத்தின் உச்சமல்ல நம் உலகு; மாறாக, அது அன்பின் பண்பாடாகப் பரிணமிக்கவேண்டும். சகோதரத்துவம், உரையாடல், அமைதி, நீதியின் மேல் கட்டப்பட்ட மனித சமுதாயத்திற்குத் திரும்ப இம்மடல் அழைப்பு விடுக்கிறது.
இச்சுற்றுமடலின் உச்சம் இந்த இறுதி அதிகாரத்தில் வரும் ‘அதிகாரத்தின் நாகரிகமா? அல்லது அன்பின் பண்பாடா?’ இதுவே இச்சுற்று மடல் நம்முன் நிறுத்தும் சவாலான கேள்வி. எதைத் தேர்ந்தெடுப்போம்? இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தையும், இயற்கை நுண்ணறிவையும் எப்படி அன்பின் பண்பாடாக மாற்றுவது என்ற கேள்வியையும் திருத்தந்தை முன்வைக்கிறார்.
(தொடரும்)
எளிமை எனும் வலிமை, அதன் தனித்துவம் என்ன என்பதைப் பற்றி நமக்கு ஒரு புரிதல் இருக்கும். இப்போது காணவிருக்கும் ‘வலிமையே வாழும்’ என்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்று.
வலிமை
என்பது வெறும் உடல் ஆற்றலை மட்டுமே குறிக்காது; அதையும் தாண்டி மனிதர்களை, சமுதாயங்களை, தலைமுறைகளை வடிவமைக்கும் நிலையான கருத்துரு கொண்ட எண்ண ஆற்றலைக் குறிக்கும். வலிமையைப் பற்றி நாம் கொண்டிருக்கும் பொதுவான கருத்து, உடல் பலத்துடன் அனைத்தையும் எதிர்கொள்வது என்பதுதான். இதுவும் ஒரு வலிமைதான் இல்லையென்று ஒதுக்கிவிட முடியாது. மற்றொரு வலிமையாக, அதன் மற்றொரு பிம்பமாக நாம் உணர வேண்டியது, எது உண்மையான வலிமை என்பதுதான்.
உண்மையான
வலிமை என்பது பொறுமை, விடாமுயற்சி மற்றும் துணிவு மூலம் தடைகளை மீறி வெற்றி காணும் ஆற்றலில் இருக்கிறது. ஒருவர் வாழ்வில் காட்டும் வலிமை, அவருக்குப் பிறகு வரும் தலைமுறைகளை வழிநடத்தும், ஈர்க்கும்; அது ஒரு மரபாக நிலைத்து நிற்கும். எங்கள் இனம் காத்த பெருந்தலைவன் என்று சிலரை அடையாளம் காட்டிப் பேருவுவகை கொள்வது இதன் அடிப்படையில்தான். ஏனென்றால் வலிமை என்றும் நிலைக்கும்.
வலிமையின்
இயல்பை இருவகையாக நாம் பிரிக்கலாம். புறவலிமை மற்றும் அகவலிமை. புறவலிமை என்பது நம் உடல் பலத்தைக் குறிக்கிறது. அகவலிமை என்பது நம் எண்ணங்கள் மற்றும் மனவலிமையைக் குறிக்கிறது. இந்த இரண்டும் இருந்தால்தானே நல்லது!
ஆம்,
இவை இரண்டும் ஒருசேர அமைந்தால் இரட்டிப்பு வலிமைதான். உடல் வலிமை மட்டுமே இருந்தால் அது முரட்டுத்தனத்திற்குள் தள்ளிவிடும். அகவலிமை மட்டுமே இருந்தால் அது சில நேரம் சூழ்ச்சிக்குப் பாதை வகுக்கும். இரண்டும் ஒருசேர அமையும்போது மட்டும் நல்லது நடந்துவிடுமா? இல்லை! அதோடு நன்னெறியும் சேரும்போதுதான் அவ்வலிமை சிறப்புமிக்க வலிமையாக வாழ்த்தப்படும்.
வலிமை
என்பது நம் வாழ்க்கைக்குப் பலமாக அமைகிறது. எப்படி? அதன் ஆழமான அர்த்தம், அதைப் புரிந்துகொள்ளும் உள்ளுணர்வில்தான் உள்ளது. எந்த இன்னலையும் எதிர்கொண்டு, தோல்விகளைக் துளைத்து, தடைகளைக் கடந்து, மீண்டும் மீண்டும் உற்சாகத்துடன் எழுந்து, அடையவேண்டிய நோக்கத்தில் உறுதியோடு நடைபோடும் வீரம் இருக்கிறதல்லவா... அதுதான் ஆகச்சிறந்த வலிமை. அதை எப்படி உள்ளூர உணர்வது? ஒன்றைப்பற்றித் தீர்க்கமாக, சரியான எண்ணத் தெளிவு இருந்தாலே போதும்; அது நமக்குள்ளே இருந்து இயக்கும் ஆக்கச் சக்தியாக மாறிவிடும்.
குழந்தைகளைத்
தனியாக வளர்க்கும் தாய் தனக்குள் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி; நாட்டினைக் காக்க எவ்விதச் சமரசமின்றிக் கொட்டும் பனியிலும் அயராது பணியில் ஈடுபடும் பாதுகாப்பு வீரனின் வீரம்; தொடர் ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்தி விடாமுயற்சியோடு விடைகாணத் துடிக்கும் அறிவியல் அறிஞரின் முயற்சி; மாணவர்களை எதிர்கால ஆற்றலாக மாற்ற கூர்தீட்டும் ஆசிரியரின் அர்ப்பணிப்பு, உண்மைக்காகவும் நன்மைக்காகவும் அயராது போராடுபவர்களின் செயல்பாடு... இப்படி எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வலிமை அவர்களை இயக்குகிறது; அது தங்குதடையின்றி வெளிப்படுகிறது.
என்
வாழ்வில் ஏற்பட்ட சோதனைகள்தான் என்னை இத்தனை வலிமையுள்ளவனாக மாற்றியுள்ளது. வலிகளே வலிமையைத் தருகிறது, வலிகளே வழிகளை ஏற்படுத்துகிறது.
சோதனைகள்
ஒருவரின் உண்மையான வலிமையைச் சோதனை செய்கிறது. எப்படி இருந்தாலும், நேருக்கு நேர் பார்த்துவிட வேண்டும் எனும் ஆழ்ந்த நம்பிக்கையோடு செயல்படுபவர்களின் வாழ்வுமுறைதான், உலகம் முழுவதும் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் வழிகாட்டியாக இருந்து, நிலையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், ஒரு மனிதரின் வலிமை அவருடன் மடிந்து, முடிந்துவிடாது. அவருடைய செயல்கள் வழிவழியாக வாழ்ந்துகொண்டேதான் இருக்கும்.
ஒவ்வொரு
குடும்பமும் நற்பண்புகள் மூலமும், ஒவ்வோர் அரசும் மக்களுக்கான நல்லரண், அது சார்ந்திருக்கும் சமூக கலாச்சாரம் மற்றும் பண்பாட்டைக் காப்பதன் மூலமும் வலிமையை நிலைநிறுத்துகின்றன. இவை இரண்டும் சரிவர அமையும்போது உணர்வுள்ள சமூகம் வளர்கிறது. எதிர்காலத் தலைமுறைக்குத் தேவையான விதையை இதன்மூலம்தான் விதைத்து வளர்த்தெடுக்க முடியும்.
ஒருவரது
தனிப்பட்ட வலிமையே இவ்வளவு சாதனையைத் தரும்போது, ஒன்றிணைந்த வலிமை எவ்வளவு பெரிய சாதனையை உருவாக்கும் என்பதை நினைக்கும்போது மிகப் பெருமையாக உள்ளது. ஒருவருக்கொருவர் துணையாக இருக்கும்போது வலிமை இன்னும் சிறப்படைகிறது. இந்த ஒற்றுமையை இயற்கைப் பேரிடர் அல்லது தொற்றுநோய் வரும்போது எவ்வித வேறுபாடுமின்றி மனித மனம் ஒன்றிணைந்து தனது ஒருமைப்பாட்டைக் காட்டும் வலிமையை எதைக்கொண்டும் தடுத்திட முடியாது. ஒருமித்த கருத்தோடும் ஒருமித்த நோக்கோடும் ஒன்று சேரும்போது நிலையான மாற்றங்களை உருவாக்க முடியும். இப்படிப்பட்ட வலிமை ஒருபோதும் குறையாது; மாறாக, வளரும். மேலும் ஒற்றுமையால் உறவு நலன் பெருகும்.
எவ்வளவு
நீண்ட காலம் வாழ்கிறோம் என்பதைத் தாண்டி, எவ்வளவு வலிமையோடும், உள்ளத் தெளிவோடும் வாழ்கிறோம் என்பதுதான் மிக முக்கியம். அதுதான் உண்மையான வலிமை. நம் கனவுகளை மற்றும் தன்னம்பிக்கையைப் பிறருக்குப் பரப்பி அவர்களைத் தூண்டுவதே உண்மையான வலிமை என்று சொல்லி அதைச் செய்து வாழ்ந்தவர்கள்தான் இன்றும் நம் நெஞ்சில் நிலைத்து நிற்கிறார்கள். ஏனென்றால், வலிமை என்றும் நிலைக்கும்.
தீர்க்கமான
நோக்கம் உள்ள வலிமை ஒருபோதும் குன்றாது; அது ஒரு நிலையான ஆற்றல் கொண்டது; அது காலம் கடந்து சென்றாலும் மறையாது; நினைவுகள், சாதனைகள் மற்றும் விட்டுச்சென்ற வழிகள் மூலம் உறுதியாக நம்மைப் பின்தொடரும். அது தனிநபர் உறுதிமொழியாகவோ, வரலாற்றுத் தாக்கமாகவோ, ஓர் இயக்கத்தின் கொள்கையாகவோ அல்லது ஒற்றுமை கொண்ட மக்களின் சக்தியாகவோ... இப்படி ஏதோ ஒரு வடிவத்தில் வலிமை தொடர்கிறது.
உடல்
வலிமை, உள்ள வலிமை மற்றும் அதிகார வலிமை இவை மூன்றும் ஒருவருக்கு அமைந்துவிட்டால் போதும்தானே! எனும் எண்ணம் வரும். நாம் ஏற்கெனவே கூறியுள்ளது போல இந்த வலிமைகளோடு நற்குணங்களும் (Virtues) சேர்ந்தால்தான் அது சிறப்பான வலிமையாக அமையும்.
உடல்
வலிமை பொறுமையையும், உள்ள வலிமை மன்னிப்பையும் தருவதே தகுதி நிறைந்த வலிமையாகும்.
(தொடரும்)
1944-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் உச்சமடைந்த நேரம். காங்கிரஸ் கட்சி தேச விடுதலைக்காக ‘வெள்ளையனே, வெளியேறு’ எனப் போராட்டம் நடத்துகிறது. மறுபக்கத்தில், திரை மறைவில் ஆங்கில அரசிடம் அரசுப் பதவிகளைப் பெற பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறது.
பேரறிஞர்
அண்ணா தனது ‘திராவிட நாடு’ இதழில் காங்கிரஸ் கட்சியைச் சாடி ‘பிஸ்கட்’ எனும் தன் புகழ்பெற்ற சிறுகதையை எழுதினார்.
துரைசாணி
அம்மா தன் பங்களா வராண்டாவில் அமர்ந்து பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவரது செல்ல நாய் ஜிம்மி அருகில் நின்று வாலாட் டுகிறது. துரைசாணி அம்மா ஒரு பிஸ்கட்டை ஜிம்மியிடம் வீசி ‘கேட்ச்’ என்கிறாள். ஜிம்மி பிஸ்கட்டை வாகாகக் கவ்விக்கொண்டு இன்னும் வேகமாக வாலாட்டுகிறது.
வேலைக்காரன்
இராமசாமி, துரைசாணி அம்மாவிடம், “எசமானி அம்மா, காலையில் இருந்து சாப்பிடலே, பசிக்குது”
என்றார். துரைசாணி அம்மா முகம் சுளித்து, “என்னது, ஜிம்மி தின்கிற பிஸ்கட்டை நீ கேட்கிறாயா? நீ
என்ன நாயா? போ வெளியே” என்கிறார். வேலைக்காரன் இராமசாமி தலை குனிந்தவாறு செல்கிறார். காட்சி மாறுகிறது.
கதர்
சட்டை, குல்லாவுடன் காங்கிரஸ் தலைவர் துரைசாணி அம்மாவைச் சந்திக்கிறார்.
“மேடம் துரைசாணி அம்மா, எங்கள் மக்கள் துன்பப்படுகிறார்கள்; எங்களுக்குச் சுதந்திரம் வேண்டும்”
என்கிறார். துரைசாணி அம்மா உதட்டில் விரல் வைத்து “உஷ், ஜிம்மி தூங்குகிறது, சத்தம் போடாதே” என்கிறாள்.
காங்கிரஸ்
தலைவர் குரலில் பணிவு கூட்டி, “அம்மா, தயவுசெய்து டொமினியன் அந்தஸ்தாவது கொடுங்கள்”
என்கிறார். துரைசாணி அம்மா ஒரு பிஸ்கட்டை காங்கிரஸ் தலைவர் காலடியில் போடுகிறார். பின் சொல்கிறார், “பிஸ்கட் வேணுமா? அப்ப ஜிம்மி மாதிரி குரை, வாலாட்டு”
என்கிறார்.
தலைவர்
சுற்றும் பார்த்து விட்டு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து, இடுப்பை வால்மாதிரி ஆட்டிக்கொண்டு ‘லொள், லொள்’ என்கிறார். துரைசாணி அம்மா விழுந்து விழுந்து சிரித்தவாறு இன்னொரு பிஸ்கட்டைப் போடுகிறாள். தலைவர் அந்தப் பிஸ்கட்டை எடுத்துச் சட்டைப் பையில் பத்திரமாக வைத்துக்கொள்கிறார்.
துரைசாணி
அம்மா சொல்கிறாள், “இப்போ போய் உன் மக்களிடம் சுதந்திரம் வாங்கியாச்சுன்னு சொல்” என்கிறார்.
இக்கதை
பதவிக்காகக் குறுக்குவழி தேடும் காங்கிரஸ் கட்சியின் முகத்திரையைக் கிழித்தது. இக்கதை
வெளியான அண்ணாவின் ‘திராவிட நாடு’ இதழ் இக்கதைக்காக அரசால் தடை செய்யப்பட்டது.
இந்திய
அரசியல் அமைப்பு
கூட்டாட்சி முறையை உள்ளடக்கியது. ஒன்றிய அரசு அதிகாரம், மாநில அரசு அதிகாரம், பொதுவான அதிகாரம் என மூன்று வகைகளைக்
கொண்டது. அரசியல் கட்சிகள், தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் என்ற வகையில் பிரிக்கப்படுகின்றன.
முதன்
முதலாக 1967-இல் தி.மு.க.
என்ற மாநிலக் கட்சி ஆட்சிக்கு வரும்வரை கூட்டாட்சி முறையில் வாதங்கள், பிரதிவாதங்கள் இல்லை. ஒன்றிய அரசு, மாநில அரசுகளை நசுக்குகிறது. மாநிலச் சுயாட்சிவேண்டும் என்பது, தி.மு.க.வின் ஐம்பெரும் கொள்கை முழக்கத்தில் முதன்மையானது.
காங்கிரஸ்,
பா.ச.க. என்ற
தேசிய அரசியலிலும், மாநிலக் கட்சிகளின் மூன்றாம் அணி என்ற அரசியலும் தவிர்க்க இயலாத ஒன்றாகும். இதன் அடிப்படையில் எதிர்ப்பதைவிட உறவாடிக் கெடுப்பதில் தேசியக்
கட்சிகள் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல. தங்கள் அரசியல், ஆட்சி அதிகாரத்திற்காக இருபெரும் தேசியக் கட்சிகளும் செய்த அரசியல், அரசியல் அமைப்பிற்கே சவால் விட்டதாகும். 356 பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைத்தல், நெருக்கடி நிலை, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து
நீக்கம், காஷ்மீர் உடைப்பு என அடுக்கிக்கொண்டே போகலாம்.
தேசியக்
கட்சிகள் மாநிலக் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்களை வளைப்பததற்காக ஒன்றிய அரசின் புலனாய்வுப் பிரிவுகள் இறக்கிவிடப்படும். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டாம் நிலை தலைவர் சுவேந்து அதிகாரியைப் பயன்படுத்தி பா.ச.க.
மம்தா பானர்ஜி அவர்களை வீட்டிற்கு அனுப்பியது.
தமிழ்நாட்டு
அரசியலைப் போலவே, பத்து ஆண்டுகளாக மகாராஷ்டிரா அரசியலை ஊன்றிக் கவனித்து வருகிறோம். சிவசேனா உடைப்பு, அதன் பல பிரிவுகள், தேசியவாத
காங்கிரஸ் உடைப்பு, அதன் உட்பிரிவுகள், ஆட்சி அமைத்தல், கவிழ்த்தல், தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி, தேர்தலுக்குப் பின் ஆட்சி அமைக்க ஒரு கூட்டணி என நடந்த காட்சிகள்
மக்களின் தீர்ப்பை மதிக்காத இருபெரும் தேசியக் கட்சிகளின் ஆட்சி அதிகார வெறியாகும்.
தமிழ்நாட்டு
அரசியலில் 79 ஆண்டுகளாக நடக்காத அதிசயங்கள் நடந்தன. தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வின் பிரிந்த தலைவர்கள்
ஒவ்வொருவரும் புதுதில்லி சென்று, உள்துறை அமைச்சரைச் சந்தித்த பின் அரசியல் முடிவுகளை எடுத்தார்கள். அ.தி.மு.க. என்ற தொண்டர்களின்
கட்சியை பா.ச.க.
சிதைத்துச் சின்னாபின்னமாக்கிவிட்டது.
எம்.ஜி.ஆர். அவர்கள்
தி.மு.க.விலிருந்து
பிரிந்ததற்கு, அ.தி.மு.க. உருவானதற்கு காங்கிரஸ்
மற்றும் வலது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களின் பின்னணி இருந்தது என்பதே வரலாறாகும். தங்களின் புதிய அடிமைகளால்
மாநில அரசியல் சூழல்களை மடை மாற்றும் வலிமை பெறுகிறார்கள்.
தேசியக்
கட்சிகள் தங்கள் பேர வலிமையால், மாநிலக் கட்சிகளை முடக்குகிறார்கள். வேட்பு மனு திரும்பப் பெறும் நாள்வரை சீட் பேரம் பேசுகிறார்கள். அதன்பின் வேட்பாளர் தேர்வில் திணறித் திண்டாடுகிறார்கள். தமிழ்நாடு என்.டி.ஏ. கூட்டணியில் ஒரு சிறு கட்சி ஒரு தொகுதியில் தாமரையிலும், மற்றொரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும் நிற்கிற அதிசயம் நடந்தது. ‘இந்தியா’ கூட்டணியில் கட்சியில் இல்லாத - வேறு கட்சியில் சீட் கேட்டவருக்குச் சீட் கொடுத்த புதிய அரசியல் வரலாறும் பதிவானது.
தேசியக்
கட்சிகள் தங்கள் தேவைகள் முடிந்தவுடன் மாநிலக் கட்சிகளின் காலை வாரி விடுவதிலும், முதுகில் குத்துவதிலும் வல்லவர்களாக இருக்கின்றன. ஆட்சி அதிகாரம் என்ற பிஸ்கட் பெற சதுரங்க ஆட்டங்கள் பல நடத்துகிறார்கள்.
2026 தமிழ்நாட்டுத் தேர்தல்
முடிவுகளுக்குப் பின் தொங்கு சட்டசபை அமைந்தது. அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், ‘இந்தியா’ கூட்டணியினரும், எதிர் என்.டி.ஏ. கூட்டணியினரும்
ஆளும் அரசிற்கு ஆதரவாக வாக்களித்தனர். என்.டி.ஏ. கூட்டணியினர்
கொறடா உத்தரவை மீறி வாக்களித்தனர். அ.தி.மு.க. கட்சி அவர்களுக்கு
மன்னிப்பு வழங்கிவிட்டது. இருப்பினும், சட்ட விதிகளின் அடிப்படையில் அவர்கள் பதவி பறிப்புக்கு ஆளாகலாம் என்பதும் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகும்.
தமிழ்நாட்டுத்
தேர்தல் முடிவுகள், ஆட்சி அமைப்பு, கூட்டணி மாற்றம் என்பது 2029 பாராளுமன்றத்
தேர்தலில், தேசிய அளவில் மூன்றாவது அணி என்ற முயற்சிகளுக்கு வித்திட்டுள்ளது. தேசியக்
கட்சிகளின் ‘பிஸ்கட் அரசியல்’ என்ற வர்ணிப்பு புதிய உரு பெற்றுவிட்டது. பத்தாண்டு காலப் பல மாநில
அரசியலைப் புரட்டிப்பார்த்தால், மாநிலக் கட்சிகளும்,
கொள்கைச் சித்தாந்தக் கட்சிகளும் பிஸ்கட்டை நோக்கி நகர்ந்துவிட்டன என்பதே உண்மை.
மக்களின்
வாக்கு சக்தியைக் கேவலப்படுத்தும் அரசியல் கட்சிகளை, மக்கள் வாக்கு
வழியே மீண்டும் தண்டிப்பார்கள் என்பதே நம்பிக்கை மிகு நாளைய
அரசியலாகும்.
‘சூசை’ தமிழ்க் கத்தோலிக்கர் நன்கறிந்த பெயர். வாடா மலரைக் கையிலேந்தி, வாழ்ந்த ஒரு புனிதர். இவரைத் தமிழ்க் கத்தோலிக்கருக்கு அறிமுகப்படுத்த முனைவது கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமே.
தூயவரான
ஜோசப்பை (யோசேப்பு) அல்லது தமிழில் அழைக்கப்பெறும் சூசையை அறிமுகப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமல்ல;
பின் ஏன் இக்கட்டுரையின் நாயகனாய் சூசை வருகிறார்?
சூசை
எனும் ஜோசப் கத்தோலிக்க இறைச் சமூகத்தில் வணக்கத்திற்குரியவர். தமிழ்நாட்டுக் கத்தோலிக்க ஊரகங்களில் ‘சூசை’ எனும் பெயர் மிகச் சாதாரண பெயர். கத்தோலிக்க மரபில் ‘சூசை’ எனும் பெயர் மிகப் பிரபலமானது.
சூசைக்கு என்ன
நடந்தது?
தமிழுக்கு
ஜோசப்பைச் சூசையாக்கியவர் ‘தத்துவப் போதகர்’ என்றழைக்கப்பட்ட இராபர்ட் டி நொபிலி. சூசையும்
ஜோசப்பும் 2026-ஆம் ஆண்டின் தேர்தல் களத்தில் இப்படியெல்லாம் பயன்படுத்தப்படுவார் என்று தெரியாமல் ஜோசப்பைச் சூசையாக்கிய நொபிலிக்கு உய்த்துணர வாய்ப்பில்லைதான்!
நொபிலி
என்ன செய்தார்? என்ற உண்மைகள் இன்றைய கத்தோலிக்கம் அறியாத உண்மை. எப்படியும் நற்செய்தியை அறிவித்தே ஆக
வேண்டும் என்ற உறுதியுடன் பணியாற்றிய இவர், கத்தோலிக்கத் துறவிக்கான ஆடை துறந்து, பார்ப்பனிய கோலம் தரித்தவர். தமிழின் ஒப்பற்ற இலக்கியத் தரங்களைத் தமிழருக்குரியதாக்க உரைநடைத் தமிழை அறிமுப்படுத்தி,
தமிழை மக்கள் மயப்படுத்தியவர். கத்தோலிக்கர் இன்று பயிலும் மந்திரங்களைத் தமிழ் உரைநடையில் தந்தவர். அவர் ஜோசப் எனும் உயரிய புனிதரைச் சூசையாக உச்சரிக்கவைத்தமையுள் எந்த அரசியலும் இல்லை. வாக்கரசியல் நிச்சயமாக இல்லை.
இன்று என்ன
நடந்தது?
இன்று
85% இந்துச் சகோதரர் வீடுகளின் சமையற்கட்டு வரை புகுந்துள்ள ஒரே பெயர் ‘ஜோசப்’ என்பதுதான். திருக்குடும்பத்தில் ஒருவரான ‘சூசை’ எனும் ஜோசப் இப்படிப் புகுந்துள்ளமை யாருக்கு மகிழ்வைத் தருகிறதோ இல்லையோ, தமிழ்நாட்டுக் கத்தோலிக்கர் எவரும் மகிழாது இருக்கவியலாது. சூசையாம் ஜோசப் நிகழ்த்தியிருக்கும் விந்தையுள் அடங்கியுள்ள உண்மை என்ன?
திரையுலகில்
வெறும் ‘விஜய்’ என்று அறியப்பட்ட ஒருவரை, இவர் வெறும் விஜய் அல்ல; ஜோசப் விஜய் என்று ஒரு மதவாதி வேண்டுமென்றே பகை வளர்க்கும் நோக்கில், பிரிவினைவாத உணர்வோடு ஜோசப்பை அழுத்திக் கூறினார். அம்மதவாதி கொடுத்த அழுத்தத்திற்குப் பின்னர்தான் விஜய்க்குத் தனக்கு ‘ஜோசப்’ என்ற பெயரும் உண்டு என்றிருந்திருக்கலாம்.
எந்த
நோக்கோடு அந்தப் பெரும்பான்மைவாதி ‘ஜோசப்’ என்ற பெயரை அழுத்திக் கூறினாரோ, அம்மதவாதியின் இழிந்த நோக்கம் நிறைவுறாமலேயே போயிற்று.
புனிதராம்
சூசையின் அருளால் ஜோசப் விஜய் உண்மையிலேயே ஜெயம் பெற்றார். மதவாதியின் நோக்கம் சிதைந்தமைக்குப் புனிதர் சூசைதான் காரணரோ?
இன்றைய
தமிழ்நாட்டு முதல்வரை ‘ஜோசப் விஜய்’ என்றழைப்பதில் கத்தோலிக்க நம்பிக்கையாளருக்கு மிக்க மகிழ்ச்சிதான். ஆனால், ஜோசப் விஜய் அவர்கள், விஜய்க்கு முன் ஜோசப் என்ற சொல் இடம்பெற்றிருந்ததை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டிருப்பாரா? தான் வெறும் விஜய் அல்ல; ஜோசப் விஜய்தான் என்றழைப்பதைப் பெருமிதத்தோடு ஏற்றுக்கொள்வாரா?
ஜோசப்
விஜய் அவரின் மறைசார்ந்த ஒழுங்கின்படி, நிச்சயமாகத் திருமுழுக்குப் பெற்றிருக்க வேண்டும்; தொடர்ந்து அவர் பெறவேண்டிய அருளடையாளங்களைப் பெற்றாரா? என்பது எவரும் அறியார் (விஜய் அசோக் நகர் பங்கில் நற்கருணை அருளடையாளம் பெற்ற புகைப்படங்கள் இணையங்களில் உலவுகின்றன. அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறிதான்!). ஆனால், இவரின் திருமணம் முழுக்க முழுக்க கிறித்தவம் சாராது தமிழ் மணம் முறைப்படியே நடந்தது. இவரின் தாய் ஓர் இந்துப் பெண்மணி. இவரின் தந்தையார் கிறித்தவர் என்பதும் உண்மையே. இவரும் இவர் மனைவியும் நல்ல கணவன்-மனைவியாகவே இல்லறம் நடத்துகின்றனர். இவரின் எண்பதாவது பிறந்த நாளினை இந்துமத கோவில் ஒன்றில் இந்துமதச் சடங்காச்சாரப்படியே நடந்தது என்பதையும் அறிகின்றோம்.
இக்கட்டுரையின்
நோக்கம் ஜோசப் விஜய் எந்த மதத்தைச் சார்ந்தவர்? அல்லது சாராதவர் என்று ஆய்வதல்ல; ஒரு தனிமனிதர் சார்ந்த மதத்தை வைத்து ஒருவரை அளவிடுவதும் நம் நோக்கமல்ல. மதரீதியாக ஒருவரை அளவிட்டு அவர் தகுதியை நிர்ணயிப்பதும் நமக்குரிய பணியுமல்ல.
மதத்தையும்,
மதம் உள்ளடக்கிய கடவுளர் நம்பிக்கையையும் காட்டுமிராண்டித்தனம் என்று இழித்துப்பேசிய தந்தை பெரியாரை நாம் இகழ்வதில்லை. தன் சமய நம்பிக்கையின் அடையாளத்தை எங்கும் காட்டிக்கொள்ளாத தலைவர் காமராசரையும் நாம் ஒதுக்குவதில்லை. நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை என்பது குடிமக்களின் தெரிவு (Choice). குடிமக்களின்
இவ்வுரிமையைத் தடுப்பது, சமய மொழியில் பாவம் (Sin). அரசியல்
மொழியாக வன்முறை (Violence). அதுவும்
ஒரு மதச்சார்பற்ற நாட்டில், ஓர் அரசியல் தலைமைக்கு மதம் சார்ந்து ஒரு நம்பிக்கை இருக்கலாம்; அதே வேளை ஒரு மதம் சார்ந்தவர் என்பதால், பிறமத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை நாம் ஏற்பதில்லை.
இன்றைய
நம் பிரதமர் குசராத் முதல்வராக இருந்தபோதுதான், குசராத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில் 2000 இசுலாமியர் கொல்லப்பட்டனர். சொந்த ஊரில் பாதுகாப்பற்ற இசுலாமியர் அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்தபோது, அவர்களின் துயர் கண்டு கவலையுறாத முகாம்களில் இசுலாமியர் இனப்பெருக்கம் (breeding) செய்து கொண்டிருப்பதாக நையாண்டி செய்தார்.
இதே
மனிதர் நாடு முழுவதும் பயணம் செல்கையில் தொழுகை செய்யாத கோவில்கள் இல்லை. கோவிலுள் பெரும் பக்தனாகவே காட்சியளிக்கிறார். மோடியின்
தனிப்பட்ட நம்பிக்கையை நாம் மதிக்கிறோம். அவர் இந்துவாக இருப்பதில் நமக்குக் கருத்து வேறுபாடில்லை. ஆனால், மத அடிப்படையில் ஒரு
தேசத்தைக் (Raistra) கட்டமைப்பதை
நாம் ஏற்க முடியாது. மத அடிப்படையில் அமையும்
தேசம் எல்லாருக்குமான (Raistra) தேசமாக
இராது என்பதனால் எதிர்க்கிறோம். மதங்களை மதிக்கும் நாம் மதவாதத்தை மறுக்கிறோம்.
திரு.
ஜோசப் விஜய் ஒரு கிறித்தவராக இருப்பது அரசமைப்புக்கு எதிரானதல்ல; ஏற்கெனவே கூறியது போன்று மத உரிமை என்பது
மனிதரது அடிப்படை உரிமை; மதச்சுதந்திரம் பற்றிப் பேசும் இந்திய அரசமைப்புச் சட்டம், கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசுகிறது. மதம் ஒரு கருத்தியல் எனும்போது, கருத்தியலைத் தாங்கும் ஒரு மதத்தை ஏற்க, கடைப்பிடிக்க, பரப்புரை செய்ய அரசமைப்பு உரிமை அளிக்கிறது; இது குடிமக்களுக்கான அடிப்படைக் கவசமாகும். இக்கவசம் புனிதமானது, போற்றுதற்குரியது.
விஜய் என்ன
செய்கிறார்?
திரு.
ஜோசப் விஜய் தன்னைக் கிறித்தவராக அடையாளப்படுத்தலில் எத்தவறும் இல்லை. ஆனால், இவர் என்ன செய்கிறார்? இவர் தன்னைச் சமயங்களைக் கடந்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டாலும் தவறில்லை. மேனாள் முதல்வர் சமயம் பேசும் கடவுளை நம்பாதவர்; எந்தவகை வழிபாட்டையும் ஏற்காதவர். அவர் மனைவி ஒரு கடவுள் பக்தை; இதனையும் ஸ்டாலின் மதிக்கிறார். மதங்களைக் கடந்து மனிதரை மதித்ததால், சிலவேளை இவரை ‘இந்து மதத்தின் விரோதி’ என்று தூற்றியதைப் பார்த்திருக்கிறோம். திரு. ஸ்டாலின் அவர்கள் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
தமிழ்நாட்டு
அரசின் சட்டமன்றத் தலைவர் பிரபாகர் தன் கிறித்தவ அடையாளத்தை வெளிப்படையாகவே காட்டிக்கொள்ள தயங்காதவர். பொது இடங்களில் திருவிவிலிய வாசகங்களை உச்சரிக்க இவர் தயங்குவதே இல்லை.
ஒரு
சிறுபான்மை மதம் சார்ந்த இவர், பெரும்பான்மையினரின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்தில் அமர்ந்தாலும், இவர் சார்ந்த மத அடையாளத்தை வலுவாக
வெளிக்காட்டுவதில் உறுதியாக இருக்கிறார். தான் சார்ந்த மத அடையாளத்தைப் பெரும்பான்மை
சமயத்தார் வெளிப்படையாகக் காட்டுவதில் தயக்கம் காட்டாத நிலையில், சிறுபான்மை மதம் சார்ந்த ஒருவர் தயக்கம் காட்டத் தேவை இல்லை என்றே கருதுகிறேன்.
அண்மையில்
தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் இயங்கும் இளங்குருமடத்தின் பேராசிரியர் ஒருவர் என்னோடு பேசும்போது, ஒரு கிறித்தவர் தமிழ்நாட்டு முதல்வராகிவிட்டார் என்றும், குருமடத்தின் குருமட மாணவர்கள் பெருமகிழ்வில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். திருச்சி மாநகரின் ஒரு தேவாலயத்திற்குள் சென்று, முழங்கால்படியிட்டு வணங்கியதைக் கண்டு பேருவகை கொண்டதாகவும் கூறினார்.
அந்தோணியார்
ஆலயத்தில் முழங்காலிட்டு வணங்கிய விஜய், திருச்செந்தூர் வேல் முருகனின் வேலைத் தாங்கியமை, மராட்டியம் வரை சென்று சீரடி பாபாவைத் தொழுதமை, கர்நாடகாவின் மூகாம்பிகைக்கு மகுடம் சூட்டியமை... இவையெல்லாம் கிறித்தவருக்கான நம்பிக்கை அடையாளமா?
ஒருவர்
மதம் சார்ந்தவரா? இல்லையா? என்பது நமது கேள்வியல்ல; ஒரு மதம் சார்ந்தவன் என்று தேவைக்குக் காட்டிக்கொண்டு,
எல்லா மதக் கடவுளரையும் வழிபடுகிறேன் என்று காட்டிக்கொள்வது உண்மையில் நாடகமே.
அடையாளம்
குடிமக்களின் உரிமை; அடையாளத் திணிப்பு அராஜகம்; அடையாள வழி பாகுபடுத்தல் வன்முறை; பன்முக அடையாளங்களை மதித்தல் சனநாயகம். குடிமக்களின் அடையாளத்தில் சமரசம் செய்வது போலித்தனம்.