news
சிறப்புக்கட்டுரை
மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு (வலையும் வாழ்வும் – 47)

“என்னங்க! ரெடியாயிட்டீங்களா? காப்பித் தண்ணி வேணும்னா போட்டுத்தரவா?”

தன் மகளோடு படுத்திருந்த வசந்தி தூக்கக் கலக்கத்தோடு பால்வெட்டுத் தொழிலுக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த பாலனிடம் சோம்பல் முறித்துக்கொண்டே கேட்டாள்.

பதிலேதும் சொல்லாமல் தலையில் கட்டிப் பயன்படுத்தும் பேட்டரி லைட்டையும் இரப்பர் மர வெட்டுக்கத்தியையும் எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்டான் ரவிபாலன்.

ஊரில் எல்லாரும் அவனை ‘பாலன் என்றே கூப்பிடுவர். இரப்பர் மரத்திலிருந்து பாலெடுக்கச் சூரியன் உதிக்கும் முன்பே செல்லவேண்டும். அப்படி அதிகாலையிலேயே சென்றால்தான் வெட்டுவதற்குப் பதமாகவும், மரத்தில் அதிக பாலும் இருக்கும். பாலனுக்குச் சொந்த இரப்பர் மரங்கள் கிடையாது. செல்லத்துரையின் பொட்டல்விளையில்தான் அவனுக்கு வேலை. ஓர் இரப்பர் மரத்தைக் கீறவும், பால் சேகரிக்கவும் சேர்த்து ஐந்து ரூபாய் கிடைக்கும். ஒருநாளில் குறிப்பாக, காலையில் மட்டும் முந்நூறு மரங்களைக் கீறி இரப்பர் பால் சேகரிப்பான். சேகரித்துப் பதப்படுத்திய இரப்பர் சீட்டை இயந்திரத்தில் அடித்தெடுத்துக் கொடுக்க ஒரு சீட்டுக்கு மூன்று ரூபாய் என்று பாலனுக்குக் கொஞ்சம் வருமானம் வரும். ஆனாலும், காலைப் பனியில் கண்ணாடி விரியன் பாம்புகளுக்கிடையில் வேலை பார்ப்பது அவனுக்கு முதலில் கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. பிறகு அதுவே பழக்கமாகிவிட்டது.

ரவிபாலன் இரப்பர் மரத்தின் பட்டையைக் கீறிப் பாலெடுக்கும் அந்த இலாவகமே பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வேறு எங்கும் மரத்தில் காயம் ஏற்படாதவாறும், அதற்கு வலி தெரியாமலிருப்பதற்கும் இரப்பர் மரங்களோடு பேசிக்கொண்டே தோலுரிப்பான். அதைப் பார்ப்பதற்கு ஒரு தாய் குழந்தைகளோடு கொஞ்சி மகிழ்வது போலிருக்கும்.

அதிகாலையில் மூன்றரை மணிக்கு இரப்பர் பாலெடுக்கப் போனவன், வழக்கம்போல காலையில் ஒன்பதரைக்குதான் வந்தான்.

இன்னைக்கு அமுதாவுக்குப் பிறந்தநாள். ஸ்கூலுக்குப் போகும்போது உங்கள கேட்டா. ஸ்கூலுக்குக் கொடுத்தனுப்ப மிட்டாய் கூட வாங்கிக் கொடுக்கல என்று ஏதேதோ சொல்லிக்கொண்டே பழங்கஞ்சியையும், கொஞ்சம் தோலுரித்த சிறு வெங்காயத்தையும் அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள் வசந்தி. பாலன் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் பழங்கஞ்சியைச் சோறோடு அள்ளிக் குடித்தான்.

வசந்தி வீட்டுமுற்றத்தைப் பெருக்கிக்கொண்டே ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால், பாலன் அவற்றையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளவில்லை. வீட்டுத்திண்ணையில் வைக்கப்பட்டிருந்த பாய் ஒன்றை எடுத்துப் போட்டுக்கொண்டு விட்டத்தைப் பார்த்துப் படுத்துக்கொண்டான்.

ரவிபாலன் தன் மனைவியிடம் பேசி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அவன் என்று இரப்பர் மரங்களோடு பேசத்தொடங்கினானோ அன்றிலிருந்து தன் மனைவியிடமோ அல்லது யாரிடமோ பேசியதில்லை. சிலர் அவனுக்கு மனப்பிராந்தி என்றனர். வேறுசிலர் அவனுக்குப் பொட்டல்விளையில் தற்கொலை செய்துகொண்ட அந்த ஊமைப்பெண் பிடித்திருக்கிறாள் என்றனர். இந்த இரண்டு ஆண்டுகளில் பல மருத்துவர்களிடம் ரவிபாலனைக் கூட்டிக்கொண்டு காட்டிவிட்டாள் வசந்தி. ஆனால், எந்தப் பயனும் இல்லை. யாரெல்லாமோ ஏதேதோ கதைகளை அவிழ்த்துவிட்டார்கள். ஆனால், உண்மையில் ரவி பாலனுக்கு என்னதான் ஆனது என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

அடுத்த நாள் காலை மூன்றரை மணிக்கெல்லாம் வழக்கம்போல ரவிபாலன் கண்விழித்து இரப்பர் மரங்களோடு பேசத் தயாரானான்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நாடி பிடித்து உடல்நலக் குறிப்புகளைச் சொல்லிவந்த காலம் மாறி ஸ்டெதஸ்கோப் வந்ததுபோல, இன்று டிஜிட்டல் மயமாகியிருக்கிறது மருத்துவத்துறை. உலகம் எவ்வளவுதான் ஏ.ஐ. உலகத்தில் வளர்ந்திருந்தாலும், நோய்களும் நோயாளர்களும் குறைந்தபாடில்லை.

உலகம் முழுவதும் இன்று சுமார் 43 இலட்சம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. மருத்துவர்களுக்கான மற்றும் மருந்திற்கான தேவை 2030-இல் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் தேவை ஒருபுறமிருக்க, உலகின் பல்வேறு இடங்களில் மருத்துவம் என்பது ஏழைகளுக்கு இன்னும் எட்டாக்கனியாக உள்ளது. எனவே, இந்த இடைவெளியைத் தவிர்க்க பலரும் செயற்கை நுண்ணறிவை மருத்துவத்துறைக்குப் பரிந்துரைக்கின்றனர். மருத்துவத்துறையில் இதுவரை இல்லாத வகையில் செயற்கை நுண்ணறிவு அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

பெருமளவிலான மருத்துவத்தரவுகளைச் செயற்கை நுண்ணறிவு ஆய்வு செய்யும்போது, அது நோய் மற்றும் நோயாளர்கள் பற்றிய துல்லியமான தரவுகளை முன்கூட்டியே வழங்குகிறது. இதனால் நோய் தொடக்கநிலையிலேயே கண்டறியப்படுவதால் நோய்க்கான மருத்துவச்செலவு மிகவும் குறைகிறது.

செயற்கை நுண்ணறிவு என்பது வளர்ந்துவரும் ஒரு தொழில்நுட்பம். ஆராய்ச்சிகளும் பலதரப்பட்ட ஆய்வுகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. எனவே, முழுமையாகச் செயற்கை நுண்ணறிவை மருத்துவர் ஒருவருக்கு இணையாகப் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும். ஏனெனில், செயற்கை நுண்ணறிவு சில நேரங்களில் எவ்வித ஆதாரமும் இல்லாத தவறான தகவல்களை உண்மையானவை போல உருவாக்கலாம் அல்லது அது நாடு, இனம், நோய், பொருளாதாரம் தொடர்பான சார்புநிலை அடிப்படையில் (க்ஷயைள) பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம். எனவே, முழுமையாக ஏ.ஐ. தருகின்ற தரவுகளின் அடிப்படையில் மருத்துவம் பார்ப்பது என்பது ஆபத்தை விளைவிக்கலாம்.

மருத்துவத் தகவல்கள் தொடர்பாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் ஏ.ஐ. பாட்களைப் பயன்படுத்தும் சூழல் ஒருபுறமிருக்க, மறுபுறம் சமூக ஊடகங்களில் செல்வாக்குச் செலுத்துவோர் (Social Media Influencers) மருத்துவக் குறிப்புகளையும், உடல்நலப் பிரச்சினைகளையும் எடைக்குறைப்புப் பற்றியும் பேசிவருவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் தலச்சேரியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் இணையதளத்தில் பார்த்த உடல் எடையைக் குறைக்கும் முறையைப் பின்பற்றி, பல மாதங்களாக வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தி வந்ததால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மருத்துவர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஊட்டச்சத்து நிபுணரின் (Certified Nutritionist) வழிகாட்டுதல் இல்லாமல் தீவிரமான உணவு முறைகளைப் பின்பற்றுவது உயிருக்கே ஆபத்தானது என்பதை நாம் உணரவேண்டும்.

மருத்துவம் பற்றிய அடிப்படைச் செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கு இணையம் அல்லது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தலாம். ஆனால், மருத்துவரிடம் நேரடியாக உரையாடுவதும் ஆலோசனை கேட்பதுமே நலமான வாழ்வுக்கு வழி வகுக்கும்.

news
சிறப்புக்கட்டுரை
எங்குச் செல்கிறோம்? என்ன செய்யப் போகிறோம்?

1917 - இடிபட்ட சுவர்போல் கலி வீழ்ந்ததாகப் பாரதி கொண்டாடிய நாள்; பாட்டாளி மக்களின் விடுதலை வேண்டி நடத்தப்பட்ட புரட்சிப் போரின் வெற்றி கிடைத்த தினம்; இரஷ்ய நாட்டைக் கைவசம் வைத்து, கொடுங்கோலாட்சி செய்த சார் மன்னனையும் அவன் ஆட்சிக்குத் துணை நின்ற நிலவுடைமையாளர்களையும் கவிழ்த்தொழித்த ஆண்டு; பொதுவுடைமைச் சமூகம் ஒன்று உருவாக்கப்பட்டதோடு, உலக அரங்கில் ஒரு வல்லரசாகவும் உருவாகி ஏற்றம் பெற்றது என்பதுதான் அண்மைக் காலம் வரையிலான வரலாறு.

புரட்சியில் வெற்றிகண்ட இரஷ்ய அரசுக்குப் புரட்சியாளர் லெனின் தலைமையேற்ற நிலையில், இரஷ்யப் புரட்சிக்குத் துணைநின்ற இளைஞர் அமைப்புகளின் (Youth League) பிரதிநிதிகள் சிலர் புரட்சியாளர் லெனினை அணுகி, “புரட்சி வெற்றி பெற்ற நிலையில், இனி இளைஞர் அமைப்பினரான நாங்கள் செய்ய வேண்டுவது என்ன?” என்ற கேள்வியை எழுப்பினர்லெனின் என்ன பதில் கூறினார் தெரியுமா? புரட்சிக்குத் துணை நின்ற இளைஞர் அமைப்பினருக்கு நன்றி கூறியிருக்கலாம்; வாழ்த்தும் கூறியிருக்கலாம்; இங்கே எழுதப்பெறும் இச்செய்தி இடம்பெறும்Lenin on Youthஎன்ற நூலில், கேள்வி எழுப்பிய இளைஞர்களிடம் அவர் அளித்த பதில்learn’ (‘கற்க) என்பதே.

அவ்விளைஞர்கள், ஏற்கெனவே கற்றறிந்தவர்களாகத்தான் இருந்திருக்கவேண்டும்; எனவேதான்எதைக் கற்க வேண்டும்?’ என்ற கேள்வியை எழுப்பினர். இளைஞர்களை நோக்கிகற்கஎன்று பதிலளித்த லெனின் தொடர்ந்துஇச்சமூகத்தைப் படிஎன்றார். கூடவே இச்சமூகம்  எப்படியுள்ளது என்ற விளக்கமும் தருகிறார்.

ஆட்சி செய்அல்லதுஆட்சி செய்ய வை (Rule or be ruled) எனும்திருடுஅல்லதுதிருடச் செய் (Rob or be robbed) என்பதற்கான விளக்கம் தருகிறார். இரஷ்யாவை ஆண்டு முடித்த கலி அரக்கனை வீழ்த்தி முடிக்கத் துணைநின்ற இளையோர் படைக்கு லெனின் கூறிய வழிகாட்டல் தமிழ்நாட்டின் புதிய ஆளும் தம்பிகளுக்குப் பொருந்துமா?

மேலே லெனின் அவர்களால் சுட்டிக் காட்டப்பட்ட சமூக அமைப்பின் உள்ளடக்கம் ஆழமானது. இன்னும் இந்தியச் சமூகம் பற்றி அறிய விரும்புவோருக்கான பாடமாக லெனின் காட்டிய இப்பகுப்பு (Analysis) பொருந்தும்.

இன்றைய தமிழ்நாட்டு இளையோர் தம் பெருவாரியான எண்ணிக்கையால் அவர்கள் விரும்பிய அரசைத் தெரிவுசெய்துள்ளனர். தெரிவு செய்யும் உரிமையை வழங்கிய சனநாயகத்தை நாம் போற்றுகின்ற வேளை, சனநாயகம் எனும் விழுமியத்தைத் தாங்கிய சனநாயக அரசைக் கொண்டு நடத்தும் சமூக-அரசியல் அறிவை இவ்விளைஞர் பெற்றவர்களா? என்ற கேள்வியைக் கட்டாயமாகக் கேட்க வேண்டியுள்ளது.

புரட்சியின் வெற்றிக்குப் பின்கூட, புரட்சிப் போரில் களமாடிய இளையோருக்குச் சமூகப் பாடம் நிகழ்த்த தேவையிருந்தபோது, ஒரு திரைக்கலைஞன் பின்னே, இரசிக மனப்பான்மையால் கூடிய ஒரு கூட்டம் தேர்தல் சனநாயக வழி ஒரு மாநில அரசை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்கப்போவது பற்றிக் கவலைகொள்ள வேண்டாமா?

இக்கும்பல் அரசியல் ரீதியாகத் தயார் செய்யப்பட்ட ஒன்றல்லஇவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு குழுவும் அல்ல; யார் இவர்கள்? திடீரென புயலெனக் கிளர்ந்தெழுந்து தேர்தல் மூலம் அரசதிகாரக் கோட்டையைக் கைப்பற்றியுள்ளனர். யார் இவர்கள்? எங்கிருந்து வருகின்றனர்? இவர்களின் சமூக-அரசியல் பின்னணி என்ன? இவர்கள் தன்னெழுச்சியாய் திரண்டெழுந்த சுயம்புகளா? யார் இவர்கள்? எங்கிருந்து வருகின்றனர்?

அண்டை நாட்டு அனுபவங்கள்

தென்னிலங்கையில் எழுந்த இளைஞர் எழுச்சி தன்னிச்சையானது அல்ல. சிங்களப் பேரினவாதம் தமிழ்த் தேசிய இனத்தின் நியாயமான கோரிக்கைகளை நிராகரித்து வந்த நிலையில், ஆயுதம்  தாங்கிய தமிழர் போராட்டத்தை வீழ்த்தி விட்டோம் என்ற மமதையில், சிங்களப் பேரினவாதம் இன ரீதியாக ஓர்மைப்படுத்தப்பட்ட சிங்களவர்களின் ஆதரவைத் தேர்தல் மூலம் பெற்றது. தமிழ் ஈழ அழிப்பு மூலம் பெறப்பட்ட எதேச்சதிகார  அரசின் சுயரூபத்தை அறிந்துகொண்ட இளையோர் படை பேரினவாதக் காவலர்களைத் துரத்தியடித்தது.

தமிழர் அழிப்பு மூலம் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்கலாம் என்று நம்பியிருந்த பேரினவாதிகளைத் துரத்திய இளையோரிடம் ஒரு நோக்கம் இருந்தது. அவர்கள் இலக்கும் தெளிவாக இருந்தது. உள்நாட்டுப் போரினால் நலிவுற்றிருந்த ஒரு சிறிய இலங்கைத் தீவின் இளைஞர் படை தமிழ்நாட்டு இளையோருக்குத் தரும் செய்தி என்ன?

வங்க தேசத்தின் இளைஞர் படை என்ன செய்தது? பாகிஸ்தானின் ஒடுக்குமுறைக்கு எதிராகத் திரண்டெழுந்து, தனிநாடு காணத் தலைமையேற்றவங்க பந்துஎன்று பெருமையோடு போற்றப்பெறும் முஜிபூர் ரஹ்மான் அவர்களின் மகள் இளையோர் போராட்டத்தின் விளைவாக இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். வங்க தேசத்தின் பெரிய தலைவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால், தண்டனை பெற்று ஒளிந்து வாழும் நிலை. திரண்டெழுந்த மக்கள் கூட்டம் புதிய அரசை புதிய தேர்தல்கள் மூலம் நிறுவியுள்ளது.

உலகின்ஒரே இந்து நாடுஎன்று இந்திய மதவாதிகளால் பாராட்டப்பெறும் நேபாள நாட்டில் மக்கள் எழுச்சியால் முடியாட்சி முடிவுக்கு வந்தது. சனநாயகப் பாதையை விரும்பிய மக்களின் ஆசைக்கேற்ப உருவான அரசுகள் மக்கள் எதிர்பார்ப்பில் தோற்றுப்போன நிலையில், நேபாள நாட்டின் இளையோர் தம் தன்னெழுச்சியால், ஆட்சியாளர்கள் துரத்தியடிக்கப்பட்டனர். இளையோர் சக்தியின் விருப்பத்திற்கேற்ப புதிய ஆட்சி அரங்கேறியுள்ளது. நேபாளம் போன்ற பின்தங்கிய நாட்டின் இளையோர் நம் நாட்டு இளையோருக்குத் தரும் பாடம் என்ன?

தமிழ்நாட்டு இளையோர், அரசியல் ஞானம் கிஞ்சித்தும் இல்லாத ஒரு திரைக்கலைஞனைத் தலைவனாக ஏற்று அணிதிரண்டுள்ளனர். அரசியல் அகற்றப்பட்ட ஒரு வெறுங்கூட்டம்மாற்றம்வேண்டி, இவரைத் தெரிவு செய்யப்போகிறதாம். ‘மாற்றம்எனும் பொருள் பொதிந்த சொல் இங்குக் கொச்சைப்படுதலையும் அதன் உள்ளடங்கிய அரசியலைப் புரியாதவர்களிடமும் சிக்கித் திணறுதலையும் பார்க்க முடிகிறது. இவர்கள் முன்வைக்கும் மாற்றம் திராவிடத்திற்கு மாற்றா? திராவிடத்தின் உள்ளடக்கமாம் சமூகநீதிக் கொள்கைகளுக்கு மாற்றாதமிழ்மொழி, தமிழ்க் கலாச்சாரம்  எனும் தனித்துவங்களுக்கு எதிரான மாற்றா?

ஒன்றிய ளும் அரசு நாளும் நடத்திக் கொண்டிருக்கும் மதவாத அரசியலுக்கு எதிராக என்ன மாற்றுக்கருத்தை நடிகரும், அவர் சகாக்களும் முன்வைத்துள்ளனர்? தன் கொள்கை எதிரியாக நீட்டி முழக்கி அறிவிக்கும் அந்த நடிகர், பா...வின் எந்த மக்கள் விரோதக் கொள்கையைத் தோலுரித்துக் காட்டினார்? பாசிசம் எனும் கொடுங்கொள்கையைபாயாசம்என்று கிண்டலடிக்கும் பாசிசத்தின் மொத்த வடிவாம் சங்கப் பரிவாரங்களின்  ஆட்சி முறையைக் கேலி செய்யாத இவர், தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழக அரசினைதீய சக்திஎன்று வசைபாடும் துணிச்சல் இவருக்கு எப்படி வந்தது?

கண்முன்னே தெரியும் தி.மு.. அரசு, இவருக்குத் தீயவர்களால் ஆளப்பெறும் ஆட்சியென்றால், ஒன்றியத்தை ஆளும் பா... ஆட்சி தெய்வீக ஆட்சியா? மதத்தையும் மதக் கடவுளரையும் முன்னிறுத்தி ஆட்சி நடத்தும் பிரதமர் மோடி போலவே, நாளும் ஒரு கோவிலுக்குத் தனி விமானத்தில் பயணித்து வழிபட்டு வரும் இவரும் மத அரசியல்தானே செய்கிறார்!

எச்சரிக்கை! எச்சரிக்கை!

இந்தியாவின் சனநாயக, சமயச் சார்பற்ற அரசியலுக்கு எதிராக முற்றிலும் முரணான வகுப்புவாத அரசியலின் வளர்ச்சியை ஆய்வு செய்த வரலாற்று ஆசிரியர்கள் இதன் காரணத்தை மிகத் தெளிவாக முன்வைத்தனர். இந்திய விடுதலைக்குப் பின் உருவான இந்தியத் தேசிய காங்கிரஸ் ஆட்சி மக்களின் விருப்பங்களைச் சரியாக நிறைவு செய்யாத நிலை; மாநில அளவில் தோன்றிய பிராந்திய கட்சிகளும் போதிய பணிகளைச் செய்யாத நிலையில், சனநாயகத்தில் முக்கியப் பங்குபெறும் கட்சிகள் கொள்கைகளை இழந்து வெற்றுக்கட்சிகளான நிலையில், தேர்தல் களத்தை ஆக்கிரமித்துக் கொண்டவர்கள் அரசியல்வாதியா? அல்லது குற்றவாளிகளா? (Criminals) என்று பிரித்தறிய முடியாத நிலையில், பொதுச்சமூகம் நம்பிக்கை இழந்து, அரசியல் அகற்றப்பட்ட சூழலில் (Depolarization) நேரம் பார்த்துக் கொண்டிருந்த பெரும்பான்மை மதவாதிகள் மேற்படி கட்சி ஆட்சி முறை உருவாக்கியிருந்த அவலங்களுக்கு மருந்தாக மதவாதத்தை அல்லது வகுப்புவாதத்தை முன்வைத்த பெரும்பான்மை மதவாதிகள், மதவாதத்தை மருந்தாக்கினர். இன்றைய மதவாத அரசியலின் உச்சபட்ச வளர்ச்சியில் நம் மக்கள் இதனோடு இணைந்து வாழப் பழகிக்கொண்டனர்.

சனநாயகம், சமயச் சார்பின்மை எனும் பெரு விழுமியங்கள் இன்று மக்களிடம் பேசுபொருளாக (Discourse) இல்லை. இந்து மதம், இந்திய தேசம், இந்து  தேசியம் என்பனவே இன்றைய அரசியல் உரையாடல்கள். இன்று தமிழ்நாட்டு மண்ணில் பெருவாரியானோர் அரசியல் அகற்றப்பட்ட நிலையில் வாழும் இளையோரையும், அவர்தம் உடனடித் தலைவரையும் சங்கப் பரிவாரங்களும் கொள்கை உள்ளீடற்ற நடிகரைக் கபளீகரம் செய்து கொள்ளும் என்பதே உண்மை. சமூகத்தின் எந்தப் பகுதியினரையும் அபகரிக்கும் பண்புடைய சங்கப் பரிவாரங்கள் நடிகர் தலைவரை அபகரிக்கையில், இவர் பின்னே செல்லும் கூட்டமும் அதே வழியைத் தமதாக்கிக்கொள்ளும்.

தமிழ்நாட்டு மக்கள் தேர்தல் மூலம் பா...வை அப்புறப்படுத்தியிருக்கலாம். இந்நச்சு தமிழ்நாட்டில் ஆழமாக வேர் பதித்து வருகிறது. சங்கப் பரிவாரங்கள் மம்தாவை நன்றாகவே வீழ்த்தியுள்ளன. இந்துத்துவத்தின் மாற்றுக்கருத்தியல் என்று போற்றப்பட்ட பொதுவுடைமை வங்க மாநிலத்தில் துடைத்தெறியப்பட்டுவிட்டது.

அரசியல் அறிவு எதுவுமற்ற ஒரு கூட்டம் தமிழ்நாட்டை ஆளும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் நிலையில், அரசியல் அகற்றப்பட்ட இக்கூட்டம் மதவாத, பிரிவினைவாத அமைப்புகளிடமிருந்து நம்மை எப்படிக் காப்பாற்றப் போகிறது?

news
சிறப்புக்கட்டுரை
மனிதக் குரல்களையும் முகங்களையும் பாதுகாத்தல் (60-ஆம் உலகத் தகவல் தொடர்பு நாளுக்காகத் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் செய்தி)

சென்ற இதழ் தொடர்ச்சி...

இயன்றதோர் உடன்பாடு

நம் அனைவரையும் பாதிக்கும் கண்ணுக்குப் புலப்படாத எண்ணற்ற சக்திகளுக்குப் பின்னால், ஒருசில நிறுவனங்களின் தோற்றுநர்கள் மட்டுமே ‘2025-ஆம் ஆண்டின் மனிதர்கள்என்றும், செயற்கை நுண்ணறிவின் சிற்பிகள் என்றும் அறியப்படுகின்றனர். இது மிகவும் கவலைக்குரியதாகும். ஒரு சந்தையில் மிகக் குறைவான எண்ணிக்கையிலான பெரிய நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் (oligopolistic).

இவை மட்டுமே நெறிப்பாட்டு முறைகள்மீது (Algorithms) ஆதிக்கம் செலுத்தினால், நம்மையே அறியாமல் மனித நடத்தையையும், மனித வரலாற்றையும், திரு அவையின் வரலாற்றையும் மாற்றி எழுதக்கூடிய சூழ்நிலை உருவாகலாம். இந்நிலையில், புதிய எண்ணிமக் கண்டுபிடிப்புகளை நிறுத்துவது நமது பணியல்ல; மாறாக, இவற்றின் தெளிவற்ற நிலையை அறிந்து, அவற்றைச் சரியாக வழிநடத்துவதே நமது பணியாகும். மனிதர்களின் பாதுகாப்பிற்காகக் குரலெழுப்ப வேண்டியது நம் அனைவரின் கடமை. இதனால் நமது உடன் உழைப்பாளிகளாக இந்த எண்ணிமச் சாதனங்களை ஒருங்கிணைக்க முடியும். இந்த உடன்பாடு பொறுப்புடைமை, ஒத்துழைப்பு, பயிற்சி ஆகிய மூன்று தூண்களின்மீது எழுப்பப்படுவதாகும்.

முதலில் பொறுப்புடைமை

சமுதாயத்தில் நமக்குள்ள ஈடுபாட்டிற்கேற்ப பொறுப்புணர்வு என்பது நேர்மை, வெளிப்படைத் தன்மை, மனவலிமை, தொலைநோக்குப் பார்வை, அறிவைப் பகிர்ந்துகொள்ளும் கடமையுணர்வு, தகவல் அறிந்துகொள்ளும் உரிமை ஆகியவற்றை உள்ளடக்கியது. எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் நமது தனிப்பட்ட பொறுப்புணர்வைத் தட்டிக்கழிக்க இயலாது என்ற பொது விதியைக் கடைப்பிடிப்பது இன்றியமையாதது.

இணையத்தின் பல்வேறு தளங்களில், அவற்றைக் கட்டுப்படுத்தும் நிலையில் இருப்பவர்கள் தங்கள் இலாபத்தை அதிகப்படுத்தும் நோக்கத்தை மட்டும் கொண்டிராமல், ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளின் நலனைக் கருத்தில் கொள்வதுபோல, பொதுநலனைப் பேணும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படவேண்டும். செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்குபவர்களும் மேம்படுத்துபவர்களும் வெளிப்படைத் தன்மையுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் செயல்பட அழைக்கப்படுகின்றனர். இதனால் தாம் உருவாக்கும் நெறிப்பாட்டு முறையின் மாதிரிகளுக்கும் அவற்றின் பயனாளிகளின் அறிவார்ந்த சம்மதத்தைப் பெற்றிருப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருத்தல் அவசியம்.

மனித மாண்பைப் போற்றும் வகையில் நாடுகளின் சட்டமியற்றுவோரும், பன்னாட்டு ஒழுங்குமுறை அமைப்புகளும் பொறுப்புணர்வுடன் செயல்படுதல்வேண்டும். பொருத்தமான விதிமுறைசார் சட்டங்களை இயற்றுவதன் மூலம் தனி மனிதர்களைப் பாதுகாக்க இயலும். இதனால் பயனாளர்கள் தானியங்கி உரையாடிகளுடன் உணர்வுப்பூர்வமாக ஒன்றிப்போதல் தடுக்கப்படவும், உண்மைக்குப் புறம்பான தீய வழிகளில் செலுத்தும் உள்ளடக்கங்களை நெறிப்படுத்தவும் இயலும். இதனால் தவறான, ஏமாற்றும் உருவகப்படுத்துதலையும் தவிர்க்கலாம். இவ்வாறு உள்ளடக்கத்தின் உண்மைத் தன்மையைப் பாதுகாக்கலாம்.

ஊடகத் தொடர்பாடலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், சில வினாடிகள் கூடுதலாகக் கவனத்தை ஈர்க்க வடிவமைக்கப்பட்ட நெறிப்பாட்டுமுறைகள் உண்மையைத் தேடுவதையே இலக்காகக் கொண்ட தொழில்சார் மதிப்பீடுகளை விஞ்சி நிற்க அனுமதிக்க இயலாது. கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் ஈடுபாடு கொள்வதைத் தேடாமல், ஒரு செயலைத் துல்லியமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் செய்வதாலேயே பொதுநம்பிக்கை உருவாகும். மனிதர்கள் நேரடியாகத் தாமே உருவாக்கிய உள்ள டக்கத்தையும், செயற்கை நுண்ணறிவினால் உருவாக்கப்பட்ட அல்லது கையாளப்பட்ட உள்ளடக்கத்தையும் தெளிவாக வேறுபடுத்திக் காட்டவேண்டும். பத்திரிகையாளர் மற்றும் ஊடக உள்ளடக்கங்களை உருவாக்குவோரின் பணிகளில் படைப்பாளர் உரிமையும் இறையாண்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். தகவல் என்பது ஒரு பொதுச்சொத்து. ஆக்கப்பூர்வமானதும் அர்த்தமுள்ளதுமான பொதுச் சேவை, தெளிவில்லாத மழுங்கல் தளமாக (Opacity) இருக்கமுடியாது. மாறாக, மூலங்களில் வெளிப்பாட்டுத் தன்மையைக் கொண்டதாகவும் உயர்ந்த தரமுடையதாகவும், இதில் தொடர்புடைய அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருத்தல்வேண்டும்.

இரண்டாவது ஒத்துழைப்பு

நாம் எல்லாருமே இப்பணிகளில் ஒத்துழைக்க அழைக்கப்பட்டுள்ளோம். எண்ணிமக் கண்டுபிடிப்புகள், செயற்கை நுண்ணறிவின் நிர்வாகம் ஆகியவற்றின் சவால்களை எந்த ஒரு துறையும் தனியாகச் சமாளிக்க முடியாது. எனவே, இதற்குத் தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் பங்கேற்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள், சட்டமியற்றுவோர், ஊடகக் கல்வியாளர், ஆராய்ச்சியாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், பயிற்சியாளர்கள் ஆகிய எல்லாரும் இணைந்து அறிவு சார்ந்த, பொறுப்புள்ள எண்ணிமக் குடிமக்களை உருவாக்கப் பாடுபடவேண்டும்.

மூன்றாவதாக ஊடகக் கல்வி

சிறந்த ஊடகக் கல்வி பின்வருவனவற்றை நோக்கமாகக் கொண்டிருத்தல் அவசியம்:

விமர்சன ரீதியான சிந்திக்கும் ஆற்றலை வளர்த்தல்.

உள்ளடக்கத்தின் மூலங்களின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துதல்.

கிடைக்கும் தகவல்களைத் தேர்ந்தெடுத்தலுக்கான உள்நோக்கங்கள் ஏதேனும் உள்ளனவா என்று அறிந்து மதிப்பீடு செய்தல்.

இதில் ஈடுபட்டுள்ள உளவியல் நுட்பங்களைப் புரிந்துகொள்ளுதல்.

நமது குடும்பங்கள், குழுக்கள், கழகங்கள், எண்ணிம ஊடகங்களைப் பயன்படுத்துவது பற்றிய பொறுப்புள்ள தகவல்தொடர்பு கலாச்சாரத்தை உருவாக்குதல்.

மேற்கூறியவற்றை அடைய நமது கல்வித் திட்டத்தில் எல்லா நிலைகளிலும் ஊடகக் கல்வி, செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி ஆகியவற்றைச் சேர்ப்பது மிகவும் அவசியமும் அவசரமுமாகும். சில பொதுநிறுவனங்கள் இதனைச் செய்துவருவது குறிப்பிடத்தக்கது. கத்தோலிக்கக் கிறித்தவர்கள் என்ற முறையில் நாம் இம்முயற்சிக்குப் பங்களிப்பது மிக முக்கியமான கடமையாகும். இதனால் தனி மனிதர்களும், குறிப்பாக இளைஞர்களும், விமர்சன உணர்வுடன் சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொண்டு, சுதந்திரமாக முடிவெடுக்கும் ஆற்றலில் வளரவும் இந்த ஊடகக் கல்விசார் முயற்சிகள் வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு கல்வி முன்னெடுப்பாக மாறவேண்டும்.

இப்பயிற்சிகள் வயதுவந்தோருக்கும், சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படவேண்டும். இதனால் வேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்ப மாற்றங்களிலிருந்து இவர்கள் பின்தங்கிவிடாமலும் விடுபட்டுப் போகாமலும் இருக்க வாய்ப்புகள் உருவாகும்.

ஊடக அறிவு, தகவல் அறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கல்வி ஆகியவை செயற்கை நுண்ணறிவின் செயல்பாடுகளால் மனிதர்களின் தனிப்பண்புகளைப் பிற உயிரினங்கள் அல்லது உயிரற்ற பொருள்கள்மீது சாற்றிக் கூறும் மனிதப் பண்பேற்றல் (anthropomorphizing) என்ற செயல்முறைகளுக்கு ஒத்துப்போகும் போக்கைத் தவிர்க்கப் பெரிதும் உதவும். இதனால் துல்லியமற்றதும் தவறானதுமான செயற்கை நுண்ணறிவின் செயல்பாடுகளின் மூலங்களை இனங்கண்டு, அவற்றை வெளியிலிருந்து மதிப்பீடு செய்யவும் இக்கல்விப் பெரிதும் உதவும். இவ்வாறு செயற்கை நுண்ணறிவை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தும் ஆற்றலைப் பெறமுடியும். இக்கல்விமுறை ஒவ்வொருவரின் சிறந்த தனியுரிமையையும், அவர்களது தனிப்பட்ட தகவல்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இதனால் ஒவ்வொருவரிலும் சிறந்த விழிப்புணர்வையும், பாதுகாப்புக்கான அளவீடுகளையும், மேல்முறையீடு செய்யும் வாய்ப்புகளையும் ஒவ்வொருவரும் அறிந்துகொள்வர்.

செயற்கை நுண்ணறிவைத் திட்டமிட்டுப் பயன்படுத்த நாம் அனைவரும் அறிந்திருப்பது அவசியம். இவ்வாறு நமது சுய உருவத்தை அதாவது, நமது முகங்களையும் குரல்களையும் பாதுகாக்க முடியும். இதனால் நமது முகங்களையும் குரல்களையும் தவறான உள்ளடக்கங்களிலிருந்தும் தவறான நடத்தையிலிருந்தும் நம்மை விடுவித்துக்கொள்ள முடியும். இவ்வாறு மனிதர்களின் அனுமதியின்றி அவர்களின் தனியுரிமையில் ஊடுருவி அவர்களின் தனித்துவத்தைச் சீர்குலைக்கும் எண்ணிம மோசடிகள், இணைய மிரட்டல்கள், போலிப் பதிவுகள் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

தொழில்புரட்சிக்குப் பிறகு புதிய கண்டுபிடிப்புகளால் தோன்றிய புதிய வளர்ச்சிக்குப் பதிலளிக்க அடிப்படைக் கல்வி உதவியதுபோல, தற்போதைய எண்ணிமப் புரட்சிக்குப் பதிலளிக்க மனிதநேயக் கலாச்சாரக் கல்வியுடன், எண்ணிமக் கல்வியறிவும் தேவைப்படுகிறது. இதனால் நெறிப்பாட்டு முறைகள், நாம் உலகை எப்படிப் பார்க்கிறோம் என்பதையும், செயற்கை நுண்ணறிவுப் பணிகளை ஒருதலைப்பட்சமாகப் பார்க்கும் பண்பையும், நமது இடுகைகளில் உள்ள உள்ளடக்கங்களை எந்தத் தொழில்நுட்பம் நிர்ணயிக்கின்றது என்பதையும், செயற்கை நுண்ணறிவின் பொருளாதாரக் கொள்கைகள் என்ன என்பதையும், அவை எவ்வாறு மாறும் என்பதையும் அறிந்து செயல்பட இந்த எண்ணிம ஊடகக் கல்வி மிகவும் அவசியம்.

மக்களுக்காக நாம் மீண்டும் பேச நமக்கு முகங்களும் குரல்களும் தேவை. தொடர்பாடல் என்னும் கொடை, மனித இனத்தின் ஆழமான உண்மை என்பதைப் பேணுதல் அவசியம். எல்லாத் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும் இதை நோக்கியே செயல்படவேண்டும். இந்தச் சிந்தனைகளை வடிவமைக்கும்போது, மேற்கூறிய இலக்குகளை அடைய உழைக்கும் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். பொதுநலனுக்காக ஊடகத்துறையில் உழைக்கும் அனைவருக்கும் ஆசி வழங்குகிறேன்.

(வத்திக்கானில் 2026 - ஆம் ஆண்டு சனவரி மாதம் 24-ஆம் நாள் சலேசு நகர் புனித பிரான்சிசின் நினைவுநாளில் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களால் வழங்கப்பட்ட செய்தி)

news
சிறப்புக்கட்டுரை
தேர்தல் 2026: விளையாட்டுப் பிள்ளைகள்

மூத்த பத்திரிகையாளர் மணி, “சபிக்கப்பட்டவர்கள்தான் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பேசுவார்கள்என்றார். நாம் சபிக்கப்பட்டவர்கள்; அதனால் தேர்தல் முடிவுகளைப் பற்றிப் பேசலாம்.

தமிழ்நாடு சிறப்பு வாய்ந்த இன வரலாறு, தாய்மொழி, தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு கொண்ட மாநிலம். ஆனால், அவர்கள் தேசிய நீரோட்டத்திலிருந்து விலகித் தனித்து இருக்கிறார்கள். இனமானம், மொழி, மண் பெருமை பேசுகிறார்கள். நாகரிக, கல்வி அறிவு கொண்ட தனித்த சமூகமாக உலகளவில் உயர்கிறார்கள். அவர்களைக் கட்டுக்குள், ஆரிய அடிமைத்தனத்தில் பூட்டவேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிடுகிறது. விளாடிமிர் லெனின், “ஒரு தேசத்தை அழிக்க விரும்பினால், முதலில் அத்தேச இளையோரின் சிந்தனைகளை அழியுங்கள்என்றார். தமிழ்நாட்டு இளையோரின் மூளையை ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டுச் சலவை செய்துவிட்டது.

2026 சட்டமன்றத் தேர்தலில் காவிகள்திராவிட எதிர்ப்பு அலைவீசியதாக மகிழ்ச்சியில் குதிக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, ‘துக்ளக்சோ, குருமூர்த்தி, ‘தினமலர்இராம. சுப்பையர் ஆகியோரை வைத்துதமிழகத்தில் மாற்றம்வேண்டும்என நச்சுப் பிரச்சாரத்தைத் தொடங்கியது. ‘தின மலர், ‘தினமணிதற்போதுதினத்தந்திவரை பொய்ச் செய்திகளைத் தினம்  மக்கள் மனத்தில் விதைத்தது. சமூக ஊடகங்கள், புகழ் பெற்றோர், நடிகர்கள் வாயிலாக நச்சுப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்தது.

சிறுபான்மை மக்கள், திராவிடத்தின் பாதுகாப்பு அரணாக நின்றார்கள். திராவிடம் 60 ஆண்டுகள் வெல்ல முடியாத சக்தியாக எழுந்தது. நாக்பூர் பீடம்  எம்.ஜி.ஆர். அவர்களைப் போல ரஜினிகாந்த் அவர்களை முன்னிறுத்தியது. திட்டம் தோல்வியுற நடிகர் விஜய் அவர்களுக்குஒய்பிரிவு பாதுகாப்பு அளித்தது. கேட்ட விசில் சின்னம் கொடுத்தது. கரூர் பெருந்துயர சி.பி.. விசாரணைச் செய்தியினைக் கசிய விடாமல் இரகசியம் காத்தது. நடிகர் விஜய் அவர்களைச் சுற்றி வளைத்தது.

1991-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இராஜீவ் காந்தி படுகொலையால் தி.மு.. எதிர்ப்பு அலை வீசியது. அன்று 29.9% பெற்ற தி.மு.. இரண்டு தொகுதிகளில் வென்றது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்த அலையும் இல்லை. தி.மு.. கூட்டணி 31.57% வாக்குகளைப் பெற்று,  74 தொகுதிகளைப் பெற்றுள்ளது. தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் முதல் முறையான தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. இங்கு திராவிட எதிர்ப்பு அலை வீசவில்லை. நடிகர் விஜய் ஆர்.எஸ்.எஸ். வீசிய மாயவலைக்குள் மாட்டிக்கொண்டார் என்பதே நிதர்சனம், உண்மை.

ஒரு நண்பர் முகநூலில் பதிவிடுகிறார்: ‘தமிழ்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு, வீடுகளும் பொதுச்சொத்துகளும் அழிந்து போனால் நமக்கு என்ன பதை பதைப்பு ஏற்படுமோ, அப்படியான பதைபதைப்புதான் இன்றைய தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது சனநாயகத்தின்மீது நம்பிக்கைகொண்ட ஒருவனாக எனக்கு ஏற்படுகிறது.” இது சரியான, ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவான உணர்வுதான்.

மாற்றம்என்ற ஒற்றை வார்த்தையைத் திரும்பத் திரும்பக் கூறி மக்கள் மனத்தில் பதிய வைத்தார்கள். ‘மாற்றம் வேண்டும்என்று கூறுபவர்களுக்கு, ‘அந்த மாற்றம் என்ன?’ என்ற அடிப்படைத் தெளிவுகூட தெரியவில்லை. அவர்களிடம் அது குறித்த சிந்தனைகள், செயல்பாடுகள் இல்லை. போகிற வாக்கில், பொத்தாம் பொதுவாக வாரிசு அரசியல், ஊழல், சட்டம்-ஒழுங்கு சரியில்லை, பெண்களுக்குப் பாதுகாப்பு  இல்லை எனத் தொடர் பிரச்சாரங்களை வைத்தார்கள். தமிழ்நாடு பிரதமர் மோடியின் மதுராந்தகப் பிரச்சார மேடையில் இருந்தோரில் பாதிக்கும் மேற்பட்டோர் (அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், பியூஸ் கோயல்) வாரிசு அரசியல்வாதிகள் என்பதில் மிகையில்லை.

1976-இல் தி.மு.. மீது 28  ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சர்க்காரியா விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ‘2ஜிஅலைக்கற்றை விவகாரத்தில் ரூபாய் 1.76 இலட்சம் கோடி அரசுக்கு இழப்பு என 2010-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு, . ராஜா, கனிமொழி கைது என நீண்டது. முடிவில் சர்க்காரியாவும், நீதிபதி .வி. ஷைனியும்குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லைஎனத் தீர்ப்பு எழுதினர். இந்தியாவிலேயே பா...வுக்குப் பெருந் தலைவலியாக உள்ள தி.மு..வை மோடி, அமித்ஷா ஆகியோர் ஊழல்வாதிகள் என்கிறார்கள். விசாரணை அமைப்புகளைக் கையில் வைத்துள்ள பா... பேசுவதோடு சரி, செயலில் எதுவும் செய்வதில்லை.

சட்டம்-ஒழுங்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் நடமாட்டம், உபயோகித்தல் என்பதில் பா... ஆளும் 16  மாநிலங்களைவிட தமிழ்நாடு குறைந்த நிலையில் உள்ளது. இதை ஒன்றிய  அரசின் புள்ளி விவரங்களிலிருந்து அறியலாம். இது குறித்த பொது விவாதத்திற்கு யாரும் வரமாட்டார்கள். போகிற போக்கில் அடிப்படை ஆதாரமற்ற விவரங்களை வாரி விடுவார்கள். தி.மு.. கூட்டணிக்கு எதிராக இருந்த ஐந்து அணிகளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கட்டுக் கதையைத் தேர்தல் களத்தில் பிரதிபலித்தார்கள்.

தமிழ்நாடு தனிநபர் வருவாய், வாழ்க்கைத் தர உயர்வு, தொழில் வளர்ச்சி, மருத்துவக் கட்டமைப்பு, பள்ளிக்கல்வி உயர்வு, உயர்கல்வி வளர்ச்சி என்பதில் வளர்ந்த நாடுகளுக்கு இணையான வளர்ச்சி திட்டமிட்டு மறைக்கப்பட்டது. மத நல்லிணக்கம், சமூக நல்லிணக்கம் என்பதில் அடங்கிய பொது அமைதி மறைக்கப்பட்டது. ‘மாற்றம்என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். தன் சித்து விளையாட்டைத் தமிழ்நாட்டில் நடத்திவிட்டது.

நடிகர் விஜய் அவர்களுக்கு வாக்களித்த பலரின் பதில் இவ்வாறாக இருந்தது:  “இவர்களே மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமாஒரு புதியவருக்கு வாக்களித்து, வாய்ப்பளித்துப் பார்ப்போம்என்கின்றனர்.

ஆட்சி அதிகாரம் என்பது சோதனை ஓட்டம் என்பதாக அவர்களின் சிந்தனை இருக்கிறது. விலைமதிப்பில்லாத வாக்கின் அருமை தெரியவில்லை. தங்கள் பிள்ளைகளைப் போலவே, பெற்றோரும் விளையாட்டுப் பிள்ளைகளாக இருக்கிறார்கள். வேட்பாளர் பெயர், ஊர், பின்னணி தெரியாது; குற்றப் பின்னணியில் .தி.மு.. கட்சிக்கு அடுத்த நிலையில் .வெ.. கட்சி வேட்பாளர்கள் இருப்பதாகத் தேர்தல் ஆணையப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் 108 பேர் இக்கட்சியில்திடீர்வேட்பாளரானதும் காலக் கொடுமை!

தேர்தல் முடிவுகளில் சென்னை உள்பட்ட பெருநகரங்களில் .வெ.. கட்சி சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. கிராமப்புறத் தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதிகளில் தி.மு.. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. உதாரணமாக, திருப்பூர் தெற்கில் நகர்ப்புற வாக்காளர்களால் .வெ.. கட்சி ஏறக்குறைய 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறது. மாறாக, கிராமப்புற வாக்காளர்கள் அதிகமுள்ள திருப்பூர் வடக்கில் இக்கட்சி ஏறக்குறைய 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிகொள்கிறது. .தி.மு..வின் அசைக்க முடியாத கோட்டை செல்வி ஜெயலலிதா அவர்களும் சில  நேரங்களில் நிற்க நினைத்த வெற்றி வாய்ப்புள்ள தொகுதியில் .தி.மு. இன்று தோற்கிறது.

எந்த அலையும் வீசாத தேர்தல் என்றாலும், வாக்காளர்கள் மனநிலைமாற்றிப் பார்ப்போம்என்ற மாயநிலையில், சினிமா மோகத்தில் இருந்தது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தமிழ்நாட்டு மக்களின் தனித்த பண்பாட்டையும், சமத்துவ சமதர்ம கோட்பாட்டையும், ‘எல்லாம் அனைவருக்கும்என்ற சிந்தனையையும், மழுங்கடிக்கப் போட்ட செயல்திட்டம் பாதியளவு நிறைவேறிவிட்டது. அறிவார்ந்த சிந்தனைகளுக்குத் தேவை இல்லை. ஆக்கப்பூர்வமான விவாதங்கள் வேண்டவே வேண்டாம். கொள்கை, கோட்பாடுகள், சித்தாந்தங்கள், செயல்திட்டங்கள் எதுவுமில்லை. ஆளுமை வழிபாடு, தனிநபர் துதிபாடல், பிம்ப அரசியல், ஆர்ப்பரிப்புகள், குழு  மனப்பான்மை கொண்டாட்டங்கள் எனத் தொடர்ந்த தேர்தல் திருவிழா இது. தேர்தல் களத்தில் .வெ.. கட்சியினர் ஆடிய ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் இப்புதிய முதல்வரின் ஆட்சியிலும்  தொடருமா என்பதே நம் கேள்வி.

news
சிறப்புக்கட்டுரை
21-ஆம் நூற்றாண்டின் முதல் AI போர் (உலகம் உன் கையில்! – 22)

போரில் முதல் 24 மணி நேரத்தில் மற்றொரு நாட்டின் 1000 இலக்குகளைப் பாரம்பரிய உத்திகளால் துல்லியமாகத் தாக்க முடியும் என்பது இயலாத காரியம்; ஆனால், இது அமெரிக்கா-ஈரான் போரில் சாத்தியமானது. கடந்த நூறு ஆண்டுகளாகவே தானியங்கி ஆயுதங்கள் குறிப்பிட்ட அளவில் உதாரணமாக, இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி நாட்டின்பஸ் குண்டுகள் (Buzz bombs), கடல் கண்ணி (mines) வெடிகள், ஏவுகணைகள், இஸ்ரேல் நாட்டின் தற்காப்பு இரும்புக் கலசம் (Iron Dome) அமெரிக்காவின் பேட்ரியாட் (Patriot) வான் ஏவுகணை என்று பல வடிவங்களில் பயனிலிருந்து வருகின்றன.

உலக வரலாற்றில் பல போர்கள் நடந்தாலும், 2026-ஆம் ஆண்டின் வளைகுடா போர் வேறுபட்டிருந்ததை மக்கள் கண்டு வியந்து கலக்கமுற்றதை அறிவோம். இதன் வேகமும் துல்லியமும் பின்னணியில் ஏதோ ஒரு கருவியின் செயலாற்றல் இருப்பதைப் பார்க்கவும் முடிந்தது. இலக்குகளைத் தீர்மானித்தல், குறிவைத்தல், உளவாற்றல் (intelligence) மற்றும் உடனுக்குடன் போர் அழிவுகளைக் கணித்தல், தொடர்ச்சியாக இயங்கும் ஆற்றல், போரை நடத்தும் தலைமைக்கு இலக்குகளுக்கேற்ப ஆயுதங்களைத் தேர்ந்தெடுத்தல் என்பவைகளில் .. கருவிகள் பங்காற்றின என்பதே இதன் இரகசியம்.

இலக்குகளை அறிய மனிதன் தேவையில்லை

2024-26 உக்ரைன்-இரஷ்யப் போரில் ட்ரோன்களின் பயன்பாட்டிற்குப் பஞ்சமில்லையென்பதைப் பார்த்தோம். ஆயிரம் கி.மீ. தூரத்திலுள்ள இரஷ்ய எண்ணெய் கிணறுகள், எரிவாயுக் கட்டமைப்புகளை உக்ரைன் ட்ரோன்கள் .. மூலம் மனிதத் துணையில்லாமல் தானாகவே பயணித்துத் தாக்கியது இதற்குச் சான்றாகக் கூறப்படுகிறது.

இன்றைய இராணுவத் தொழில்நுட்ப வளர்ச்சியை 2003-இன் ஈராக் போருக்கு ஒப்பிட்டும் பேசப்படுகிறது. அன்று ஓர் இலக்கைத் தாக்குவதற்கு 2000 உளவு அமைப்புகளின் வேலையை இன்றைய ஈரான் போர் முனையில் அமெரிக்காவின்எபிக்ஃயூரி (Epic FUR) .. துணையோடு இருபது இராணுவ வீரர்களைக் கொண்டு செயல்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

.. கருவிகளின் அபார வேகம்

கண்ணிமைக்கும் நேரத்தில்என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். பாரம்பரியப் போர் முறையில் பல வாரங்களெடுப்பதை .. செயலாற்றல் தரவுகள் அடிப்படையில், மனிதர் நினைக்கும் (speed of thought) வேகத்தை மிஞ்சும் அளவிற்கு உள்ளதாகவும், இயந்திரங்களின் இயக்கத்தை மனிதர் அப்படியே ஏற்றுக்கொள்ளும்படியாக  இரப்பர் ஸ்டாம்ப் (Rubber stamp) செய்வது போன்று கூடயிருக்கலாம் என்கின்றனர் வல்லுநர்கள்.

ஈரான் போரில் அமெரிக்காவின் கை மேலோங்கியிருப்பதற்கு இராணுவத்தில் ..யின் பயன்பாடே முக்கியக் காரணமென்று கூறப்படுகிறது. மற்றொரு சிறப்பு என்னவென்றால், ஈரான்-அமெரிக்கப் போரின் வீடியோக்கள் .. தொழில்நுட்பத்தினால் (AI - Generated Fake Contents) போலியான ஒரு வருட பழைய போட்டோக்களையும் தயாரித்து, சில நிமிடங்களில் சமூக ஊடகங்களில் பணமாக்கப்படுவது உண்மைக்குப் புறம்பானது மட்டுமன்றி, மக்களிடையே குழப்பத்தையும்   ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதனைடிஜிட்டல் உளவியல் பயங்கரவாதம் (Digital psychological terrorism) என்கின்றனர்.

போரில் சைபர்-..

நேரடிப் போர் மோதலுக்கு முன் (Kinetic operations) களநிலவரத்தை நிதானிப்பதில் இன்றைய சைபர் தொழில்நுட்பம் பெரும்பங்கு வகிக்கிறது. சைபர் என்பது ஓர் ஆயுதமல்ல; சூழலைப் பற்றிய தகவல்களை வடிவமைத்து, போரை முன்னெடுத்துச் செல்ல உதவும் தொழில்நுட்பம்.

அண்மைக்காலப் போர்களில், போர் தொடங்குமுன் எடுக்கும் முக்கிய யூகங்களுக்கு .. சைபர் உளவு, ஹேக்கிங் (espionage and hacking) நுட்பங்கள் உதவின என்றும் கூறப்படுகிறது. போக்குவரத்து சந்துமுனை கேமிராக்கள் முதல் கணினி இணையதளம் மற்றும் கைப்பேசி கோபுரங்கள் வரை சேகரிக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் துல்லியமான தாக்குதல், அச்சுறுத்தல்களைத் தவிர்த்தல் என்ற போரின் போக்கிற்கு சைபர் .. தொழில்நுட்பத் திறனே காரணம் என்கின்றனர்.

முழுமையான செயல்பாட்டை இயந்திரங்களிடம் விடலாமா?

.. ஒரு தொழில்நுட்ப அமைப்பாக மனிதர் முடிவுகளை எடுக்க உதவும் கருவி. இது மனிதத் திறனுக்கு மாற்று அல்ல என்பதுதான் அனுபவம். .. மூலம் கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் புதிய தரவுகளை உருவாக்கி முன்கணிப்பை மேம்படுத்தும் திறன்பெற்றது. இதில்கணித்தல்என்பது முடிவுகளை எடுக்க உதவும் ஒரு பகுதியாகவே விளங்குகிறது. இவ்வாறு எடுக்கும் முடிவுகளால் ஏற்படும் விளைவுகளைச் சந்தித்தல், அதற்கான தீர்வுகளை அறிதல் என்பவைகளுக்கு .. பொறுப்பேற்க இயலாத நிலையில், மனிதரின் முக்கியத்துவம் ஈடு செய்ய முடியாததாகப் பார்க்கப்படுகிறது.

.. அழைத்துச் செல்லும் பாதை

இன்று ..யின் ஒவ்வொரு மேம்பட்டத் திறனும் ஏதோ ஒருவகையில் இராணுவத் தேவைக்கென்பதாகவே பார்க்கப்படுகிறது. .. தொழில்நுட்பம் என்பது தரவுகள் சேமிப்பு முதல் சோதனை வரை மக்களின் நடைமுறைத் தேவைக்கு மட்டுமின்றி, இராணுவப் பயன்பாட்டிற்கும் என்றாகி விட்டது.

தொடக்கக் காலத்தில் வணிகத் தேவைக்கென்று அன்றாடத் தரவுகள் அடிப்படையில் உருவெடுத்தவையே நாம் பயன்படுத்தும் உலகப் புகழ்பெற்ற மாடல்களான சேட்ஜிபிடி (openAI), க்ளாட் (Anthropic), லாமா (Meta) என்பவை. ஆனால், இன்று இவை இராணுவத் தேவைகளுக்கு மாற்றியமைக்கப்பட்டு வருவது நமக்குத் தெரிவதில்லை. உலகளவில் பயனில் உள்ள கணினிப் பார்வை (computer vision) தொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் மேம்படுத்தப்பட்டு, இராணுவத் தேவைக்கேற்ப மேலும் உயர்தர வடிவில் விஞ்ஞானம் மாற்றியமைத்துத் தருகிறது.

இன்று நடக்கும் அமெரிக்கா - ஈரான் போர் செயலாற்றலில் பன்மடங்கு வேறுபட்டிருப்பதன் காரணம் .. தொழில்நுட்பமே என்கின்றனர். நிமிடத்திற்கு நிமிடம் தரையின் நிகழ்வுகள் அனைத்தும் செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள் மூலம் துல்லியமாகப் படம்பிடித்துப் போரை நடத்த உதவியதன் விளைவுகளை நாமே காண முடிந்தது. இதே தொழில்நுட்பம் மீண்டும் மக்களைக் கண்காணிக்கப் (surveillance) பயனில் வருவதும், இதின் பின்னிருப்பது இலாபமீட்டும் பெரும் நிறுவனங்கள் என்பதும் நடைமுறை.

இவ்வாறு .. தொழில்நுட்பம் உலகளவில் மேலோங்கி வளர்வது, ஒட்டுமொத்த உலகச் சமுதாயத்திற்கும், தனிமனிதச் சுதந்திரத்திற்கும் ஆபத்தை விளைவிக்குமா என்ற அச்சம் எழுகிறது.

news
சிறப்புக்கட்டுரை
வாய்ப்பா? சவாலா? (இளமை ஒரு சவால்! - புதிய தொடர் – 01)

முனைவர் மி. நோயல் அவர்கள் காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வு நிறுவனத்தில் (CECRI) முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். மின்வேதியியல் துறையில் ஒரு நூலையும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் உலக அளவில் வழங்கியதோடு, பல மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். மேலும், இவர் அறிவியல் செய்திகளையும், அறிவியல் சிந்தனைகளையும் தமிழ் மக்களிடையே கொண்டு செல்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தமிழில் 20-க்கும் மேற்பட்ட அறிவியல் மற்றும் வழிகாட்டுதல் நூல்களை எழுதி, தமிழ் அறிவியல் இலக்கிய உலகில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். தற்போது நமதுநம் வாழ்வுஇதழில், இளையோருக்காகஇளமை ஒரு சவால்எனும் புதிய தொடர் கட்டுரையை எழுத முன்வந்துள்ளார். பன்முகத் திறமை கொண்ட முனைவர் மி. நோயல் அவர்களை அன்புடன் வாழ்த்தி வரவேற்கிறோம்.                                                            

முதன்மை ஆசிரியர்

இன்றைய இளமை ஓர் அருமையான வாய்ப்பா? சவால்கள் நிறைந்த ஒரு வாழ்க்கைப் போராட்டமா? இந்தக் கேள்விகளுக்கான விடை - அதை நாம் யாரிடம் கேட்கிறோம்? என்பதைப் பொறுத்தது.

பழைய தலைமுறை, ‘அந்தக் காலத்தில் எங்களுக்கெல்லாம் என்ன வாய்ப்பு வசதி இருந்தது? பள்ளிக்கூடமா? போக்குவரத்தா? மின்சாரமா? தொலைக்காட்சியா? கைப்பேசியா? எங்களுக்கெல்லாம் கிடைக்காத எத்தனையோ வசதி வாய்ப்புகள் இன்று கிடைக்கின்றன. இன்றைய இளையோருக்கு என்ன? அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தினால் அவர்கள் எவ்வளவோ சாதிக்கலாம்?’ என்று அலுத்துக்கொள்ளும்.

இதில் உண்மை இல்லாமல் இல்லை; அவர்களது எதிர்பார்ப்புகளும் நியாயமானவைதான். இன்றைய இளைய தலைமுறையினரும்கூட இன்றைய நல்வாய்ப்புகளை உணர்ந்துதான் இருக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியாகவும் தன்னம்பிக்கையோடும் வளர்கிறார்கள். புதுப்புது உடையலங்காரம்சொகுசான வாகனங்கள், கைப்பேசிகள், அவற்றில் இடைவிடாமல் தொடரும் கலகலப்பான உரையாடல்கள், நாலுபேர் கூடுமிடத்தில் நடக்கும் ஆட்டம்பாட்டம், கொண்டாட்டம், விருந்து, வாணவேடிக்கை...!

இன்றைய இளைய தலைமுறையினரின் குதூகலத்திற்குக் கொஞ்சமும் தடை இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் தங்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகளை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளவும் செய்கிறார்கள். ஆனால், இந்த வாய்ப்புகளைத் தாண்டி அவர்கள் சந்திக்கப்போகிற சவால்கள் அவர்களுடைய கவனத்தைத் தேவையான அளவு ஈர்த்திருக்கிறதா? அவற்றை எப்படி நாம் எதிர்கொள்ளப்போகிறோம்? அந்தச் சவால்களைச் சந்திக்க இன்று நாம் என்ன செய்யவேண்டும்? நம்மை நாமே எப்படித் தயாரித்துக்கொள்ளவேண்டும்?

இன்றைய வாய்ப்புகளை நாம் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறினால், நம் வருங்காலம் என்ன ஆகும்? முழுச் சந்தைமயமாகிவிட்ட உலகம் எப்படி நம்மை ஓரங்கட்டிவிட்டுப் போகும்?

பலர் தேய, சிலர் மட்டும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறும் உலகம் இது. இன்றைய போட்டிச்சூழலில் தள்ளாடும் பலரை நாம் தினமும் பார்க்கிறோம். வருங்காலத்தில் நாமும் இவர்களைப் போல் பரிதவிக்கப் போகிறோம். இல்லை... இல்லை... இன்றே நம் வருங்காலச் சவால்களைச் சந்திப்பதைப் பற்றிச் சிந்திக்கப் போகிறோமா?

இன்றைய இளமை சந்திக்கும் சில சவால்களைப் பட்டியலிட்டுக்கொள்வோமா?

எல்லாவற்றையும் அவசரகதியில் அனுபவித்து விடவேண்டும் என்று முட்டிமோதிக்கொள்கிறோமா? நிதானம் காட்டுகிறோமா?

பெற்றோரின் துணையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு நம் காலில் நிற்கப் பழகுகிறோமா? பெற்றோருக்குச் செல்லமான சுமையாக மாறிப்போகிறோமா?

பணம், வெற்றி என்ற நோக்கங்களை மட்டும் குறிவைத்து ஓடும் பந்தயக் குதிரைகளாக வளர்கிறோமா? மனித உறவுகளை மதிக்கும் வாழ்க்கைப் போட்டிக்கு நம்மைத் தயாரித்துக் கொள்கிறோமா?

நம் பருவப் பயணத்தில் எல்லைகளையும் கட்டுப்பாடுகளையும் மதிக்கப் பழகுகிறோமா? வெம்பிப் பழுத்து வீணாகும் கூட்டத்தில் கலந்து கரைந்து போகிறோமா?

கிடைக்கின்ற வேலைகளையும் வாய்ப்புகளையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, படிப்படியாக முன்னேற முயல்கிறோமா? அது சரியில்லை, இது சரியில்லை என்று புலம்பியே காலந்தள்ளப் போகிறோமா?

பணம், பதவி, உல்லாசம், உயரம் என்று ஓயாமல் உச்சாணிக் கொம்பை எட்டிப்பிடிக்க முயன்று வாழ்வைத் தொலைக்கப் போகிறோமா? உறவையும் வாழ்வையும் மதிக்கவும் நேசிக்கவும் கற்றுக்கொள்ளப் போகிறோமா?

நம்முடைய வருங்கால வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து மற்றவர்களுக்குச் சுமையாக இருக்கப் போகிறதா? சுமைதாங்கியாக இருக்கப் போகிறதா?

நாளைய இலக்கை நோக்கி இன்றே நம் வாழ்க்கைப் பாதையைச் சீரமைக்க நம்மால் முடியும்நம்மால் மட்டும்தான் முடியும்! நாம் மாறப் போகிறோமா? பிடிவாதமாகச் சரிவுப் பாதையில் பயணிக்கப் போகிறோமா?

இந்த நம்முடைய இளமைச் சவால்களைப் பற்றி நாம் கொஞ்சம் சிந்திப்போம். தொடர்ந்து சிந்திப்போம்; வாழ்க்கை ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய சவால்களையும் கொண்டுவரும், வாய்ப்புகளையும் கொண்டுவரும். என் சவால்களைச் சந்திப்பேன்; வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுவேன்.